வெள்ளி, 25 மே, 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 11]
சனி, 12 மே, 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 10]
வழிகெட்ட கொள்கை என்று பீஜெயால் வர்ணிக்கப்படும் சலபிக் கொள்கை, அரபு நாட்டு சல்லிக்காக புனிதமான கொள்கையாக பரிணாமம் பெற்ற அதிசயம்.சனி, 5 மே, 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 9]
- எஸ்.எஸ்.யூ. சைபுல்லாஹ் ஹாஜா.
- ஹாமித்பக்ரி.
- அப்துல் ஜலீல் மதனீ.
- சம்ஷுல்லுஹா.
- முஹம்மது அலி ரஹ்மானி.
- ஜே.எஸ்.ரிபாயி.
- டி.எம்.ஜபருல்லாஹ்.
- அப்துரரஹ்மான் பிர்தவ்சி.
- எம்.ஐ.ஸுலைமான்.
- எம்.எஸ்.ஸுலைமான்.
- அலிஅக்பர் உமரி.
- இக்கல்லூரியின் பாடத்திட்டம் ஜமாஅத் தான் தீர்மானிக்கும்.
- இக்கல்லூரியில் மாணவர் சேர்க்க; நீக்கம் ஜமாஅத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
- கணக்கு வழக்குகளில் ஜமாஅத் தலையிடும்.
- வெளிநாட்டு நிதி ஜமாஅத் பெயரால் பெறக்கூடாது என்றால், ஜமாஅத் நிர்வாகிகள் தனிக்கடை போட்டு வசூலிக்கலாமா? அதற்கு பீஜே துணை நின்றது அவரது கொள்கைக்கு முரணில்லையா? பீஜேயின் இந்த வழிகாட்டுதல் அடிப்படையில், அவரது ஜமாஅத் நிர்வாகிகள், வெளிநாடுகளில் ஜமாஅத்திற்காக இல்லாமல் துணை நிறுவனங்களை ஏற்படுத்தி வசூலித்துக் கொள்ளலாமா?
- ஜமாஅத் சம்பளம் கொடுக்க கூட முடியாமல் திணறியபோது, ஹாமித்பக்ரி இஸ்லாமிய கல்விச் சங்கத்திற்காக வசூல் வேட்டையாடினார் என்று குமுறிய பீஜே, அதே காலகட்டத்தில் ஒரு பெருந்தொகையை இஸ்லாமிய அறக்கட்டளைக்கு பெற்றுத்தந்தது முரண்பாடில்லையா?
- வெளிநாடுகளில் நாமாகப் போய் வசூலிக்கக் கூடாது. வெளிநாட்டினர் தாமாக தந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்றால், இதுவரை எத்தனை கோடிகள் வெளிநாட்டவரிடம் இருந்து ஜமாத்திற்காக வாங்கப்பட்டது என்று பீஜே சொல்லுவாரா?
- இஸ்லாமிய அறக்கட்டளைக்கும், அதன் பெயரால் இயங்கும் இஸ்லாமியக் கல்லூரிக்கும், அதன் சொத்துக்களுக்கும் ஜமாத்திற்கோ, தனக்கோ சம்மந்தமில்லை என்று கூறுவரா? அதன் சொத்து ஆவணங்களை ஜமாஅத் வாங்கி வைத்திருப்பது எதற்காக என்று கூறுவாரா?
- ஜமாத்திற்கு சம்மந்தமில்லை என்று பீஜே கூறினால், சென்னை களஞ்சியம் பெண்கள் கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த இரு தவ்ஹீத் ஜமாஅத் தாயிகளை உடனடியாக நிறுத்தியது போல், இஸ்லாமியக் கல்லூரியின் தலைவர், முதல்வர், ஆசிரியர்கள் என வியாபித்திருக்கும் தனது ஜமாத்தினரை உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேறச் சொல்லுவாரா?
- இஸ்லாமியக் கல்லூரி சரியென்றால், அதில் தனது ஜமாஅத் நிர்வாகிகள் அங்கம் வகிக்கலாம் என்றால், அதற்காக வெளிநாட்டு நிதியும் பெறலாம் என்றால், காயல்பட்டினம் இஸ்லாமிய கல்விச் சங்கமும் சரிதான் என்றும், அதற்காக வெளிநாட்டு நிதி பெறலாம் என்றும், அதை ஹாமித்பக்ரி மீதான காழ்ப்புணர்வில் தான் எதிர்த்தேன் என்றும் பீஜே சொல்லுவாரா?
- ஹாமித்பக்ரியின் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் இன்றும் அண்ணனின் அபிமானியாக இருக்கும் அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி உள்ளிட்ட அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தாயிகள் சிலர் சம்பளம் பெற்றது எதற்காக என்று பீஜே சொல்லுவாரா?
- இலங்கை வெளிநாடு இல்லை என்றோ, அந்த நாட்டின் பணம் அன்னிய நிதியில்லை என்றோ, தனது கொள்கை அரபு நாட்டு நிதிக்கு மட்டும் தான் என்றோ பீஜே சொல்லுவாரா?
புதன், 2 மே, 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 8]
ஞாயிறு, 22 ஏப்ரல், 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [திருத்தப்பட்டது][part 7]
- திர்மிதிக்காக இஸ்லாமிய கல்விச் சங்கத்திடம் ஒரு லட்சரூபாய் ராயல்டி வாங்கியது உண்மையா? இல்லையா?
- ஜக்கரியாவிடம் 5 ,47 ,085 [ ஐந்து லட்சத்து நாற்ப்பத்தி ஏழு ஆயிரத்து என்பத்தி ஐந்து] வாங்கியது உண்மையா? இல்லையா?
- இந்த தொகை யார் யாருக்கு எவ்வளவு விநியோகிக்கப்பட்டது என்ற வெள்ளையறிக்கை வெளியிடத் தயாரா?
- ஹாமித் பக்ரி வழங்கிய ஷேர் ஹோல்டர்கள் பட்டியலை வெளியிட்டு, இன்னினாருக்கு நாங்கள் பணத்தை வழங்கிவிட்டோம்; இன்னின்னாரை ஹாமித்பக்ரி ஏமாற்றி விட்டார் என்று வெளியிடவேண்டும்.
- திர்மிதி வெளியான சில நாட்களில் ஹாமித்பக்ரி நீக்கப்பட்டார் என்பதற்கு திர்மிதி வெளியான நாளையும், ஹாமித்பக்ரி நீக்கப்பட்ட ஆதாரத்தையும் வைத்து நிரூபிக்கத் தயாரா?
- ஹாமித் பக்ரியிடம் அபூதாவூதுக்காக லுஹாவும், திர்மிதிக்காக பீஜேயும் வாங்கிய தொகையையும், திர்மிதி விற்று ஜக்கரியா தந்த தொகையையும் மறைத்த நோக்கம் என்ன?
செவ்வாய், 17 ஏப்ரல், 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 6]
ஞாயிறு, 15 ஏப்ரல், 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 5]
வெள்ளி, 6 ஏப்ரல், 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 4]
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் பீஜேயை நோக்கி,
- இன்று பீஜேயின் மேலாண்மைக்குழு தலைவராக வீற்றிருக்கும் சம்சுல்லுஹா ரஹ்மானி.
- இன்று பீஜேயின் மேலாண்மைக்குழு உறுப்பினராக வீற்றிருக்கும் எம்.எஸ்.ஸுலைமான்.
- இன்று பீஜேயின் தணிக்கைக் குழு தலைவராகவும், வருங்கால செயல் தலைவராகவும் அரியணை ஏறவுள்ள எம்.ஐ.ஸுலைமான்.
வியாழன், 29 மார்ச், 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 3]
- வெளிநாட்டு நிதி பெறக்கூடாது என்ற பைலாவையுடைய, பீஜேயும் அங்கம் வகிக்கும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் மவ்லவி ஹாமித்பக்ரி, அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் மவ்லவி சைபுல்லாஹ் ஹாஜா ஆகிய இருவர், வெளிநாட்டு நிதி பெறும் நோக்கில் குவைத் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
- இருவரும் குவைத்தில் உள்ள ஒரு நிறுவனத்தை அணுகியுள்ளனர்.
- அதற்காக மவ்லவி இஸ்மாயில் ஸலபி தங்கியிருந்த அறையில் திட்டங்கள் தீட்டியுள்ளனர்.
- தனக்கும் தவ்ஹீத் ஜமாஅதுக்கும் சம்மந்தமில்லாத இஸ்லாமிய கல்விச்சங்கம் என்ற பெயரில், அதன் அங்கத்தவர்களான ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் வெளிநாட்டி நிதி பெறும் நோக்கில் ஆலோசனை செய்ததையும், அதற்காக இலங்கையில் பரிந்துரைக் கடிதம் பெற்றதையும், வெளிநாட்டிற்கு நிதி பெறும் நோக்கில் கடிதங்கள் அனுப்பியதையும் ஒப்புக்கொண்டுள்ள பீஜே, இந்த மூன்று விஷயங்கள் பீஜேவுக்கு தெரிந்தே நடந்ததா? அல்லது பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டரா? என்று சொல்லவேண்டும்.
- [வெளிநாட்டு நிதி பெற முயற்சிக்கும்] இந்த விவரங்கள் சில நிர்வாகிகளுக்குத் தெரிந்தபோது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக்குழுவில் விவாதித்தோம். அப்போது அனைவரும் இது சரியான நடைமுறை அல்ல என்று சுட்டிக்காட்டினார்கள். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளாக உள்ளவர்கள் வேறு பெயரிலும் இதுபோன்ற உதவிகளைப் பெறக்கூடாது என்று முடிவு செய்தோம். இதன் பின்னர் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டனர் என்று பீஜே சொல்வது உண்மையானால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய் என்று பீஜே சொல்வாரா?
- ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டது உண்மை என்றால், தவ்ஹீத் ஜமாஅத் முடிவை ஏற்று அவர்கள் வெளிநாட்டு நிதி பெறும் முடிவை கைவிட்டு விட்டனர் என்று பீஜே சொன்னது பொய்யா?
- நிர்வாகக்குழு முடிவுக்குப் பின்னரும் ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டது உண்மை என்றால், நிர்வாக்குழு முடிவை மீறிய அவர்கள் மீது பீஜே எடுத்த நடவடிக்கை என்ன?
- ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் வெளிநாட்டு நிதி பெற எடுத்த முயற்ச்சிகள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக்குழு முடிவால் கைவிடப்பட்டது என்றால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய்யாகி விடுகிறது. அப்படியானால், அபூதாவூத் மொழியாக்கம் ஷேர் பிடிப்பதற்காக இவர்கள் தனிப்பயணம் மேற்கொண்டார்கள் என்று பீஜே சொல்வாரா?
- ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் வெளிநாட்டு நிதி பெற எடுத்த முயற்ச்சிகள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக்குழு முடிவால் கைவிடப்பட்டது என்றால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய் என்றால், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குவைத் சென்ற அந்த இரு தாயிகள் பெயரை சொல்லத் தயக்கம் ஏன்?
வெள்ளி, 23 மார்ச், 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 2]
ஞாயிறு, 18 மார்ச், 2012
அயல்நாட்டு நிதியும்; அப்பட்டமாக பொய் சொல்லும் பீஜேயும்!
சனி, 17 மார்ச், 2012
சொந்த செலவில் கட்டிய பள்ளிவாசல்கள்; பீஜே அன்றும் இன்றும்!
சனி, 10 மார்ச், 2012
வெளிநாட்டு நிதி; பீஜே அன்றும்-இன்றும்!
- மக்களுக்கும் ஜமாத்திற்கும் தொடர்பு இல்லாமல் போய்விடும்.
- மக்களுக்கு கணக்கு காட்ட மறுக்கும் நிலை ஏற்படும்.
- கணக்கற்ற பொருளாதாரம் காரணமாக ஆடம்பர ஜமாஅத்தாக மாறிவிடும்.
- தாவா பணிகளை விட எப்படி வெளிநாட்டினரை ஏமாற்றி பணம் சேர்க்கலாம் என்பதே குறிக்கோளாகப் போய்விடும்.
- அரசாங்கத்தின் தேவையற்ற கெடுபிடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
- பண உதவி செய்யும் நிறுவனங்களின் கொள்கைக்கு எதிராக வாய்திறக்கக் கூடாது என்ற புதுப் பாலிசி எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
வெள்ளி, 2 மார்ச், 2012
குர்'ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்; பீஜே அன்றும்-இன்றும்!
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
மார்க்கத்தை தூய வடிவில் சொல்லக் கிளம்பிய அறிஞர் பீஜே அவர்கள், தனது ஆய்வின் உச்சகட்டமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் சிலவற்றை பட்டியலிட்டு இவைகள் குர்'ஆனுடன் மோதுகின்றன என்றும், வேறு சில காரணங்கள் மற்றும் உவமானங்களை கூறி நிராகரிப்பதை அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்'ஆனோடு ஒரு போதும் மோதாது என்பதும், குர்'ஆனோடு முரண்படுவது போல் தோற்றமளித்தாலும் அந்த ஹதீஸை சரியான வகையில் விளங்க வேண்டுமே தவிர, ஹதீஸை ஒருபோதும் நிராகரிக்கக் கூடாது என்பதுதான் அறிஞர் பீஜேயின் முந்தைய நிலைப்பாடக இருந்தது. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பீஜெயிக்கு அன்று இருந்த உறுதியை அறிய பல ஆதாரங்கள் இருந்தாலும் குறிப்பாக ஒன்றைத் தருகிறோம்.
பிப்ரவரி 95அல்ஜன்னத் மாத இதழில், ''இணைவைக்கும் இமாமைப் பின்பற்றி தொழுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அறிஞர் பீஜே எடுத்து வைத்த ஹதீஸில் 'ஏனெனில் இமாம் உங்களுக்கும் உங்கள் இறைவனுக்கும் மத்தியில் தொடர்பாளர்களாக உள்ளனர்'' என்ற வரியும் உள்ளது. இதையொட்டி, முஹம்மது கஸ்ஸாலி என்ற சகோதரர் ஏப்ரல் 95 அல்ஜன்னத் இதழில் கேள்வி எழுப்புகிறார். அவர் தனது கேள்வியில், 'இமாம் நமக்கும் இறைவனுக்கும் தொடர்பாளராக உள்ளார் என்ற ஹதீஸை வெளியிட்டுள்ளீர்களே! இது புரோகிதத்தை காட்டவில்லையா? என்று கேட்க, அவருக்கு பதிலளித்த பீஜே, ''புரோகிதத்தைக் காட்டுகிறது என்று அந்த ஹதீஸை நிராகரிக்கவேண்டும் என்கிறீர்களா? புரோகிதத்தை காட்டாத வகையில் விளங்கவேண்டும் என்று சொல்கிறீர்களா? என்று கேட்டுவிட்டு அடுத்து பீஜே சொல்வதை கவனியுங்கள். ''ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமனதாக இருக்கும் போது அதை நிராகரிக்க காரணங்களை தேடவேண்டாம்' என நேத்திய்யடியாக சொல்லி, ஹதீஸை குர்'ஆனுக்கு முரண்படாமல் விளங்க வேண்டுமே தவிர நிராகரிக்க கூடாது என்று ஆணித்தரமாக கூறுகிறார் அறிஞர் பீஜே.
பீஜேயின் இன்றைய நிலை என்ன? ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று அவரே ஒருபுறம் ஒப்புக்கொள்கிறார். மறுபுறம் அதை நிராகரிக்க அவரே காரணங்களை தேடுகிறாரா இல்லையா? இறைவனுக்கும்-மனிதர்களுக்கும் இடைத்தரகர்களாக இமாம்கள் திகழ்கிறார்கள் என்ற பாரதூரமான அர்த்தம் தரும் ஹதீஸை கூட, புறக்கணிக்காமல் பக்குவமாக விளங்கவேண்டும் என்று அன்று சொன்ன பீஜே, இன்று எடுத்தேன் கவிழ்த்தேன் என ஹதீஸ்களை படுகுழியில் தள்ளுகிறாரா இல்லையா? குர்'ஆனுக்கு முரண்படுகிறது என்று இவராலும் இவரது தரப்பு அறிஞர்களாலும் கடும் ஆய்வுக்கு[!] பின் எழுதப்பட்ட ''ஹதீஸ்கள் குர்'ஆனுக்கு முரண்படுமா? என்ற நூலில் சில ஹதீஸ்களை பட்டியலிட்டு இவைகள் குர்'ஆனோடு மணிக்கு பல்லாயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதுவதால் குர்'ஆன் சேதமடையக் கூடும். எனவே இந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அதை நிராக்ரிகக்வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தாரே! இதிலாவது பீஜெயால் உறுதியாக நிலைத்து நிற்க முடிந்ததா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது.
மேற்கண்ட நூலில், குர்'ஆனுடன் மோதுவதாக மேற்கோள் காட்டப்பட்ட, பீஜெயாலும் அவர் தரப்பு அறிஞர்களாலும் பல மேடைகளில் முழங்கப்பட்ட ஹதீஸ் இன்று சரியான ஹதீஸாக 'ஞானஸ்தானம்' பெற்றுள்ளதை கீழே படியுங்கள்;
மிகச் சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் சொல்கிறோம்.
10. பயணத்தொழுகை
அல்லாஹ் தொழுகையை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும் பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (350)
இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது பிரயாணத்தொழுகை எந்த விதமான மாற்றத்திற்கும் உள்ளாகாமல் தொழுகை கடமையாக்கப்பட்ட காலத்திலிருந்து இரண்டு ரக்அத்தாகவே இருந்தது என்றக் கருத்தைத் தருகிறது. ஆனால் திருக்குர்ஆன் பயணத்தொழுகையைப் பற்றி பேசும்போது நான்கு ரக்அத்துகளிலிருந்து இரண்டு ரக்அத்துகளாக பயணத்தொழுகை சுருக்கப்பட்டது என்று கூறுகிறது.
நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக்கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.
அல்குர்ஆன் (4 : 101)
முழுமையான ஒன்றிலிருந்து தான் சுருக்கமுடியும். பயணத்தில் தொழுகையை சுருக்குவதாக இருந்தால் முதலில் நான்கு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்று சட்டம் இருந்திருக்க வேண்டும். இந்த நான்கு ரக்அத்துகளிலிருந்து இரண்டாக பயணத்தில் தொழுகை குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் பயணத்தொழுகையை குறிப்பிடும் போது நான்கிலிருந்து சுருக்கப்பட்டது என்று கூறாமல் தொழுகை கடமையாக்கப்பட்ட காலத்திலிருந்தே பயணத்தொழுகை எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இரண்டுரக்அத்துகளாகவே இருப்பதைப் போன்று கூறியுள்ளார்கள். எனவே இவர்கள் கூறும் கருத்து குர்ஆனிற்கு முரண்பாடாக இருப்பதால் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறினோம்.
இந்த ஹதீஸை சரிகாணுபவர்கள் இதற்கு கூறிய விளக்கத்தையும் நாம் ஆராய்ந்ததன் மூலம் கிடைத்த விளக்கத்தையும் வைத்துப் பார்த்தால் இந்த ஹதீஸை முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. இவர்கள் கூறும் விளக்கத்திற்கு முறையான ஆதாரங்கள் இருப்பதால் இந்த விளக்கத்தை நாம் ஏற்றுத் தான் ஆகவேண்டும்.
சத்தியத்தை தெரிவது தான் நம்முடைய நோக்கமே தவிர நாம் கூறிய கருத்துக்களை எப்படியாவது சரிகாண வேண்டும் என்று நாம் பிடிவாதம் பிடிக்கமாட்டோம். எனவே ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை பின்வரும் முறையில் முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழும் போது கடமையானத் தொழுகை இரண்டு ரக்அத்துகளாக இருந்தது. மதீனாவிற்கு அவர்கள் வந்தவுடன் நான்கு ரக்அத்துகளாக மாற்றப்பட்டது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(மக்காவில்) தொழுகை இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பின் நான்கு ரக்அத்துகளாகக் கடமையாக்கப்பட்டது. மேலும் பிரயாணத் தொழுகை மட்டும் முன்பு கடமையாக்கப்பட்டிருந்தவாறே (இரண்டு ரக்அத்தாகவே இருக்கட்டுமென்று) விட்டுவிடப்பட்டது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (3935)
மதீனாவிற்கு வருவதற்கு முன்பு மக்காவில் இரண்டு ரக்அத்துதான் கடமையாக்கப்பட்டிருந்தது என்றக் கருத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் சொல்லவில்லை. அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்களும் இந்தக் கருத்தை கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை லுஹர் தொழுகையை இரண்டு இரண்டாகத் தான் தொழுதுவந்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஜுஹைஃபா (ரலி)
நூல் : சஹீஹு இப்னி ஹிப்பான் பாகம் : 6 பக்கம் : 143
தொழுகையை இரண்டாக சுருக்கிக் கொள்ளுவதற்கு அனுமதியளிக்கும் வசனம் மதீனாவில் இறங்கியது என்றக் கருத்தை இப்னுல் அசீர் தவ்லாபீ மற்றும் சுஹைலீ போன்ற அறிஞர்கள் பதிவுசெய்துள்ளார்கள் .
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த உடன் தொழுகை நான்காக மாற்றப்பட்டது. இதன் பிறகு பயணத்தில் இரண்டு ரக்அத்தை சுருக்கிக்கொள்ளலாம் என்று வசனம் இறங்கியது. இதனால் ஊரில் நான்கு ரக்அத்துகளாகவும் பிரயாணத்தில் இரண்டு ரக்அத் தொழுகவும் கடமையாக்கப்பட்டது. இறுதியில் முடிவாக்கப்பட்ட இந்த நிலையைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் முரண்பாடு வராது.
தொழுகை நான்கு ரக்அத்துகளாக மாற்றப்ட்டது. பின்பு வசனம் இறங்கியதால் இரண்டாக குறைக்கப்பட்டது என்ற விளக்கம் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் இல்லாததால் அது குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறினோம். ஆனால் இந்த விளக்கம் வேறு ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகிவிட்டதால் முரண்பாடு எதுவும் இல்லாமல் இதை விளங்கிக்கொள்ள முடியும்.
முதலில் இரண்டு ரக்அத் கடமையாக இருந்தது. மதீனாவிற்கு வந்த உடன் நான்காக மாற்றப்பட்டதால் முன்பிருந்த தொழுகையை விட இரண்டு ரக்அத் அதிகமாக்கப்பட்டது. இதன் பிறகு பயணத்தில் குறைத்துக்கொள்ளும் படி வசனம் இறங்கியதால் மதீனாவில் இருக்கும் போது பயணத்தில் இரண்டு ரக்அத் தொழவேண்டும் என்ற பழைய சட்டம் இறுதியாக அப்படியே வைக்கப்பட்டுவிட்டது என்பதே ஆயிஷா (ரலி) அவர்களுடைய கூற்றின் விளக்கம்.
முரண்பாடு நீங்கிவிட்டதால் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளலாம்.




