வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

இயக்க வெறியா? இஸ்லாமிய நெறியா?



அதிமுக-வின் ஆட்சியை திமுக தொன்டர்கள் விமர்சித்தாள் அதை கண்டு அதிமுகவினர் திமுகவை எதிர் விமர்சனம் என்ற பெயரில் நாகரீகம் அற்று ஆபாச வார்தைகளை கொண்டு, குடும்பத்தை இழுத்து விமர்சிப்பதில்லை(பெரும்பாலும்),

ஆனால் மார்க்க விசயத்தில் ஒரு செயல் சர்ச்சைக்குள்ளானால் அதை ஒரு விமர்சனமாக முன் வைக்கப்பட்டால் தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்து சொல்லி ஒருவர் விமர்சித்தால் (அவர் எப்படி விமர்சித்தாலும் சரியே) எதிர்தரப்பினர் அதை விளக்கி தாண்கொண்ட நிலைப்பாட்டை அழகான முறைவில் விளக்கி சொல்ல வேன்டும், அதை அவர் ஏற்றாலும் ஏற்க்காவிட்டாலும் நம்முடைய கடமை விளக்கியாகி விட்டது, அதுதான் நாகரீகம், மீறியும் அந்த விசயத்தில் தர்க்கம் செய்தால் அவர்களிடம் சலாம் சொல்லி ஒதுங்கிவிடுவது மார்க்க பண்பும்கூட,

மக்கத்து காபிர்கள் நபிகளாரை இழிவுப்படுத்தும் போதும் சத்திய சஹாபாக்களை கொடுமை படுத்திய போதும், பதிலுக்கு அவர்களை இழிவு படுத்தவோ கொடுபைப்படுத்தவோ அல்லது அவர்கள் குடும்பங்களை அசிங்கப்படுத்தவோ இல்லை, தன்நிலையை விளக்கிவிட்டு பொறுமையாக களத்தில் நின்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்கள், என்பது இஸ்லாம் காட்டித்தந்த நபிகளாரின் சரித்திர போதனைகள் மூலம் பார்க்கின்றோம்,

ஆனால் நபிவழியை நாங்கள் மட்டுமே உறுதியாகவும், சரியான அர்தத்திலும் அச்சு பிசகாமல் அடிக்கு அடி பின்பற்றுகிறோம் என்று சொல்லும் ததஜ சகோதர்களிண் எதிர் விமர்சன விளக்கத்திண் கருத்துக்கள் மட்டும் ஏனோ அவ்வளவு அநாகறீகமாகவும், காது கூசும் வார்தைகளையும்,ஆபாச கருத்துக்களும், தனிமனித அந்தரங்க அசல்களையும், முகம் சுழிக்கும் எழுத்துக்களையும் கொண்டுள்ளதோ? அதிலும் குறிப்பாக பலர் முகவரியே இல்லாமல் வந்து சொல்லும் ஆபாச அர்ச்சனைகள் "அஸ்தகபிருல்லாஹ்"

நாம் கேட்பது இதுதான், நீங்கள் சொல்வதுதான் சரி எனும் போது, நீங்கள் மட்டுமே மார்க்கதை, நபிவழியை, சரியான முறையில் மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறீர்கள் எனும் போது சரியானதை மட்டுமே சொல்கின்றோம் எனும் போது நபிகளார் போதித்த அந்த சரியான தனிமனித கண்ணியம், தீய பேச்சை தவிர்த்தல், தீய சொற்களை தவிர்த்தல், என்ற அந்த இஸ்லாமிய அடிப்படை நற்பண்புகளை மட்டும் சரியாக எடுத்து கொள்வதில்லையே அது ஏண்?

இஸ்லாத்தை பற்றி முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் ஆபாசமாகவும் அநாகரீகமாகவும் விமர்சிக்கும் போது வராத கோபம், தாங்கள் சார்ந்திருக்கும் ஜமாத்தை பற்றியோ, தலைவர்கள் பற்றியோ ஒரு முஸ்லிம் விமர்சித்தால் மட்டும் எங்கிருந்து வருகிறது? இதை இயக்க வெறி என்பதா? இல்லை இஸ்லாமிய நெறி என்பதா? சிந்தியுங்கள் அவர் அவர் குழிக்கு அவரவர்தான் பதில் சொல்ல வேன்டும், என்பதை உள்ளத்தில் ஆழமாக பதிய வைத்தாலே போதும் இறையச்சம் நம்மை சூழ்ந்து கொள்ளும்!!

#இதையும்_ஆபாச_எழுத்தால்_விமர்சிப்பேன்_என்று_வந்தால்_அவர்களுக்கு_சலாம்_சொல்லி_அமைதிகாப்பதை_தவிர_வேறுவழியில்லை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக