சனி, 22 அக்டோபர், 2011

பெண்கள் மஹ்றமான ஆண் துணையின்றி, ஹஜ் செய்யலாம் என்ற புதுமை ஃபத்வாவுக்கு மறுப்பு!

 
பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.

புஹாரியின் 3595 வது ஹதீஸை ஆதாரமாக காட்டி, ஒரு பெண் "மஹ்ரம்" இல்லாமல் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என நவீனவாதிகள்  வழங்கும் ஃபத்வா குறித்து, மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்களின் விரிவான விளக்கம்;

கேள்வி :-

பெண்கள் மஹ்றமான ஆண் துணையின்றி ஹஜ்-உம்றாச் செய்யலாமா?


பதில்:-

இது விரிவாக விளக்கப்பட வேண்டிய அம்சமாகும். ஹஜ் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் அனைவரிடமும் இருக்கின்றது. இது வரவேற்கத் தக்கதுதான். எனினும், ஹஜ்ஜை முறையாகச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமானவர்களிடம் இல்லையென்பது வருந்தத் தக்க விடயமாகும்.

ஹஜ் யார் மீது கடமையென்பது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;

"..மனிதர்களில் அதற்குச் சென்று வரச் சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும்.." (3:97)

எனவே, ஹஜ்ஜுக் கடமையைச் செய்யும் சக்தியுள்ளவர் மீதுதான் ஹஜ் கடமையாகும். பயணத்திற்கு மஹ்றமான ஆண் துணை இல்லாத பெண்ணுக்கு ஹஜ் கடமையில்லை. அப்படி அவர் தன் மீதுள்ள கடமையை நிறைவு செய்ய வேண்டுமென்றால் மஹ்றமான ஓர் ஆண் துணையை அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கும் முடியாவிட்டால் தனது ஹஜ்ஜைத் தனது நெருங்கிய உறவுடைய ஒரு ஆண் மூலம் நிறைவேற்ற அங்கீகாரமுள்ளது.

ஒரு பெண் தனியாகவோ, நம்பிக்கையான மஹ்றமல்லாத ஆண் துணையுடன், நல்லொழுக்கமுள்ள பல பெண்களுடன் கூட்டுச் சேர்ந்தோ ஹஜ் செய்யலாம் என்பதற்குக் கூறப்படும் ஆதாரங்கள் குறித்தும் அது பற்றிய உண்மை விளக்கம் என்ன என்பது குறித்தும் சுருக்கமாக நோக்குவோம்.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;

"எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!" என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் "நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!" என கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இப்னு உமர்(ரழி) அவர்களின் பின்வரும் அறிவிப்பை அவதானியுங்கள்!

"எந்தவொரு பெண்ணும் தன்னுடன் மஹ்ரம் துணையில்லாமல் மூன்று நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம்." (புகாரி, முஸ்லிம்)

மஹ்ரமின்றி ஒரு நாள் கூட பயணிக்கக் கூடாது என்ற தடையைக் கொண்டுள்ள பல ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் காணப்படுகின்றன.

பெண்ணின் பிரயாணத்தில் மஹ்ரம் துணை இருப்பது ஜிஹாதுக்குச் செல்வதை விட முதன்மையானது என்பதனை முன்னர் நாம் பார்த்த இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கும் ஹதீஸ் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. நபியவர்களின் அந்த முடிவுக்கு மேலாக முடிவெடுப்பதற்கு எமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஒரு பெண்ணோ, அல்லது பல பெண்களோ (திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட) மஹ்ரமான ஆண்கள் துணையின்றித் தனிமையில் ஹஜ் பயணமோ, அல்லது வேறு பயணமோ செல்லக் கூடாது எனக் கூறப்படுகின்றது.

இதற்குத் தவறான வியாக்கியானம் செய்யும் சில அறிஞர்கள் "நம்பகமான பெண்கள் பலருடன் சேர்ந்து ஒரு பெண் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்!" என வாதிடுகின்றனர். ஒரு பெண் தனிமையில் பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுவது போன்று ஹஜ் செய்யச் செல்லலாமா? முடியாதா? என்ற வாதப் பிரதிவாதங்கள் மார்க்க அறிஞர்கள் வட்டத்தில் காணப்பட்டாலும் "மஹ்ரம்" என்ற ஆண் துணையுடன் ஹஜ் செய்வதையே நபி(ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி இருப்பதைப் பார்க்கின்றோம். ஒரு பெண் மஹ்ரம் இன்றி ஹஜ் செய்ய முடியாது என்பதே நாம் சரியான கருத்தாகக் கொள்ளத் தக்கதாகும்.

ஐயம்:- ஹஜ் குழுவினர் சிலர், தமது ஹஜ் குழுவுடன் ஒருவரை அதிகரித்துக்கொள்வதற்காக, தமது வசதிக்காகப் பெண்கள் பலருடன் ஒரு பெண் செல்வதில் தவறில்லை என்கின்றனர்.

குர்ஆன், ஸுன்னாவைப் பின்பற்றும் சிலர் ஒரு படி மேலே சென்று ஒரு சில அறிஞர்கள் தனிமையாக ஹஜ் செய்யலாம் என்பதற்கு அதிய்யே! அல்ஹீரா என்ற நகரைப் பார்த்திருக்கிறாயா? என்று நபி[ஸல்] கேட்க,  நான் அதைப் பார்த்ததில்லை. அது பற்றி கேள்விப்பட்டுள்ளேன்!" எனக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் "நீ நீண்ட காலம் வாழ்ந்தால் தனது ஒட்டத்தில் பயணம் செய்யும் ஒரு பெண் அந்த அல்ஹீராவில் இருந்து கஃபா வரை வந்து (தன்னந் தனியே) தவாஃப் செய்வாள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அவள் அஞ்ச மாட்டாள்." (புகாரி ) எனக் கூறிய அதிய் பின் ஹாதிம்(ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஆதாரமாகக்கொண்டு ஒரு பெண் ஹஜ்ஜுக்காகத் தனிமையில் பயணம் மேற்கொள்வதில் தவறில்லை என்கின்றனர்


விளக்கம்: நம்பகமான பெண்களுடன் செல்லலாம் என்றால் ஏன் அந்த நபித் தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜை நிறைவேற்றும் படி நபி(ஸல்) அவர்கள் பணித்தார்கள்? நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஆண்களையும், பெண்களையும் விடவும் இந்தக் காலத்து மக்கள் நம்பிக்கையிலும், நாணயத்திலும் உயர்ந்தவர்களா?

அதீ பின் ஹாதிம்(ரழி) அவர்களின் ஹதீஸ் அச்சம்-பீதியற்ற ஒரு காலத்தை அதுவும் முன்னறிவிப்பு ஒன்றைக் குறிக்கின்றது. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நடைபெற்ற வழிப்பறிக் கொள்ளை, வறுமை ஆகியவற்றை முறைப்பாடு செய்த போதே இந்த முன்னறிவிப்பைக் கூறினார்கள். தனது காலத்தைக் கூட அச்சம், பீதி, வறுமை அற்ற காலம் எனக் கூறவில்லை.

மாற்றமாக அதை ஒரு முன்னறிவிப்பாகவே கூறினார்கள். அது அதி(ரழி) அவர்களின் வாழ்நாளிலேயே நடந்தேறியது. இதை உண்மைப்படுத்தும் வகையில் அதன் அறிவிப்பாளரான அதிய்(ரழி) அவர்கள் இது பற்றிக் குறிப்பிடுகின்ற போது, "ஒரு பெண் ஒட்டகத்தில் ஏறி அந்த அல்ஹீராவில் இருந்து கஃபாவரை வந்து (தனிமையாக) தவாஃப் செய்வதைக் கண்டேன். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அவள் அஞ்ச மாட்டாள்!" எனக் குறிப்பிடுகிறார்கள். (புகாரி)

"இப்படியான காலத்துடன் கொலைகளும், கொள்ளைகளும் மலிந்து காணப்படும் இந்தக் காலத்தை ஒப்பிடலாமா?" என்றால், அனைவரும் "இல்லை!" என்றே கூறுவர். உலகில் அச்சமற்ற நாடுகளில் முன்னணி நாடு என போற்றப்படும் சவூதி அரேபியாவில் கூட கணவனுடன் ஹஜ் செய்யச் சென்ற பெண்கள் பலர் கடத்திக் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்றால் நடந்தேறிய முன்னறிவிப்பைக் கொண்டு பெண்கள் தனிமையில் ஹஜ் செய்யலாம் என முடிவு செய்வது ஹதீஸுக்கு உடன்பாடான விளக்கமாகத் தெரியவில்லை.

ஐயம்: அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் ஜமல் போரின் போது கூபா நோக்கிப் பயணித்துள்ளார்களே! நாம் ஹஜ்ஜுக்காகச் செல்வதை எவ்வாறு தவறாகக்கொள்ள முடியும்?

தெளிவு:- இது அவர்களின் தனிப்பட்ட ஒரு முடிவாகும். நபித் தோழர்கள் பலர் இதனை விரும்பவில்லை. அப்படி இருந்தும் இஸ்லாத்தில் சமரசம் செய்து வைத்தல் விரும்பத்தக்க செயல் எனக் காரணம் காட்டியே அவர்கள் அவ்வாறு புறப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அத்துடன், பிற்காலத்தில் தனது இந்தத் தவறை உணர்ந்த அன்னை அவர்கள் அவர்களது முந்தானை நனையும் அளவு அழுது கண்ணீர் வடித்துள்ளார்கள் என ஆதாரபூர்வமான செய்திகள் குறிப்பிடுவதைக் கவனித்தால் இது போன்ற செய்திகள் ஆதாரமாகக்கொள்ள முடியாதவை என்பதை அறியலாம்.

நபி(ஸல்) அவர்களின் மேற்படி கட்டளையை மீறி ஸஹாபிப் பெண்கள் யாராவது இவ்வாறு சென்றிருப்பார்களாயின், அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் சென்றார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். பின் அவர்களின் விருப்பம் மார்க்கமாக முடியாது என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.

நன்றி; மவ்லவி இஸ்மாயில் ஸலபி மற்றும் இஸ்லாம் கல்வி.காம்.

செவ்வாய், 18 அக்டோபர், 2011

அண்ணன் ஜமாத்தின் 90 சதவிகிதம் பேர் தக்லீதுகளே​; சொல்கிறார் அண்ணன்!

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அண்ணன் ஜமாஅத்தில் இருக்கும் அவரது தம்பிகள் அண்ணன் என்ன சொன்னாலும் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றக் கூடியவர்களே என்ற விமர்சனம் தொன்று தொட்டு உள்ளதுதான். அதனால்தான் அண்ணன் ஜமாஅத்திற்கு மற்றொரு பெயராக தமிழ்நாடு தக்லீத் ஜமாஅத் என்றும் கூறப்படுவதுண்டு. இவ்வாறு அண்ணன் கருப்புக் காக்காவை காட்டி, இதோ வெள்ளைக் காக்கா மல்லாக்க பறக்குது என்று சொன்னாலும் ஆமாண்ணே! இந்த காக்கா நீங்க சொல்றது மாதிரி வெள்ளையேதான்னே என்று அவரது தம்பிகளும் கழுத்து வலிக்கும் அளவுக்கு தலையாட்டுவார்கள். ஆனால், நாங்க ஒன்னும்
 பீஜே சொல்றது எல்லாத்துக்கும் தலையாட்ட மாட்டோம். நாங்க குர்ஆன்-ஹதீஸைத் தான் பின்பற்றுவோம் என்று சொல்லிக் கொள்வார்கள். மேலும் இவர்களை பீஜேயை பின்பற்றுபவர்கள் என்று யாரேனும் சொன்னால் அவர்களை உண்டு இல்லைன்னு ஆக்கிவிடுவார்கள். ஐயோ பரிதாபம்! இவர்கள் யாரை பின்பற்றுகிறார்களோ அந்த அண்ணனே என் ஜமாஅத்து ஆள்களில் 90  சதவிகிதம் பேர் ஆய்வு செய்யாமல் நாங்கள் சொல்வதை பின்பற்றும் தலையாட்டிகள் தான் என்று தனது அமுதவாயால் சொல்வதை இந்த வீடியோவில் பாருங்கள்; http://youtu.be/ZFtePmagAoc

ஆனாலும் தக்லீது செய்வது கூடாது என அண்ணன் சொல்லும் அறிவுரைக்காக அண்ணனை பாராட்டுகிறோம். இனிமேலாவது அண்ணன் என்ன செஞ்சாலும் தலையாட்டாமல் அண்ணனின் அறிவுரைக்கு மதிப்பளித்து, அவரை பின்பற்றும் தம்பிகள் குர்ஆன்-ஹதீஸை பின்பற்ற முன்வரட்டும். தக்லீதிலிருந்து விடுபட, அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டட்டும்.

நன்றி; செங்கிஸ்கான் http://www.sengiskhanonline.com/2011/10/90.html

செவ்வாய், 11 அக்டோபர், 2011

முகவை அப்பாஸின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பிஜெ!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் முகவை அப்பாஸ், உங்களின் ஆக்கங்களை intjonline.in என்ற இந்த இணையதளத்தில் அடிக்கடி படிப்பது உண்டு. அல்லாஹ் உங்கள் மீது அருள் செய்யட்டும். அல்ஹம்துலில்லாஹ்.

அந்த வரிசையில் சென்ற வாரம் வந்த ஜூம்ஆ தொழுகையில் குத்பாவில் கைத்தடி; பீஜே அன்றும் இன்றும்! என்ற தலைப்பில் வந்த கட்டுரையை படித்தேன். மாஷா அல்லாஹ்.... சகோதரர் முகவை அப்பாஸ், நீங்கள் நியாயமாக கேட்டுள்ள மார்க்க சமபந்தமான எந்த கேள்விக்கும்  பிஜெ அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை என்பதை அவரது பொறம்போக்கு பினாமியினை கொண்டு உங்களை வசைபாடுதல் மூலமாக நிரூபித்து வருகிறார்.

சகோதரர் பிஜெ அவர்கள், எந்த ஹதீஸ் அடிப்படையில் மார்க்க விஷயமாக தீர்வு சொன்னாரோ, அந்த ஹதீஸை கொண்டே முந்தைய தீர்ப்புக்கு முரணாக மறு தீர்வு சொல்கிறார் என்பதை ஆதாரபூர்வமாக  நிரூபித்துள்ளீர்கள். அதை பிஜெ மறுப்பதாக இருந்தால், நான் இந்த அடிப்படையில் முன்பு தீர்வு சொன்னேன், இந்த அடிப்படையில் இப்போது தீர்ப்பை மறுகிறேன் என சொல்ல வேண்டும்.  
அதை விடுத்து, அவரது சீடர்கள், பிஜெயின் தீர்ப்பை சிறப்புக்குரிய இமாம்களுடனும், மரியாதைக்குரிய சஹாபாக்காளின் நிலைப்பாட்டுடனும் ஏன் அருமைக்குரிய இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தீர்ப்புடனும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்கள். நவுதுபில்லாஹ்.
இமாம் ஹனபியோ அல்லது ஷாபியோ அன்று ஒரு மார்க்க தீர்வை ஒரு ஹதீஸின் அடிப்படையில் சொல்லிருந்து, அதை பிறகு மாற்றுவதாக இருந்தால், அதை விட கூடுதலான ஆதாரம் உள்ள ஒரு ஹதீஸை கொண்டுதான் மாற்றி இருக்கிறார்களே தவிர, சகோ.பிஜெ போல், ஒரே ஹதீஸை கொண்டு அன்று ஒன்று சொல்லி, அது தனக்கு தற்பொழுது சரியாக படவில்லை என இன்று மாற்றி கூறியதாக நாம் பார்க்கவில்லை. 
சகோதரர் அப்பாஸ் அவர்களே! தாங்கள் என்ன தவறு செய்தீர்களோ, நான் தெரிந்து இருக்கவில்லை. அது எனக்கோ இந்த சமுதாயத்திற்கோ தேவையும் இல்லை என நினைக்கிறேன். பிஜெ அவர்களின் அமைப்பில் இருந்தப் பொழுது, தாங்கள் செய்தாக சொல்லப்படும் தவறுகளை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு, அவரை விட்டு வெளியேறி, மார்க்கம் மற்றும் சமுதாய விசயங்களில் தவறு செய்கிறார் என்பதை சுட்டிக் காட்டும் பொழுது,  பொறாமையின் வெளிபாடாக உங்களை சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக இதை இப்போதும் நாகரிகமற்று எழுதுவதுவது, அவருக்கும், அவரது பினாமிக்கும் பெருமையாக தெரியலாம். ஆனால் அது இறைவன் முன்பு வெட்க கேடானது.   இது ஒரு கோழையின் செயலாகும். அதற்கான தண்டனைகளை அவர்கள் பெற்றே தீருவார்கள்.

இத்தவறுகளுக்காக தாங்கள் பாவமன்னிப்பு தேடி இருப்பீர்கள். இல்லாவிட்டால் தயவு செய்து பாவ மன்னிப்பு தேடிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் பாவத்தை மன்னிக்கட்டுமாக!
ஒரு சகோதரனின் மான மரியாதை மறைக்க வேண்டும் என இஸ்லாம் சொல்லிய போதும், தன் சுயநலத்திற்காக கடந்த போன ஒரு சம்பவத்தை எழுதுவது ஷைத்தானின் வரம்புமீறிய செயலாகும்.
தாங்களின் அதிகமான ஆக்கங்களை படித்து இருக்கிறேன். நல்ல மார்க்க விசயங்களை, சமுதாயம் பயன் பெறும் விசயங்களை எழுது வருகிறீர்கள். அதிலும் குறிப்பாக சஹாபாக்களின் வாழ்வினிலே என்ற கட்டுரைகள். மிக மிக அருமை.

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் தாங்கள் மீது வற்றாத பெரும் கருணையை பொழியட்டும் என துஆச் செய்கின்றேன்வஸ்ஸலாம்.
தாங்களின் மார்க்க சகோதரன்
அஹ்மது முஹைதீன்
சென்னை.

சனி, 8 அக்டோபர், 2011

ஜூம்ஆ தொழுகையில் குத்பாவில் கைத்தடி; பீஜே அன்றும் இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கைத்தடி வைத்துக் கொண்டு குத்பா ஓதியுள்ளார்களா? என்ற கேள்விக்கு அறிஞர் பீஜே, அந்நஜாத்தில் அன்று அளித்துள்ள பதிலை படியுங்கள்; 
கேள்வி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கைத்தடி வைத்துக் கொண்டு குத்பா ஓதியுள்ளார்களா? -அமீர்ஜான், மேலக்கொவரப்பட்டு

பதில்: ஆம்! கைத்தடியை ஊன்றிக் கொண்டு குத்பா ஓதியுள்ளனர்.
"நாங்கள் ஜும்ஆவுக்குச் சென்றோம். அப்பொது நபிஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் கைத்தடியை ஊன்றியவர்களாக எழுந்து நின்று இறைவனைப் புகழ்ந்தார்கள் … …. …. என்ற ஹதீஸ் அபூதாவூத், பைஹகீ, அஹ்மத், ஆகிய நூல்களில் ஹகம் இப்னு ஹஸ்ன் ரழியல்லாஹு அன்ஹு மூலம் அறிவிக்கப்படுகின்றது.
1986 அக்டோபர், அந்நஜாத்

நன்றாக கவனியுங்கள். கேட்ட கேள்வி என்பது நபி[ஸல்] அவர்கள் கைத்தடியுடன் உரையாற்றியுள்ளார்களா? என்பதுதான். ஆனால் பீஜே, ஜூம்ஆவில் நபி[ஸல்] அவர்கள் கைத்தடியை ஊன்றிக்கொண்டு உரையாற்றியுள்ளார்கள் என்று பதிலளிக்கிறார். இதன் மூலம் ஜூம்ஆவில் உரையாற்றும் ஒருவர் கைத்தடி வைத்துக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்பது  அன்றைக்கு அவரது பதிலாகும். பீஜேயின் இன்றைய பதில் என்ன?

''ஜும்மா உரைக்கு கைத்தடி அவசியமா? http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/jummavukku_kaithadi_avasiyama/என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பீஜே, மேற்கண்ட அதே ஹதீஸை எடுத்து வைக்கிறார். வைத்து விட்டு தனது வியாக்கியானத்தை பதிலாக தருகிறார்.

''இந்த செய்தியை [ஹதீஸை] தவறாக புரிந்து கொண்டதால் இமாம் கைத்தடி, கத்தி போன்றவற்றை பிடித்த நிலையில் உரையாற்ற வேண்டும் என்று நினைக்கின்றனர். பல பள்ளிவாசல்களில் இவ்வாறு செய்தும் வருகின்றனர் என்கிறார். அதோடு, இந்த ஹதீஸில் கைத்தடியை  வைத்துக் கொள்வது அல்லது பிடித்துக் கொள்வது என்ற கருத்து இல்லை. மாறாக கைத்தடியை ஊன்றுகோலாக கொண்டு நபி[ஸல்] அவர்கள் உரையாற்றினார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. ஊன்று கோல் என்பது ஒருவரது பலவீனம் காரணமாக பயன்படுத்துவதாகும்''' என்று கூறுகிறார் பீஜே. அதாவது நபி[ஸல்]அவர்கள் கைத்தடியை தனது பலவீனத்தின் காரணமாக ஊன்றுகோலாகவே  பயன்படுத்தியுள்ளனர் என்பது பீஜேயின் கருத்தாகும்.

நன்றாக கவனிக்கவேண்டும். இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள 'ஊன்றுகோலாக' என்ற வாசகம் அன்றைக்கு பீஜெயிக்கு தெரியவில்லையா? தெரிந்திருந்தது. அதனால்தான் ''ஆம்! கைத்தடியை ஊன்றிக் கொண்டு குத்பா ஓதியுள்ளனர்'' என்று சொன்னார். இன்றைக்கு சொல்வது போல், பலவீனத்தின் காரணமாக ஊன்றுகோலாக நபியவர்கள் பயன்படுத்தினார்கள் என்ற வியாக்கியானத்தை அன்று அவர் சொல்லவில்லை. இதன் மூலம் ஜூம்ஆவில் கைத்தடி வைத்துக் கொள்வதை அன்று சரிகண்டிருக்கிறார். இன்று மறுக்கிறார்.

மேலும் பீஜேயின் கூற்றுப்படி, கைத்தடியை நபி[ஸல்] அவர்கள் பலவீனத்தின் காரணமாக வைத்துக் கொண்டார்கள் என்று கருதுவதாக இருந்தால், நபியவர்கள் கைத்தடியின்றி நடக்க முடியாத அளவுக்கு பலவீனராக இருந்தார்கள் என்று பீஜே கூறவருகிறாரா?  நடப்பதற்கு கைத்தடி பயன்படுத்துபவர் தான் ஒரு இடத்தில் நிற்பதற்கும் பயன்படுத்துவார். அப்படியானால் நபி[ஸல்]அவர்கள் கைத்தடி துணையுடன் தான் எப்போதும் நடந்தார்கள் என்று பீஜே காட்டத் தயாரா?

அடுத்து, ''கைத்தடியை ஊன்றி உரையாற்ற வேண்டும் ஜூம்ஆவின் ஒழுங்கு முறையில் ஒன்றாக இருந்தால் இவ்வாறு செய்ய வேண்டும் என நபி[ஸல்] அவர்கள் உத்தரவிட்டிருப்பார்கள். ஆனால் நபியவர்கள் அவ்வாறு எந்த உத்தரவும் இடவில்லை'' என்று கூறி, எனவே கைத்தடி அவசியமில்லை என்று பீஜே கூறுகிறார்.

நாம் கேட்கிறோம் ஜூம்ஆ உரை மிம்பர் மீதுதான் நிகழ்த்த வேண்டும் என்று எங்கேனும் நபி[ஸல்] அவர்கள் கட்டளையிட்டுள்ளார்களா? இல்லை. ஏனெனில் மிம்பர் இல்லாத காலகட்டத்தில் மரத்தில் சாய்ந்தவண்ணம் தரையில் நின்று நபி[ஸல்] அவர்கள் உரையாற்றியுள்ளார்கள் என்று இதே பீஜே ஒப்புக்கொள்கிறார். மேலும் மிம்பர் தயாரிக்கப்பட்டது பீஜேயின் கூற்றுப்படி, நபி[ஸல்]அவர்கள் பலவீனத்தின் காரணத்தினால் மரத்தின் மீது சாய்ந்து உரையாற்றுவதை தவிர்க்கவே அமரும் வகையில் மிம்பர் தயாரிக்கப்பட்டது. எனவே மிம்பர் என்பது நபி[ஸல்] அவர்கள் பலவீனமாக இருந்ததால் உருவாக்கப்பட்டது. எனவே மிம்பரை பயன்படுத்தி  ஜூம்ஆ உரை நிகழ்த்துவது தவறு என்று பீஜே அறிவிக்கத் தயாரா? அல்லது மிம்பரை நபி[ஸல்] அவர்கள் பயன்படுத்தியுள்ளதால் நாமும் பயன்படுத்துகிறோம் என்று பீஜே கூறுவரானால், இது கைத்தடிக்கும் பொருந்துமே!

எனவே தனது சுய வியாக்கியானத்தை திணிப்பதற்காக, நோயுற்ற வேளை நீங்கலாக, மற்ற நேரங்களில் எல்லாம் திடகாத்திரமாக இருந்த நபி[ஸல்] அவர்களை கைத்தடி உதவியுடன் நிற்கும் ஒரு பலவீனராக பீஜே காட்ட நினைக்கிறார். அல்லாஹ் பாதுகாப்பானாக!

குறிப்பு; இதை படிக்கும் பீஜேயின் அபிமானிகள், அன்றும் அந்த ஹதீஸ் இருக்கிறது என்றார் பீஜே. இன்றும் அந்த ஹதீஸ் இருக்கிறது என்கிறார். இதில் எங்கே முரண்பாடுள்ளது என்று குதிப்பார்கள். நாம் கூறவருவது, பீஜே இந்த ஹதீஸை இன்று மறுத்து விட்டார் என்பதல்ல. மாறாக, அன்று இந்த ஹதீஸை வைத்து கைத்தடியை சரி கண்டவர், இன்று அதே ஹதீஸை வைத்து கைத்தடியை மறுக்கிறார்; நபி[ஸல்] அவர்களை பலவீனராக கட்டுகிறார் என்பதே.

அல்லாஹ்வே மிக அறிந்தவன். 

புதன், 5 அக்டோபர், 2011

பித்ரா விநியோக குளறுபடி; பதிலில்லாமல் பைலை மூடிய அண்ணன் ஜமாஅத்!


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

2011 ஆண்டுக்கான அண்ணன் ஜமாத்தின் பித்ரா விநியோக விபரங்களை தாங்கி வந்த உணர்வின் முதல் பட்டியல், 65 கிளைகள் கணக்கில் பிழையுடன் காட்சி தந்தது. அடுத்தவாரம் திருத்தம் செய்து வெளியிட்ட இரண்டாவது பட்டியல்,
 சூளைமேடு
திண்டிவனம்;
சூரமங்கலம்;
புத்தன்துறை;
மெயின்பஜார்&காந்தல்;
திருவல்லிக்கேணி
ஆகிய கிளைகளின் கணக்குகளில் குளறுபடியுடன் காட்சி தந்தது.

மேற்கண்ட குளறுபடியை திருத்தம் செய்து வெளியிட வேண்டிய அல்லது எங்களின் கூட்டுத்தொகை சரிதான் என்று நிரூபிக்க வேண்டிய அண்ணன் ஜமாஅத், திருத்தம் எல்லாம் செய்து கணக்கை 'சரி' செய்து விட்டோம் என்று சொல்லியுள்ளது.

உணர்வில், வளைகுடா வாசகர் அப்துஸ்ஸலாம் என்பவர், ''உணர்வு இதழில் வெளிவந்த ஃபித்ரா தொடர்பான கணக்குகளில் அதிகமான குறைகள் இருந்தன. இதனை சரி செய்து வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்''! என்று கடிதம் எழுத, அதற்கு பதில் எழுதியுள்ள ஆசிரியரான அண்ணன்,
''நீங்கள் சுட்டிக்காட்டிய தவறுகள் சென்ற இதழில் சரி செய்யப்பட்டு வெளியிடப்பட்டன'' என்று கூறியுள்ளார்.

அதாவது திருத்தம் செய்து ஏற்கனவே நாங்கள் வெளியிட்டு விட்டோம். எனவே மீண்டும் திருத்தம் செய்யும் அளவுக்கு எங்களின் பித்ரா கணக்கில் குறைபாடு எதுவும் இல்லை என்பது அண்ணனின் பதிலாகும். ஆனால் திருத்தப்பட்ட பட்டியலில் உள்ள மேற்கண்ட ஆறு கிளைகளின் குளறுபடியை இவர் எப்போது திருத்தம் செய்தார்? அல்லது இந்த தப்புக் கணக்கை  சரி தான் என்கிறாரா? பதில் சொல்ல வேண்டும்.

மேலும், ஏற்கனவே ஃபித்ரா தொகையை ஜகாத் நிதியில் சேர்ப்பதற்கு ஆதாரம் கேட்டோம். இரண்டாண்டு  முடிந்தும் பதில் இல்லை.

ஃபித்ரா தொகையில் மாவட்டங்களுக்கு வழங்கிய 56 ,84 ,600 ஐ முழுமையாக விநியோகிக்க முடியாமல் மாவட்டங்கள் இந்த தொகையிலிருந்து  82 ,067 ஐ மாநிலத்திற்கு திருப்பி அனுப்பி விட்டதாம். அந்த 82 ,067  ரூபாயை மட்டும் மீதி இருப்பாக காட்டிய அண்ணன் ஜமாஅத்,  ஏற்கனவே தலைமையில் மிச்சமான தொகை  82 ,067 மறைத்து விட்டது. அது எங்கே? என்று கேட்டோம். பதில் இல்லை.

ஆனாலும் அண்ணன் ஜமாஅத், பித்ரா விநியோகத்தில் எந்த குளறுபடியும் செய்யவில்லை என்று அண்ணன் உணர்வில் 'அக்மார்க்'முத்திரை குத்தியுள்ளார். நம்பினால் நம்புங்கள்.

தொடர்புடைய  இடுகைகள்;

ஒன்னு இங்க இருக்கு; இன்னொன்னு எங்கே..? http://amaibbukal.blogspot.com/2011/09/blog-post_25.html

பித்ரா விநியோகம்; தொடர்ந்து மார்க்க கடமையில் விளையாடும் அண்ணன் ஜமாஅத்! http://amaibbukal.blogspot.com/2011/09/blog-post_7520.html

பித்ரா விநியோகம்; பலவீனம் கண்ணிலா? கணக்கிலா?http://amaibbukal.blogspot.com/2011/09/blog-post_27.html

மறுபடியும் மொதல்ல இருந்தா....????????http://amaibbukal.blogspot.com/2011/09/blog-post_29.html 

அது போன வருஷம்; இது இந்த வருஷம்....??? http://amaibbukal.blogspot.com/2011/09/blog-post_26.html

நன்றி;  அப்துல் முஹைமின்.
 இயக்கங்களின் மறுபக்கம்.

__._,_.___
 

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

முகவைஅப்பாஸின் முக்கிய அறிவிப்பு!

بسم الله الرحمن الرحيم
றிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன்  அவர்களின் மார்க்க முரண்பாடுகளை விளக்கும் 'அன்றும்-இன்றும்' தொடரை நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம். இதற்கு சம்மந்தப்பட்ட பீஜே, இதுகுறித்து நேரடியாக பதிலளிக்க திராணியின்றி, தனதுஆசியுடன் இயங்கும் பினாமியின் பிளாக்கில் ஆபாச தொடரை தொடங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்த  ஒன்றுதான். இந்நிலையில் எமது இந்த 'அன்றும்-இன்றும்' தொடர் பற்றி பீஜேயின் அபிமானிகளிடம் கேள்வி எழுப்பும் சகோதரர்களிடம்,
 
''பீஜே மட்டும் அல்ல மார்கத்திற்க்கு விளக்கம் கொடுக்கும் அத்தனை இமாம்களும் ஏன் முஹம்மது (ஸல்) அவர்களும் கூட முன்பு சொன்னதை பின்பு மாற்றி உள்ளார்கள்'. என்று திசைதிருப்பும் பதிலை சொல்வதாக நமக்கு தகவல் வந்துள்ளது. அதையொட்டியே இந்த விளக்கம்.
 
இதே பீஜே ஒரு சட்டம் சொல்லி 'பலம்' என்றும் 'பலவீனம்' என்றும் மாற்றியவைகள் ஏராளம் உண்டு. அதேபோல் இதே பீஜே ஒரு சட்டம் சொல்லி வேறு ஆதாரத்தை வைத்து மாற்றியவைகள் ஏராளம் உண்டு. அவைகளை நாம் பட்டியலிடவில்லை. நாம் கையில் எடுத்திருப்பது,

ஒரு சட்டத்தில்  ஒரே வசனத்தை ஆதாரமாக  வைத்து, இரு முரண்பட்ட தீர்ப்பை வழங்குவது.
 
ஒரு சட்டத்தில் ஒரே ஹதீஸை ஆதாரமாக வைத்து இரு முரண்பட்ட தீர்ப்பை வழங்குவது.
 
பிறரால் சுட்டிக்காட்டியபோது தனது தீர்ப்பை மாற்றாமல் வியாக்கியானம் செய்து விளக்கமளித்து, பின்னாளில்  சத்தமில்லாமல் மாற்றியது.
 
குர்'ஆனிலும் ஹதீஸிலும்  இல்லாமல் சொந்த வியாக்கியானங்களை ஃபத்வா'வாக வழங்கியது. இவைகளைத்தான் நமது தொடர் விளக்குறது.
 
இதற்கு விளக்கமளிக்க முடியாமல், பீஜே எனும் தனிமனிதன் மீதான பற்று அவரது முரண்பாட்டுக்கு நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் வஹீ அடிப்படையில் மாற்றிய விஷயங்களை ஆதாரமாக காட்ட வைக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!

இமாம்கள் மாற்றினார்களே  என்கிறார்கள்.  எல்லா சஹாபாக்களுக்கும் எல்லா சட்டமும் தெரியாது என்று பீஜேயே சொல்லியுள்ளார். அப்படியிருக்க இமாம்கள் மடிக்கணினியை மடியில் வைத்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஒரு சட்டத்தை சொல்லி வேறு ஆதாரங்கள் கிடைக்கும்போது அதன் அடிப்படையில்  மாற்றியிருப்பார்கள். இமாம்கள் மாற்றியதும் பீஜே மாற்றியதும் ஒன்றல்ல. அப்படியே இவர் இன்று மாற்றியது போன்று இமாம்கள் ஒரே வசனத்தை வைத்து முரண்பட்ட  சட்டத்தை சொல்லியிருந்தாலும், இமாம்கள குர்'ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக பல்வேறு சட்டங்களை  சொல்லியுள்ளார்கள். எனவே மத்ஹபை பின்பற்றக் கூடாது. இதோ நான் 'தூயவடிவில்' இஸ்லாத்தை சொல்கிறேன் என்றவர், அன்று இமாம்கள் முரண்பட்டார்கள்.  அதனால் நானும் முரண்படுவேன் என்றால் இவர் இமாம்களை பின்பற்றுகிறாரா?
 
எனவே அவுக மாத்தலையா? இவுக மாத்தலையா? என்று வழக்கம் போல திசை திருப்ப வேண்டாம் என்று கூறிக் கொள்கிறோம். மேலும் பீஜேயின் இரு முரண்பட்ட ஃபத்வாக்களில் இரண்டில் எது சரி என்று சொல்லுமாறு சில சகோதர்கள் கேட்கிறார்கள். என்னிடம் கேட்பதை விட, இரு முரண்பட்ட ஃபத்வாக்களை வழங்கியவரிடத்தில்  சகோதரர்கள்  கேட்பதுதான் சரியானது. 
 
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
அன்புடன் முகவைஅப்பாஸ்.

பயணத் தொழுகை; பீஜே அன்றும்-இன்றும்!

بسم الله الرحمن الرحيم
 
பயணத்தில் 'கஸ்ர்' தொழுகை அதாவது சுருக்கித் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இந்த தொழுகை எத்தனை கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டால் தொழவேண்டும் என்று அறிஞர் பீஜேயிடம் அன்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலை படியுங்கள்;
 
கேள்வி : வெளியூர் பயணம் செல்வோர், நான்கு ரக்அத் தொழுகைகளை (மட்டும்) இரண்டு ரக்அத்களாக தொழ சலுகை உண்டு என்பதைத் தெரிந்திருக்கிறேன். அருகில் உள்ள ஊர்களுக்குப் பயணம் சென்றாலும் இவ்வாறு சலுகை உண்டா? அல்லது நீண்ட தொலைவு பயணங்களுக்கு மட்டுமே இந்த சலுகையா? நீண்ட தொலைவு என்றால் எத்தனை மைல்கள்? விரிவாக விளக்கம் தரவும்! "சிலர் 48 மைல்கள்" என்கிறார்களே! அது சரிதானா?
நெய்னா முகம்மது B.A., தஞ்சை மாவட்ட தவ்ஹீது கமிட்டி அமைப்பாளர்.

பதில் : "48 மைல்கள்" என்பதற்கு ஹதீஸில் அறவே ஆதாரம் கிடையாது. மூன்று நாள் பிரயாண தூரம் என்று கூறுவதற்கும் ஆதாரம் இல்லை. மாறாக முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், பைஹகீ ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் ஒன்றைக் கீழே தருகிறோம்.
யஹ்யா இப்னு யஸீத்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:-
தொழுகையைக் கஸர் செய்யும் தூரத்தைப்பற்றி அனஸ்(ரழி) அவர்களிடம் நான் கேட்ட போது "நபி(ஸல்) அவர்கள் மூன்று மைல்கள் அளவு அல்லது மூன்று "பர்ஸக்" அளவு பயணம் செய்யும்போது கஸர் செய்பவர்களாக இருந்திருக்கின்றனர்" என்று அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள "மைல்" என்பதும் "பர்ஸக்" என்பதும் வெவ்வேறான தூரங்களைக் கொண்டதாகும். அதாவது மூன்று மைல்களைக் கொண்டது ஒரு "பர்ஸக்" ஆகும். இந்த ஹதீஸில், அறிவிப்பாளர் "மூன்று மைல்கள் அல்லது மூன்று பர்ஸக்கள்" என்று சந்தேத்திற்குரிய சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டில் ஏதொ ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். இந்த இடத்தில் அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை ஸயிது இப்னுமன்ஸுர் அவர்கள் பதிவு செய்து வைத்துள்ள, ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தனது "தல்கீஸ்" என்ற நூலில் எடுத்து எழுதியுள்ள ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது. அது வருமாறு:-

நபி(ஸல்) அவர்கள் ஒரு "பர்ஸக்" பயணம் செல்லும்போது கஸர் செய்வார்கள்". அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரி(ரழி)
இந்த ஹதீஸில் "ஒரு பர்ஸக்" என்ற சொல் இடம் பெற்றுள்ளதால், முந்தைய ஹதீஸில் "மூன்று மைல்" என்பதே சரியானதாக இருக்கும் என்று தெரிய முடிகின்றது. ஏனெனில் மூன்று மைல் என்பதும் ஒரு பர்ஸக் என்பதும் ஏறக்குழைய ஒரே தூரத்தைக் கொண்டவைதாம்.
ஹதீஸ் கலையின் மாமேதை ஹாபிழ் இப்னுஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் "அனஸ்(ரழி) மூலம் அறிவிக்கப்பட்ட அந்த ஹதீஸ்தான் கஸர் பற்றிய ஹதீஸ்களில் மிகவும் வலுவானது, தெளிவானது" என்று குறிப்பிடுகின்றார்கள்.

எனவே ஹதீஸ்களிலிருந்து மூன்று மைல்கள் தூரம் பயணம் செல்பவர்களே கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது.
அன்றைக்கு வழக்கில் இருந்த "அரபுநாட்டு மைல்" என்பது 1748 மீட்டர்களாகும். மூன்று மைல்களுக்கு 5244 மீட்டர்களாகின்றது. அதாவது ஐந்தேகால் கிலோமீட்டர் பயணம் செய்பவர்கள் கஸர் செய்யலாம் என்பதே ஹதீஸ்களிலிருந்து தெரிய வருகின்றது.

தெளிவான ஹதீஸ்கள் இருக்கும்போது எவருடைய சொந்த அபிப்பிராயங்களுக்கும் நாம் கட்டுப்படுவது மாபெரும் குற்றமாகும். "48 மைல்கள்" என்று கூறுவோர் அதற்கான ஹதீஸ்களை வெளியிடட்டும். நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூமின் அதனை ஏற்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் "ஒருமைல் தூரத்துக்கே நபி(ஸல்) கஸர் செய்திருப்பதாக இப்னு உமர்(ரழி) அவர்கள் மூலம் இப்னு அபீ ஷைபா பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஹதீஸைவிட அந்த ஹதீஸ் பலமானதாக உள்ளதால் அதன் அடிப்படையில் நாம் விளக்கம் தந்துள்ளோம்.

48 மைல்கள் என்பவர்கள் நேரடியாக ஹதீஸ் எதனையும் கூறியதாக தெரியவில்லை.
தெளிவான ஹதீஸ் அடிப்படையில் ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளைக் கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது.
அந்நஜாத்.1986 ஜூன் இதழ் பக்கம் 35
 
மேற்கண்ட பீஜேயின் ஃபத்வா சொல்வது என்ன? மூன்று மைல்கள் அளவு அல்லது மூன்று "பர்ஸக்" அளவு என்று ஹதீஸில் வந்துள்ளது. இதில் மைல் என்பதுதான் சரியானது. எனவே மூன்று மைல் தூரம் தூரம் அதாவது ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளைக் கஸர் செய்யலாம் என்று கூறுகிறது. இன்று அதே பீஜே மேற்கண்ட இதே ஹதீஸை ஆதாரமாக காட்டி,
 
''மூன்று மைலில் நபி[ஸல்]அவர்கள் கஸ்ர் செய்தார்களா என்பது சந்தேகத்திற்கு இடமானது. எனவே உறுதியானதை எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் மூன்று 'பர்ஸக்' என்பதை எடுத்துக் கொள்ளவேண்டும். அன்றைய கால மூன்று 'பர்ஸக்' என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கிலோ மீட்டர்களாகும்.  எனவே ஒருவர் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய நாடி ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்' என்கிறார்.
 
மேற்கண்ட பீஜேயின் இரு முரண்பட்ட ஃபத்வாக்களில் கவனிக்கவேண்டிய அம்சங்கள்;
  • தனது இரு முரண்பட்ட ஃபத்வாக்களுக்கும் ஒரே ஹதீஸைத் தான் ஆதாரமாக வைக்கிறார். 
  • முதல் ஃபத்வாவின் 'மைல்' என்பதுதான் சரி. எனவே  ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளை கஸர் செய்யலாம் என்கிறார்.
  • இரண்டாம் ஃபத்வாவில் இல்லை 'மைல்' அளவு சரியல்ல; மூன்று 'பர்ஸக்' என்பதை எடுத்துக் கொள்ளவேண்டும். அன்றைய கால மூன்று 'பர்ஸக்' என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கிலோ மீட்டர்களாகும்.  எனவே ஒருவர் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய நாடி ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்' என்கிறார்.
  • முதல் ஃபத்வாவில் ஐந்தே கால் கிலோமீட்டர் தான் நபி வழி. நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூமின் அதனை ஏற்க முடியாது என்றவர், பின்பு இரண்டாம் ஃபத்வாவில் 25 கிலோ மீட்டர் என்று சொல்லி அவருக்கு அவரே இல்லை இல்லை. இவரின் கூற்றுப்படி நபிவழிக்கு முரண்படுகிறார்.
சிந்திக்கும் மக்களுக்கு இவரின் முரண்பாடும், மார்க்க சட்டங்களில் இவர் காட்டும் பொடுபோக்கும்  உள்ளங்கை நெல்லிகணியாக விளங்கும்.

தனி இட ஒதுக்கீட்டால் பலனில்லை; பீஜே ஒப்புதல் வாக்குமூலம்!

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக குடந்தையிலும், சென்னையிலும் அப்பாவி முஸ்லிம்களின் கோடிகளை கொட்டி மாநாடு நடத்திய பீஜே, ''இடஒதுக்கீடு நமக்கு கிடைத்து விட்டால் நமது சமுதாயம் எங்கோ போய்விடும் என்று அளந்து விட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் இட ஒதுக்கீட்டால் எந்த பலனுமில்லை என்று அவரே சொல்லும் காட்சி. சில மாதங்களுக்கு முன்னால் மூன்டிவி'யில் பாஜகவின் தமிழக பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன் உடன் நடந்த நேர்காணலில் இருந்து சில பகுதிகள்;  

பீஜே; தலித் சமுதாயத்திற்கு தனி ரிசெர்வேஷன் இருப்பது போல் முஸ்லிம்களுக்கும் தந்துவிட்டால் அந்த  தொகுதியில் யார் வேட்பாளரை நிறுத்தினாலும் முஸ்லிமைத் தான் நிறுத்த முடியும். அதில் எந்த கட்சி ஜெயித்தாலும் ஒரு முஸ்லிம் வெற்றி பெற்றுவிடுவார்.

தொகுப்பாளர்; நீங்க சொல்ற மாதிரி யாராவது ஒரு கட்சி சார்பா வர்ற முஸ்லிம்கள் அந்த கட்சித் தலைமை சொல்றதைத் தானே கேட்பார். அப்புறம் எப்பிடி இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நன்மை செய்வார்?

பீஜே; நன்மை செய்ய முடியாது. அரசியல பொருத்தவரைக்கும் கூட்டணில நிண்டு நம்மலே போட்டியிட்டாலும்...

தமிழிசை  குறுக்கிட்டு; அந்த கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கை எடுத்தாலும் கட்சி தலைமையை மீறி அவரால் தடுக்க முடியாதே?

பீஜே; தடுக்கமுடியாது. அதுல எந்த டவுட்டும் கெடையாது.  நாங்க என்ன சொல்றம்னு கேட்டா இப்ப நாங்களே தேர்தல்ல போட்டியிட்டு நாலு எடம் வாங்குனாலும் நாங்க கூட்டனிய அனுசரிச்சுதான் பேசுவோமே தவிர நாங்க வேற கருத்து சொல்ல இயலாது. அதுவும் அந்த அர்த்தத்துல தான் வரும்.

தமிழிசை; அப்ப அதுல பயன் என்ன?

பீஜே; முஸ்லிம்களுக்கு பங்கு இருக்குன்றதுதான். அதுல ஒரு திருப்தியே தவிர அவங்களால சமுதாயத்துக்கு ஒன்னும் இல்ல.

பார்க்க வீடியோ; http://www.youtube.com/watch?v=QxTu28tlJQU&NR=1

அன்பு சகோதர்களே! நமக்கு தனி இடஒதுக்கீடு கிடைத்துவிட்டால் நம்ம சமுதாயம் சார்பாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் சென்றால் சமுதாயத்திற்கு ஒரு பாதிப்பு என்றால் குரல் கொடுப்பார்கள் என்று முழங்கிய பீஜே, இந்த விவாதத்தில் ரிசெர்வேஷனில் ஜெயிக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களால் சமுதாயத்திற்கு எந்த பயனும் ஏற்படாது என்கிறார். வெறும் திருப்திக்குத் தான் என்கிறார். வெறும் திருப்திக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ஏன் மாநாடு நடத்தினார்?

அடுத்து மமக கட்சி, கலவரத் தடுப்பு மசோதா- இடஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளில் ஜெயலலிதாவிடம் வாய் திறக்க முடியவில்லை என்று சாடும் பீஜே, இந்த வீடியோவில் 'இப்ப நாங்களே தேர்தல்ல போட்டியிட்டு நாலு எடம் வாங்குனாலும் நாங்க கூட்டனிய அனுசரிச்சுதான் பேசுவோமே தவிர நாங்க வேற கருத்து சொல்ல இயலாது என்கிறார் . அப்படியானால் இவர் ஜெயிச்சுப் போனாலும் இதுதான் நிலை எனும்போது மமகட்சியை மட்டும் ஏதோ ஜெயலலிதாவிடம் மண்டியிட்டது போன்று விமர்சிப்பது சரியல்ல என்பது இவரது வாதத்திலிருந்தே விளங்கிக் கொள்ளலாம். ஆக இவரது மாநாடுகள் இஸ்லாமிய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பயன்தரக் கூடியது அல்ல என்று அவர் வாயாலேயே ஒப்புக் கொள்ள வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இதற்கு பிறகாவது 'தீவுத்திடல் மாநாடு வெற்றி எதிரொலி; பிரதமருக்கு ஒரே வாந்தி பேதி; அண்ணனுக்கு உடன் அழைப்பு' என்ற அலட்டல் செய்திகளை அனுப்பும் அவரது அபிமானிகள் திருந்தட்டும்.

நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? பீஜே அன்றும்-இன்றும்!

بسم الله الرحمن الرحيم
நாளை மறுமையில் நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? என்பது குறித்து அறிஞர் பீஜே அவர்கள்,  திருக்குர்'ஆன் மொழியாக்கம் செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய 'திருமறை தோற்றுவாய்' என்ற நூலில் 'மறுமையில் பரிந்துரை' என்ற பகுதியில் எழுதியுள்ளதை கீழே படியுங்கள்;
 
''நபிமார்கள் மற்றும் நல்லவர்கள் நமக்காக பரிந்துரை செய்ய வேண்டுமென்று விரும்பினால், அப்போது இறைவனை மட்டும் வணங்கி இறைவனிடம்  தான் இதை  கேட்கவேண்டும். இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை என்று கேட்க வேண்டுமே தவிர, நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்கலாகாது.
 
பீஜேயின் மேற்கண்ட விளக்கத்தில், பரிந்துரையை நபிகளாரிடத்தில் நேரடியாக கேட்கக் கூடாது. அதே நேரத்தில்,  ''இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர் பின்னாளில் தனது திருக்குர்'ஆன் தமிழாக்கத்தில் 'பரிந்துரை பயனளிக்குமா' என்ற விளக்கத்தில் மேற்கண்ட தனது கூற்றிற்கு தானே முரண்படுவதை கீழே படியுங்கள்;
 
இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா!' என்று கேட்பது தவறாகும்.
என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் கற்றுத்தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும். கூறினார்கள்.
 
முதலில் ''இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர்,
பிறகு அவரே அந்தர் பல்டியடித்து, இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா!' என்று கேட்பது தவறாகும் என்று கூறுகிறார். நிகழ்ச்சிக்கொரு சட்டையை மாற்றுவது போன்று நித்தமும் ஃபத்வா'வை மாற்றும் இவரை மக்கள் புரிந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக!

திருக்குர்' ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா? பீஜே அன்றும்-இன்றும்.

بسم الله الرحمن الرحيم
குர்'ஆனும்-ஹதீஸும் மட்டுமே மார்க்கம் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. ஆனால் இந்த குர்'ஆனுக்கும்- ஹதீசுக்கும் விளக்கம் தேவைப்பட்டால் நமது கருத்தை விட, நபி[ஸல்] அவர்களின் நிழலாக வாழ்ந்த சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது  தவ்ஹீத் அறிஞர்களில் பெரும்பாலோர் கருத்தாக உள்ளது. இவ்வாறு நபித்தோழர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற கருத்துடையவர்களை வழிகேடர்கள் என்று விமர்சிக்கும் அறிஞர் பீஜே, அன்று திருக்குர்'ஆனை விளங்க நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும் என்ற கொள்கையில் இருந்துள்ளார் என்பதை கீழே படியுங்கள்;

''முதலில் திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும். ஏனெனில் திருமறையின் வசனங்களில் பெரும்பாலானவற்றிற்குத் திருமறையின் வேறு சில வசனங்களே தெளிவுரையாக அமைந்து விட்டிருக்கின்றன. அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும். ஏனெனில் பேரறிஞர் பெருந்தகை இமாம் ஷாஃபியீ அவர்கள் குறிப்பிடுவது போல் "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செய்த தீர்ப்புகள், சட்டங்கள் யாவுமே அவர்கள் தனது திருமறையில் திருக்குர்ஆனை அவர்களுக்கு அருளப்பட்டதற்கான காரணங்களைச் சொல்லும் போது அதனையே அவர்கள் முன் எழும் சட்டப்பிரசினைகளுக்கு அவர்களே விளக்கம் தரக் கடமைப்பட்டவர்கள் என்பதாகவும் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறான்.

"(நபியே!) மக்களுக்கிடையில் (எழும் பிரசினைகளுக்கு) அல்லாஹ் உமக்கு அறிவித்தவாறு நீர் தீர்ப்பளிக்க வேண்டுமென்பதற்காக, சத்தியத்தைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாகவே நாம் தான் உமக்கு அருளினோம் (4:105) (இந்த வேதத்திலிருந்து) மக்களுக்குச் சிறுக சிறுக அருளப் படுபவற்றிற்கு நீர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே உமக்கு நாம் இந்த நினைவூட்டும் வேதத்தை அருளினோம் (உமது விளக்கத்தின் மூலம் அதனை) அவர்கள் சிந்தித்து அறிந்து கொள்வார்கள்.
இதைத்தான், நபிக் நாயகம் (ஸல்) அவர்கள் "நான் திருக்குர்ஆனையும், அதனுடன் அதுபோன்ற (மதிப்பும் சிறப்பும் உடைய) வற்றையும் வழங்கப்பட்டிருக்கிறேன்" என்றார்கள். திருக்குர்ஆன் போன்றது என்பதற்கு, "திருக்குர்ஆனின் விளக்கமாக அமைந்து விட்ட நபிகள்(ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் என்றே அனைவரும் விளக்கம் தந்துள்ளனர். அதுவும் இறைவன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்திகள் தான் எனினும், திருக்குர்ஆன் ஓதி உணரப்பட வேண்டிய ஒன்றாகவும், அதனுடைய ஒரு காற்புள்ளி உட்படப் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகவும், அமைந்துள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்குகள் குர்ஆன் அளவுக்கு சொல்லுக்கு சொல் பாதுகாக்கப்பட்டதில்லை. எனினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களுடையவைதான் எனத் தெரிய வரும்போது பின்பற்றப்பட்டாக வேண்டியவையாகவும் திகழ்கின்றன.

மொத்தத்தில் திருக்குர்ஆனுக்குத் தெளிவுரை பெற முயல்வோர் திருக்குர்ஆனின் மூலமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்கு மூலமுமே பெற வேண்டும். அவ்வாறு அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது "முஆது(ரழி) அவர்களுக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று, இஜ்திஹாது என்ற சுயநிர்ணய ஆற்றல் மூலம் தெளிவுரை பெற முயல வேண்டம்.

திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இருபத்தி மூன்றாண்டு காலத்தில் அதனுடன் ஒட்டி உறவாடி, அதன் வழியில் தமது அடிச்சுவடு ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து, நடந்து குர்ஆன் விரும்பும் இலட்சிய சமுதாயதாய் உருவாகி நின்ற, நபிகள் நாயகம்(ஸல்)அவாகளின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும். அவர்களிலும் குறிப்பாக
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு பின், அறநெறி வழுவா ஆட்சி நடத்திய நாற்பெரும் குடியரசு தலைவர்களான அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும். எனினும் இப்னு மஸ்ஊது(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஆகிய இருவரும் கூட "இஸ்ரவேலர்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்" என்ற நபிமார்களின் அனுமதிகேற்ப, இஸ்ரவேலர்களிடமிருந்து வாழையடி வாழையாக வந்த கருத்துகளைத் தமது திருமறைத் தெளிவுரைகளில் கலந்துவிட்டிருக்கின்றனர்.
ஆயினும் அவற்றை, இஸ்லாத்தின் கருத்துக்களுக்கு ஒத்து வரும் போது அதற்கொரு சான்றாகக் கொள்ளலாமே தவிர, அதனையே தீர்ந்த முடிவாகவும், உறுதியாகவும் நம்பிட முடியாது.
இஸ்ரவேலர்களின் மூலம் அறிவிக்கப்படுபவை, அறிஞர்களால் மூன்று வகைகளாக பகுக்கப்பட்டிருக்கின்றன.

(1) குர்ஆன், நபிமொழி மூலம் அவை நம்பத்தகுந்தவை என்று நிரூபிக்கப்பட்டவை.

(2) குர்ஆன் நபிமொழி மூலம் நம்பத்தகாதவை என்று நிரூபிக்கபட்டவை.

(3) இந்த இரண்டு வகைகளிலும் சேராத கதைகள், இவைகளை நாம் உண்மை என்றும் கூறத்தேவையில்லை. பொய் என்றும் அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றை நபிகள்(ஸல்) அவர்கள் அனுமதித்து இருப்பதால் எடுத்துச் சொல்வதில் தவறில்லை. எனினும், ஒன்றை நிரூபிக்கும் ஆதாரமாக அவற்றைப் பயன்படுத்த முடியாது.
இவற்றில் பெரும்பாலான கதைகளில் எவ்வித மார்க்க நன்மையும் இல்லை. சுவையூட்டுவதாக தமது திருமறைத் தெளிவுரைகளில், இவற்றை எடுத்துச் சொல்வதின் மூலமே பெரும்பாலும் அவர்களின் தெளிவுரைகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன.
(கஹ்ஃபு) குகை என்ற அத்தியாயத்தில் கூறப்படும் குகைவாசிகளின் பெயர்கள், அவர்களுடன் சென்ற நாயின் நிறம், அவர்களின் எண்ணிக்கை போன்றவற்றையும், மூஸா(அலை) அவர்களிடமிருந்த கைத்தடி எந்த மரத்தில் ஆனது என்பதையும், இப்ாஹிம்(அலை) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல்லாஹ், உயிர்ப்பித்துக் காட்டிய நான்கு பறவைகள் எவை என்பதையும், அந்த நான்கு பறவைகளையும் அல்லாஹ் ஏன் தெரிவு செய்தான் என்பதற்குக் கட்டிவிடப்பட்ட கதைகளையும், மூஸா(அலை) அவர்களின் சமூகத்தவரில், ஒருவர் கொல்லப்பட, கொல்லப்பட்டவரை உயிர்ப்பிக்க ஒரு மாட்டை அறுத்து, அதன் உறுப்புகளில் ஒன்றால் அடித்ததும், அவர் உயிர் பெற்ற வரலாற்றில், எந்த உறுப்பில் கொல்லப்பட்டவன் அடிக்கப்பட்டான் என்பதையும், மூஸா(அலை) அல்லாஹ்விடம் உரையாடிய போது நின்று பேசிய மரம் எந்த மரம் என்பதையும் இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம்.
இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டபடி குர்ஆனுக்கு "குர்ஆன் மூலம், நபிமொழி மூலம், ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும். இவர்களில் பெரும்பாலோர் மேற்கூறப்பட்ட நாயகத் தோழர்களிடம் மிக நெருங்கிப் பழகியவர்களும் அவர்களின் மாணவர்களுமாவார்கள்.

மேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
நஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று "தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்" என்று எச்சரிக்கின்றது.

எனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர்.
பேரறிஞர் பெருந்தகை இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் தங்களின் திருமறைத் தெளிவுரைக்குத் தந்திருக்கின்ற முன்னுரையை உங்கள் முன் வைத்திருக்கிறோம்.
அவர்கள் தந்துள்ள விளக்கங்களுக்கு உட்பட்டு திருமறைத் தெளிவுரையை "நஜாத்" மாத இதழில் தொடர்ந்து வெளியிட இருக்கிறோம். வாசகர்கள் தொடர்ந்து அதனைப் படித்து வரும்போது "இன்ஷா அல்லாஹ்" திருமறையின் சரியான தெளிவுரையைப் பெறும் வாய்ப்பினை பெறுவார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்தப் பணியை அவனுக்காகவே துவக்கி அவனுக்காகவே முடித்து, அதற்கான நன்மையை மறுமையில் நமக்கு வழங்கிட அவனிடமே பிரார்த்திக்கின்றோம்.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.[ 1986 மே,by அந்நஜாத்]

அன்பு சகோதரர்களே! மேலே நீங்கள் படித்த விளக்கம் என்பது, அந்நஜாத்தில் திருக்குர்'ஆன் விரிவுரை எழுதிய காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள், திருக்குர்'ஆனுக்கு விரிவிரை எழுத தொடங்குவதற்கு முன்பாக பிரபல மேதை இமாம் இப்னு கஸீர் அவர்களின் முன்னுரையை பதிவு செய்து, இமாம் இப்னு கஸீர் அவர்கள் எந்த வழிமுறையை காட்டினார்களோ அந்த வழிமுறையில் நான் திருக்குர்'ஆனுக்கு விரிவுரை எழுத இருக்கிறேன் என்று அறிஞர் பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் கூறுகிறார்கள்.
மேற்கண்ட செய்தியின் மூலம் திருக்குர்'ஆன் விரிவுரை எழுத விரும்பும் எவராகினும் பேன வேண்டிய விதிமுறைகள்;
  1. திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும்.
  2. அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும்.
  3. அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும்.
  4. அவர்களிலும் குறிப்பாக அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும்.
  5. ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும்.
மேற்கண்ட ஐந்து வழிமுறைகளை பின்பற்றாமல் குர்'ஆனில் விளக்கம் இல்லை; நபிமொழியில் விளக்கம் இல்லை எனு கூறிக்கொண்டு, தனது சொந்த வியாக்கியானத்தை திணிக்கக் கூடாது என்றும், கீழ்கண்டவாறு இமாம் இப்னு கஸீர் அவர்களின் கருத்தை பதிவு செய்கிறார் அறிஞர் பீ.எஸ்.அலாவுதீன்.

மேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
நஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று "தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்" என்று எச்சரிக்கின்றது.
எனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர்.

மேலே உள்ள விஷயங்களை காய்தல் உவத்தலின்றி படித்தால், குர்'ஆனை விளங்க குர்'ஆன் மட்டும் போதாது; நபிமொழி மட்டும் போதாது. சஹாபாக்களின் விளக்கம் வேண்டும், தாபியீன்களின் விளக்கம் வேண்டும் என்ற கருத்தை பீ.எஸ். அலாவுதீன் ஏற்றுள்ளார். பீ.எஸ். அலாவுதீனின்  இந்த விதிமுறையை பீஜேயும் ஒப்புக்கொண்டு அவர் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் அந்நஜாத்தில் இடம்பெற செய்துள்ளார். இதன் மூலம் பீஜேயும் அன்று குர்'ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது மட்டுமல்லாது அதையும் தாண்டி தாபியீன்கள் கருத்தையும்  ஏற்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது.

இன்று மார்க்கத்தில் நமது கருத்தை விட சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சொல்பவர்களை 'வழிகேடர்கள்' 'தடம் புரண்டவர்கள்' என்று விமர்சிக்கும் பீஜே, இவரது அண்ணனை வழிகேடர் என்று சொல்வாரா?  ஏன் அண்ணனின் கருத்தை வழிமொழிந்த பீஜே, தன்னைத் தானே 'வழிகேடர்' என்று சொல்லிக் கொள்வரா? சிந்தியுங்கள் மக்களே!

குர்'ஆனுக்கு நபித்தோழர்கள் விளக்கத்தை ஏற்காமல் இவரது மனோஇச்சை விளக்கத்தை தினித்ததால் ஏற்பட்ட விளைவுகள்  பட்டியலிடப்படும் இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தானா? அமர்ந்தானா? பீஜே அன்றும்-இன்றும்!

அந்நஜாத்தில் இடம்பெற்ற திருக்குர்'ஆன் விளக்கம் தொடரில், காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள்,  'அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தான் என்று திருக்குர்'ஆன் வசனத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். இது தவறு அர்ஷின் மீது 'அமர்ந்தான்' என்பதுதான் சரியாகும் என்று தவ்ஹீத் மூத்த அறிஞர் மவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ அவர்கள் சுட்டிக் காட்டியபோது அதை ஏற்க மறுத்து அறிஞர் பீஜே அளித்துள்ள பதில் பாரீர்;
 
கேள்வி; இஸ்லாமியக் கொள்கை விளக்கம் என்ற பகுதியில் அர்ஷின் மீது ஒழுங்குற அமைந்தான் என்று போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அமர்ந்தான் என்றே எழுதி இருக்க வேண்டும்.
மவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ, துபை. ஜஹாங்கீர் சுல்தான், துபை.
 
பதில்; 'இஸ்தவா' என்று திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள சொல்லுக்கு P.S. அலாவுதீன் அவர்கள் 'அமைந்தான்' என்று மொழி பெயர்த்துள்ளனர். அந்த வார்த்தைக்கு 'அமர்ந்தான்' என்றும் மொழி பெயர்த்துள்ளனர். அந்த வார்த்தைக்கு 'அமர்ந்தான்' என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது உங்கள் கருத்து. 'இஸ்தவா' என்ற சொல்லுக்கு 'உட்காருதல்' என்று நேரடியாகப் பொருளில்லை. விரிவான பொருளைக் கொண்ட ஒரு வார்த்தை அது. உட்காருதல், நிலைபெறுதல், ஆதிக்கம் செலுத்தல் போன்ற பல பொருள்களுக்கு இடம் தரக் கூடிய ஒரு வார்த்தை. அதற்கு 'அமர்ந்தான்' என்று பொருள் கொள்ளும் போது, அதன் விரிவான பொருள் சிதைக்கப்பட்டு, சுருங்கிய ஒரு பொருளைத் தரக் கூடியதாக அது ஆகின்றது. அதனால் தான், அதற்கு நிகரான விரிந்த பொருள் கொண்ட அமைந்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. P.S. அவர்கள் உயிருடன் இருக்கும் போதே இது பற்றி நானும், அவர்களும் விவாதித்த பின்னர் தான் 'அமைந்தான்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. 'இஸ்தவா' என்பதற்கு நேரடியாக 'அமர்ந்தான்' என்று பொருள் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. 'இஸ்தவல் மாவு' என்று அரபியர்கள் பயன்படுத்தும் சொல்லுக்கு 'தண்ணீர் அமர்ந்தது' என்று பொருள் கொள்ளப்படுவதில்லை. 'இஸ்தவத் அலல்ஜுதிய்யி என்ற குர்ஆன் வசனத்திற்கு, அமர்ந்தது என்று அங்கே பொருள் கொள்ளப்படுவதில்லை. இந்த இடங்களிலும்…. மற்றும் ஏனைய இடங்களிலும் 'அமைந்தான்' என்றெ பொருள் கொள்ளப்பட வேண்டும்' என்பதற்குரிய ஆதாரங்களை எடுத்துச் சொன்னால் நாம் ஏற்கிறோம். 'அமைந்தான்' என்பது. 'அமர்ந்தான்' என்ற பொருள் உட்பட வேறு பல பொருள்களையும் உள்ளடக்கிய அதே தரத்தில் உள்ள சொல் தான். எனவே 'அமைந்தான்' என்பது சரியான மொழி பெயர்ப்பு என்றே நாம் கருதுகிறோம்.[அந்நஜாத்: டிசம்பர், 1986 ]
 
மேற்கண்ட பதிலில் பீஜே, 'அமர்ந்தான்' என்று மொழியாக்கம் செய்தால் அது விரிவான பொருளை சிதைக்கிறது. எனவே 'அமைந்தான்' என்று மொழிபெயர்ப்பதுதான் சரி என்று சொல்லி, அன்று தனது  அண்ணனின் கூற்றுக்கு வக்காலத்து  வாங்கிய பீஜே, இன்றைக்கு 'அமர்ந்தான்' என்று கூறுவதுதான் சரி என்று அந்தர் பல்டியடித்து ஃபத்வா வழங்கியுள்ளதை இணைப்பை கிளிக்  செய்து படியுங்கள்; http://onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/arshil_amarnthan_enbathu_sariya/
 
இந்த புதிய ஃபத்வாவில் 'இஸ்தவா' என்ற வார்த்தை இடம்பெறும் வசனங்கள் அனைத்திற்கும் 'அமர்ந்தான்'  என்றும் 'அமர்தல்' என்றும் மொழிபெயர்த்துள்ள பீஜே, இறுதியாக 'இவ்வாறு அர்த்தம் செய்யக்கூடாது  என்பவர்கள் இவ்வார்த்தைகளுக்கு  வேறு விளக்கங்களைத் தருகிறார்கள். அந்த  விளக்கங்கள் அனைத்தும் அரபு இலக்கணப்படியும்,  குர்'ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றன' என்கிறார்.
 
அதாவது 'இஸ்தவா' என்ற சொல்லுக்கு 'அமர்ந்தான்' என்ற அர்த்தம் தவிர்த்து வேறு விளக்கங்கள் சரியல்ல என்று அழுத்தமாக பதிவு செய்கிறார்.இதன் மூலம் காலஞ்சென்ற தனது அண்ணன் விளக்கம் தவறு என்பதையும், அண்ணனுக்கு வக்காலத்து வாங்கி அன்று அந்நஜாத்தில் 'அமைந்தான்' என்பதுதான் சரி என்று தான் கூறியதும் குர்'ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தவறானது என்று ஒப்புக் கொள்கிறார்.
 
இதை இங்கே முன் வைப்பதற்கு காரணம் இவரது ஒரு மஸாயில் தவறு என்று பிறரால் சுட்டிக் காட்டப்பட்டால் ஏற்க மறுக்கும் இவரது மன முரண்டை  மக்கள் விளங்கிக் கொள்ளவும், இவரது கூற்றுக்கு தகுந்த ஆதாரமின்றி இவரே முரண்படுவதையும்   மக்கள் விளங்கிக் கொள்ளத்தான்.
 
நேரத்துக்கு நேரம் இவருக்கு இவரே முரண்படும் இந்த    மனோஇச்சை வாதியை  பின்பற்றுபவர்கள் சிந்திப்பார்களா?

சகோதரி மகளை திருமணம் செய்தவர்கள் நிலை; பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
முஸ்லிமல்லாத ஒருவர் தனது சகோதரி மகளை திருமணம் செய்திருந்த நிலையில் இஸ்லாத்தை  தழுவினால் அந்த திருமண உறவின் நிலை என்ன என்ற கேள்விக்கு அன்று அறிஞர் பீஜே அளித்துள்ள பதிலை படியுங்கள்;
 
ஐயம் : தனது உடன் பிறந்த சகோதரி மகளை மனம் செய்த ஒரு மாற்று மத தம்பதியினர், முஸ்லிமாக மாறினால் அவர்களின் திருமண உறவு தொடருமா? முடியுமா?
S.M. நாசர், தேங்கா பட்டிணம்.
தெளிவு : திருமணம் செய்து கொள்ளத் தகாத உறவுகளை அல்லாஹ் திருமறையில் 4 : 23 வசனத்தில் கூறும் போது சகோதரியின் மகள்களும் ஹராமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறான். எக்காரணத்தினாலும் சகோதரியின் மகளை ஒருவன் மணம் புரியக் கூடாது. இஸ்லாத்தை அவர்கள் தழுவினாலும் அந்த உறவு தொடரக் கூடாது. உடனடியாக அவர்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.
"குர்ஆனில் அல்லாஹ் இடுகின்ற கட்டளையை ஏற்கிறேன்" என்பதையும் உள்ளடக்கித்தான் ஒருவன் இஸ்லாத்தைத் தழுவுகிறான். குர்ஆனுடைய இந்தக் கட்டளைகளையும் ஏற்றே ஆக வேண்டும்.
"மூமின்களே! நீங்கள் இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்துவிடுங்கள்!" (அல்குர்ஆன் 2:28) என்று அல்லாஹ் ஆணையிடுகிறான். யூதர்களில் ஒரு பிரிவினர் இஸ்லாத்தை தழுவும் போது சனிக் கிழமையைத் தாங்கள் புனித நாளாகக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அதை நிராகரிக்கும் விதமாகவே இந்த வசனம் இறங்கியது (இப்னு கஸீர்)
இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களையும் ஏற்றுக் கொண்டு அதில் இணைபவர்கள் தான் இஸ்லாத்திற்கு வேண்டும்.
அவர்கள் கடந்த காலங்களில் கணவன், மனைவியாக வாழ்ந்த தவறான உறவை அல்லாஹ் மன்னிக்கிறான். மேலும் அந்தக் தவறு தொடர்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.[1987 மார்ச், அந்நஜாத்].
 
பீஜே அவர்களின் மேற்கண்ட பதிலை கவனமாக நீங்கள்  பார்த்தால், இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தான் திருமணம் செய்திருந்த சகோதரி மகளை உடனடியாக விவாகரத்து செய்யவேண்டும் என்கிறார். இஸ்லாத்தை தழுவும் ஒருவன் குர்'ஆனின் கட்டளையை ஏற்பதாக உறுதிமொழி அளித்தே இஸ்லாத்தில் இணைகிறான். எனவே குர்'ஆனின் கட்டளையான சகோதரி மகள் விசயத்தையும் அவன் ஏற்றே ஆகவேண்டும் என்கிறார். அது மட்டுமன்றி இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் ஏற்றுக்கொண்டு இணைய விரும்புபவர்கள் மட்டும் தான் இஸ்லாத்திற்கு வரவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக  முன் வைக்கிறார் பீஜே. ஆனால் இன்று இதே விஷயத்தில் அவரது நிலை என்ன?  இணைப்பை படியுங்கள்;
 
 
பீஜேயின் இந்த லேட்டஸ்ட் ஃபத்வாவில் இஸ்லாத்தில் ஒருவர் இணைவதற்கு அவர் மணந்திருந்த சகோதரி மகளை விவாகரத்து செய்து விட்டு வா என்று சொல்ல கூடாது என்கிறார். உண்மைதான். ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பின் அவரை  உடனடியாக தனது சகோதரி மகளை விவாகரத்து செய் என்று சொல்லக் கூடாது என்றும், சிறிது காலம் மார்க்க உபதேசங்களை கேட்டு பின்பு அவராகவே விவாகரத்து செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்  என்கிறார்.  இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தான் திருமணம் செய்திருந்த சகோதரி மகளை உடனடியாக விவாகரத்து செய்யவேண்டும் என்று அன்று சொன்ன பீஜே, இன்று அவகாசம் அளிக்க வேண்டும் என்று சொல்லி தனக்குத் தானே முரண்படுகிறார். மேலும் இவரது இந்த நவீன ஃபத்வாவிற்கு அவர் என்ற சான்றையும் வைக்க வில்லை. முழுக்க முழுக்க இவரது சொந்த மனோஇச்சையன்றி  வேறில்லை. இவரது கூற்றுப்படி இஸ்லாத்தை  ஏற்ற  ஒருவருக்கு அவகாசம் அளித்து அந்த அவகாச காலத்தில் தனக்கு அனுமதிக்கப்படாத அந்த அந்த மனைவியுடன்  உடலுறவு கொண்டால் அதை ஆகுமானது என்று பீஜே கூறுவரா? இது ஒருபுறமிருக்க, இந்த விசயத்திற்கு மார்க்கம் தெளிவான வழியை காட்டியுள்ளது.
 
இப்னு உமர்[ரலி] அவர்கள் கூறினார்கள்;
ஃகைலான் இப்னு சலமா[ரலி] அவர்களுக்கு பத்து மனைவியர் இருந்தனர். அவர் இஸ்லாத்தை தழுவியபோது அவருடன் அவரது மனைவியரும் இஸ்லாத்தை தழுவினர். அப்போது நபி[ஸல்] அவர்கள் அவரிடம், 'அவர்களில் நால்வரைத் தேர்ந்தெடுத்தக் கொள்ளும்படி[யும்] மற்றவர்களை விவாகரத்து செய்யும்படி[யும்] கட்டளையிட்டார்கள். நூல்; திர்மிதீ, பைஹகீ.
 
நாம் வைத்துள்ள மேற்கண்ட ஹதீஸில் இஸ்லாத்தை ஏற்ற ஃகைலான் இப்னு சலமா[ரலி] அவர்களுடன் அவரது பத்து மனைவியரும் இஸ்லாத்தை   ஏற்ற நிலையிலும், அந்த  சஹாபிக்கு நபியவர்கள் அவகாசம் அளிக்கவில்லை. நால்வரைத் தவிர மற்றவர்களை விவாகரத்து செய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்கள் என்றால், இதிலிருந்து புரிவது என்ன? இஸ்லாத்தை ஏற்ற ஒருவர்,  இஸ்லாத்திற்கு மாற்றமாக மனமுடித்திருந்தால் உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும் என்பதுதானே?  சொல்ல முடியாது, இந்த ஹதீஸில் 'உடனடியாக' விவாகரத்து செய் என்று நபியவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற கருத்து உள்ளதா? என்று  வார்த்தை   விளையாட்டை பீஜே செய்தாலும்  ஆச்சர்யமில்லை. பீஜேயிக்கு  ஹதீஸ்கள் முக்கியமல்ல. மாறாக அவரது  நோக்கமெல்லாம் முஸ்லிமல்லாதவர்கள் ஏற்கும் வகையில் சட்டங்களை பூசி மெழுகி சொல்வது தானே!

நபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; பீஜேயின் 'சூப்பர்' ஃபத்வா!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
அறிஞர் பீஜே அவர்கள், ஒரு ஹதீஸை வைத்து ஒரு சட்டம் சொல்லி விட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும், பின்னாளில் அவரே  அதே ஹதீஸை பலவீனம் என்று சொல்லி வேறு சட்டம் சொன்னால் அதையும் அப்படியே ஆமோதிப்பதையும்  அவரது அபிமானிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு காரணம் பீஜேயிக்கும்  தவறு ஏற்படும் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு, அவர் சொல்லும் அனைத்தையும் சரி காண்பது அவருக்கு தவறே ஏற்படாது என காட்டுவதாகவே  பீஜேயின் அபிமானிகளின் செயல்பாடுகள் உள்ளது. ஆனால் பீஜே ஒரு சாமான்யனுக்கு புரிந்த விஷயத்தைக் கூட புரியாமல் பல விஷயங்களில் ஃபத்வா வழங்கக் கூயயவர் என்பதற்கு ஒரு சான்று;
 
நபி[ஸல்] அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் சராசரி முஸ்லிமும் அறிந்த ஒன்றாகும். ஆனால் பீஜே இது குறித்து வழங்கிய ஃபத்வா பாரீர்;
 
  • நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று எழுதி இருந்தீர்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது "ரஸுலுல்லாஹ்" என்ற வார்த்தையைக் காபிர்கள் ஆட்சேபணை செய்த போது தங்கள் கையாலேயே அந்த வார்த்தையை அழித்ததாகக் கூறப்படுகிறதே! குறிப்பிட்ட அந்த வார்த்தையை மட்டும் அழிக்க வேண்டுமாயின் நிச்சயம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்? இதில் எது உண்மை?
K.A. முஹம்மது கோரி, த.பெ.எண். 6930, ஜித்தா.
இரண்டுமே உண்மைதான், குறிப்பிட்ட சில வார்த்தைகள் படிக்கத் தெரியாதவர்களும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. என் மகனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் அவர் பெயரை Mohamed என்று எழுதுவான். அவன் பெயர் ஆங்கிலத்தில் எங்காவது எழுதப்பட்டிருந்தால் சரியாகக் கண்டு பிடித்து விடுவான். ஆனால் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது.
எழுதவும், படிக்கவும் தெரியாத எத்தனையோ கிராமவாசிகள் தங்கள் கையெழுத்தை மட்டும் போடுவார்கள். அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று கூற முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இந்தக் கருத்தில் தான். அந்த மொழியில் உள்ள எல்லா சொற்களையும் எல்லா வார்த்தைகளையும் அவர்களால் எழுதவோ, படிக்கவோ இயலாது. அவர்கள் ஒரு சில சொற்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.1987 மே,அந்நஜாத்
 
மேற்கண்ட பீஜேயின் ஃபத்வாவில், நபி[ஸல்] அவர்களுக்கு  எழுதப் படிக்கத் தெரியாது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சில சொற்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று கூறியுள்ளார். இவரின் கூற்றுபடி நபி[ஸல்] அவர்கள் குறிப்பறிந்து அழித்தது 'முஹம்மது' என்ற வார்த்தை என்றால் ஓரளவு இவரது கூற்றில் அர்த்தமிருக்கும். ஆனால் நபியவர்கள் அழித்தது அல்லாஹ்வின் தூதர் என்ற வார்த்தையாகும். அவ்வாறாயின்  தனது பெயர் அல்லாத வேறு சொற்களையும் நபி[ஸல்] அறியக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று பீஜே சொல்ல வருகிறாரா? சில சொற்களை நபியவர்கள் அறியக்கூடியவராக இருந்தார்கள் என்றால் இறைவன் 'உம்மி நபி' என்று சொன்னதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே, குர்'ஆன் வசனத்திற்கு எதிராக போய் விடுமே என்றெல்லாம் கூட பீஜே கவலைப்படவில்லை. ஆனால் உண்மை நிலை என்ன? நபி[ஸல்] அவர்களுக்கு எழுதவோ- படிக்கவோ- வார்த்தைகளை அறிந்து கொள்ளவோ[ அது முஹம்மத் என்பதாக இருந்தாலும்] அவர்களுக்கு தெரியவே  தெரியாது. அப்படியாயின் ஒரு வார்த்தையை நபியவர்கள் அழித்தது எப்படி? இதோ விடை;
 
பராஉ(ரலி) அறிவித்தார்.

(ஹுதைபிய்யா ஆண்டில்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாள்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) எழுதலானார்கள். அப்போது அவர்கள், 'இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தமாகும்" என்று எழுதினார்கள். மக்காவாசிகளில், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்று) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, 'இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்த சமாதான ஒப்பந்தம்' என்று எழுதுங்கள்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்" என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களிடம், ' 'இறைத்தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள்" என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன்" என்று மறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்" என்று கேட்டார்கள். அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும் படி கூறுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ(ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆமாம் (புறப்பட வேண்டியது தான்)" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். நூல்; புகாரி எண்; 3184 ]
 
அலீ[ரலி]அவர்கள் சம்மந்தப்பட்ட வார்த்தையை அடையாளம் காட்டிய பின்பே நபியவர்கள் அதை அழித்தார்கள் என்று புகாரியிலேயே ஹதீஸ் இருக்கும் போது அதைக் கூட கவனிக்காமல் இவர் ஃபத்வா வழங்குகிறார் என்றால் இவரது பொடுபோக்கை விளங்கிக் கொள்ளலாம்.
 
குறிப்பு; வழக்கம் போல இப்போது இந்த விஷயத்திலும் பீஜே தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டார்  என்றாலும், இவர் மார்க்க சட்ட விஷயத்தில் எவ்வளவு மேம் போக்கானவர் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவே இங்கே இதை பதிவு செய்கிறோம். எனவே பீஜே சொல்லும் சட்டத்தை அப்படியே நம்பி விடாமல் ஆய்வு செய்து அங்கரிக்க வேண்டும். இல்லையேல் அமல்கள் பாழாகும் என்று அவரது அபிமானிகளுக்கு அறிவுறுத்துகிறோம்.

காயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
காயிப் ஜனாஸா தொழுகை தொழலாமா என்பதில் பீஜே தொடர்ந்து முரண்பட்டு  வருகிறார். இந்த மஸாயில் பிரச்சினையில் பீஜே'யின் முதல் பரிமாணம்;
 
கேள்வி: காயிப் ஜனாஸா தொழலாமா? ஹனபி மத்ஹப் கூடாது எனிகிறார்களே?  – T. ஷேக் ஜாகிர் ஹுஸைன், கடையநல்லூர்.
பதில்: தொழலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு வஸல்லம் வெளியூர் சென்றிருந்த போது, உம்முஸஃது என்பவர் இறந்து விடுகிறார். ஒரு மாதம் கழித்து மதீனா வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள், காயிப் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள் என்று திர்மிதீயில் ஹதீஸ் உள்ளது. இன்னும் பைகஹீ தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் காயிப் ஜனாஸா பற்றி ஹதீஸ்கள் உள்ளன. இவைகள் காயிப் ஜனாஸாத் தொழலாம் என்று தெளிவாகக் காட்டுகின்றன. [1986 அக்டோபர் அந்நஜாத்]
 
மேற்கண்ட ஃபத்வாவில் காயிப் ஜனாஸா கூடும் என்பதற்கு திர்மிதி உள்ளிட்ட ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது என்று கூறிய பீஜே, பின்னாளில்  காயிப் ஜனாஸா கூடாது என்ற சட்டத்தை அறிவித்தார். அப்படியாயின் கூடும் என்பதற்கு ஆதாரமாக இவர் வைத்த ஹதீஸ்களின் நிலை குறித்த இவரின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், அந்த ஹதீஸ்களை கண்டு கொள்ளாமல் காயிப் ஜனாஸா கூடாது என்று அவர் வழங்கிய ஆய்வை[?] படிக்க இங்கே கிளிக் செய்க; http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/kayip_janaasa_eppothu/
 
முந்தைய ஃபத்வாவில், ஒருமாதம் கழித்து நபியவர்கள் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள் எனவே கூடும் என்றவர், பிந்தைய பத்வாவில்,  தொழுகை நடத்தப்பட்ட ஒரு ஜனாஸாவுக்கு மீண்டும் ஜனாஸா தொழுகை கூடாது என்கிறார். இதிலாவது இவர் உறுதியாக உள்ளாரா என்றால் இல்லை. காயிப் ஜனாஸா விசயத்தில் இவர் [அதாவது இவரது கண்ணசைவில் செயல்படும் ஜமாஅத்] மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதை படியுங்கள்;
 
உணர்வு வார இதழில், [15;42 ] ''காயிப் ஜனாஸா தொழுகை' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
 
''நல்ல கவுண்டன் பாளையம் தவ்ஹீத் கல்லூரி ஆலிமா ஒருவர் மரணித்துவிட, நபிவழியின் அடிப்படையிலேயே அவருக்கான இறுதிக் காரியங்கள்  அனைத்தும் நடக்கவேண்டும் என்று மரணித்தவரின் தாயார் உள்ளிட்டோரின் வேண்டுகோளை புறந்தள்ளி, சுன்னத் ஜமாஅத்தினர் ஜனாஸா தொழுகை நடத்தி விட்டார்களாம். பிறகு பீஜே ஜமாஅத்தினர்,மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி தனியாக, இறந்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக காயிப் ஜனாஸா [பிரேதம் இல்லாமல் நடத்துவது] தொழுகை நடத்தினார்களாம்.
 
மேற்கண்ட செய்தியை கவனமாக  படியுங்கள். ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்ட ஒரு பெண்ணிற்கு இவரது ஜமாஅத், மீண்டும் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தியுள்ளது. இந்த செய்திக்கும் பீஜேயிக்கும் சம்மந்தமில்லை  என்று கூறி தப்பிக்க முடியாது. ஏனெனில், மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி  [மாநிலத் தலைவர் பீஜேயின் ஆலோசனையின் படி]   நடந்துள்ளது.
 
மேற்கண்ட விஷயங்களை மாச்சர்யமின்றி படித்தால், இவர் ஒரு மஸாயில் பிரச்சினையில் நாளுக்கொரு அவதாரம் எடுப்பவர் என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

நபியும்-ரசூலும் ஒன்றா? பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
அறிஞர் பீஜே, நபியும்- ரசூலும் ஒன்றுதான் என்ற கொள்கையை இப்போது கொண்டிருக்கிறார். இதே அறிஞர் பீஜே நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று அன்று வழங்கிய ஃபத்வா'வை கீழே படியுங்கள்;
 
கேள்வி: நபி, ரசூல் வேறுபாடு என்ன? நபிமார்கள் எத்தனை? ரசூல்மார்கள் எத்தனை? K.நதீம் அஹ்மது, ஆம்பூர்.
 
பதில்: முந்திய சமுதாயத்துக்கு இருந்த சட்டங்களில் சில மாறுதல்களுடன் புதிய சட்டங்கள் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட இறைதூதரை ரசூல் என்று கூறுகிறோம். ஒரு ரசூல் கொண்டு வந்த சட்டங்கள் மறக்கப்பட்டு விட்ட கால கட்டத்தில் அந்தச் சட்டங்களுக்குப் புத்துயிர் ஊட்ட இறைவனால் அனுப்பபட்டவர் நபி எனப்படுவார். எண்ணிக்கை பற்றி பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அல்லாஹ் அனுப்பிய அனைவரையும் ஏற்றுக் கொள்வதாகப் பொதுப்படையாக நாம் நம்பிக்கை  கொள்ளவேண்டும். அல்லாஹ்வும், அவனது ரசூல் என்று கூறினார்களோ அவர்களை அவ்வாறே ஏற்க வேண்டும்.
-அந்நஜாத் 1986 ஆகஸ்ட்
 
மேற்கண்ட ஃபத்வா'வில் நபி வேறு; ரஸூல் வேறு என்று தெளிவாக குறிப்பிடுகிறார் பீஜே. மேலும் தனது இந்த தீர்ப்பு குர்'ஆனின் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் பீஜே கூறுவதை கீழ்கண்ட ஃபத்வா'வில் படியுங்கள்;
 
ரசூல், நபிக்கு உள்ள வேறுபாட்டைச் சென்ற இதழில் எழுதி இருந்தீர்கள்! அந்த விளக்கம் குர்ஆன், ஹதீஸிலிருந்து பெறப் பட்டதா?
S.A. இப்னு அப்துல்லா, அம்மாபட்டினம்.
ஆமாம்! குர்ஆனிலிருந்து பெறப்பட்டதுதான்.
"நாம் தவ்ராத்தை இறக்கியருளினோம். அதில் நேர்வழியும் பிரகாசமும் உண்டு. அதைக் கொண்டு பல நபிமார்கள் தீர்ப்பு வழங்குவர்" (அல்குர்ஆன் 5:44)
இந்த இறைவசனம், "மூஸா" என்ற ரசூலுக்கு அருளப்பட்ட தவ்ராத்தை அடிப்படையாகக் கொண்டு, பல நபிமார்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்" என்று தெளிவாகின்றது.
-அந்நஜாத்1986 அக்டோபர் 

நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்றும் குர்'ஆன் அடிப்படையில் இருவரும் வெவ்வேறானவர்கள் என்றும் தீர்ப்பளித்த பீஜே, இன்று நபியும் ரசூலும் ஒன்றே என்று வாதிடுவதை இந்த இணைப்பை கிளிக் செய்து படியுங்கள்;
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/398/
 
அன்று நபி வேறு; ரஸூல் வேறு என்று ஃபத்வா வழங்கும் போதும் தனது கூற்றுக்கு குர்'ஆனை ஆதாரம் வைத்தார். இன்று அந்த 5:44வசனத்தின் அர்த்தம் மாறி விட்டதா? அல்லது அந்த வசனம் குர்'ஆனிலிருந்து மறைந்து விட்டதா? இப்போது நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று கூறுவதற்கும் வேறு பல குர்'ஆன் வசனங்களை ஆதாரமாக வைக்கிறார்.
 
இவர் சில சட்டங்களை மாற்றியது குறித்து கேள்வி எழுப்பினால், ''சம்மந்தப்பட்ட இந்த ஹதீஸ் இப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது; உடனே மாற்றிக் கொண்டேன் என்பார். ஆனால் இந்த நபி-ரஸூல் பிரச்சினையில் அன்றும் சரி, இன்றும் சரி  குர்'ஆன் வசனங்களை வைத்தே இரு வேறு முரண்பட்ட தீர்ப்பை வழங்குகிறார். அவ்வாறாயின் நபியும்-ரசூலும் ஒன்றுதான் என்று கூறும் இந்த வசனங்கள் கூட இவரது கவனத்திற்கு இப்போதுதான் வந்ததா?
 
இதன் மூலம் ஒன்று தெளிவாக புலப்படுகிறது. இவர் அன்றும் இன்றும் தான் கொள்ளும் கருத்திற்கு ஏற்ப உள்ள வசனங்களை மட்டும் கையிலெடுத்து, கண்டபடி தீர்ப்பு வழங்கி, கண்ட நேரத்தில் மாற்றிக் கொள்பவர் என்பதற்கு இவரது இந்த நபி-ரஸூல் சட்ட முரண்பாடும் ஒரு சான்றாக திகழ்கிறது. சிந்திப்பவர்கள் இவரது முரண்பாட்டை விளங்கிக் கொள்வார்கள். 

மத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையனிய ஃபத்வா!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ய்வு என்ற பெயரில் அவ்வப்போது மார்க்கத்தை மாற்றும் பீஜேயும் அவரது அபிமானிகளும் சமீபத்தில் கரண்டைக்கு கீழ் ஆடையணியலாம் என்ற ஃபத்வாவை  வழங்கியிருந்தனர்.  இதில் வேடிக்கை  என்னவென்றால் கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது  என்பதற்கு அடுக்கடுக்கான ஹதீஸ் ஆதாரங்களை அவர்களே அந்த ஆய்வில் வைத்துள்ளார்கள். அவைகளில் சில;
  1. ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :
    நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். நான் கீழாடையை எது வரைக்கும அணியலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள். இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.நூல் : அஹ்மது(15389)
  2. கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை அணிந்துகொள். கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அஹ்மது (22121)
  3. உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பா விட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அபூதாவுத் (3562)
  4. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.நூல் : திர்மிதி (1705)
  5. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
    இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : அஹ்மது (7519)
  6. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக் கால்கள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம் (ரலி)நூல் : அபூதாவுத் (3562)

  7. மேற்கண்ட ஹதீஸ்கள் மட்டுமன்றி இன்னும் இதுபோன்ற  சில ஹதீஸ்களையும் வைத்து விட்டு, கடைசியில் தங்களது வழக்கமான பாணியான வார்த்தை விளையாட்டை நடத்தியுள்ளார்கள். கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது என்று வரும் ஹதீஸ்களில் 'இஸ்பால்' செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர் என்று கூறிவிட்டு,
கீழாடை தரையில் படுமாறு ஆடையை இறக்கி அணிவதையே மார்க்கம் தடை செய்கின்றது. கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்பதன் கருத்து ஆடை தரையில் இழுபடாத வகையில் அணியலாம் என்பதாகும். கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்பதன் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பதாகும்.
கணுக்கால்களின் முன் பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
எனவே ஒருவர் தன் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையாகும்.என்று தீர்ப்பளித்துள்ளனர்.
 
கவனமாக கவனிக்கக் வேண்டும். கணுக்கால் வரை ஆடையணிய அனுமதித்த நபி[ஸல்] அவர்கள், 'இஸ்பால்' செய்வதை விட்டும் அதாவது கணுக்காலுக்கு கீழே தரையை தொடும் அளவுக்கு ஆடையனிவதை எச்சரிக்கிறேன் என்று சொல்கிறார்கள்.  கணுக்கால் வரை என்று சட்டம் சொன்ன நபியவர்களுக்கு தரையை தொடாமல் ஆடையணிந்து கொள் என்று சொல்லத் தெரியாதா? இதிலிருந்து தெரிவது என்ன? கீழாடையின்  அதிக பட்ச எல்லை என்பது கணுக்கால் வரை தானே?
 
ஒருவர் சொல்கிறார் தொண்டி எல்லையோடு நின்று கொள்; இதைவிட்டும் தாண்டுவதை நான் எச்சரிக்கிறேன் என்கிறார். இதிலிருந்து என்ன சட்டம் எடுக்க முடியும்? தொண்டி தான் இறுதி எல்லை அதை விட்டும் தாண்டக் கூடாது என்பதுதானே!ஆனால் ஆய்வாளர்  
பீஜேயின் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. உடனே ஒருவரிடம், ''தொண்டி எல்லையை தாண்டக்கூடாது  என்பதின் அர்த்தம்  என்ன? என்று கேட்கிறார். அவரோ தொண்டி எல்லையை தாண்டுதல் என்றால் தொண்டிக்கு அடுத்த ஊரை நெருங்குவதாகும் என்கிறார். அப்படியானால் அந்த ஊரைத் தொடாமல் ஒரு அடி  முன்னால்  நின்று கொள்வது தவறில்லை என்று பீஜே சட்டம் சொல்லி விட்டார் என்றால் 'தொண்டியை தாண்டாதே  என்று கட்டளையிட்டதற்கு மதிப்புண்டா?
 
மேலும், இவர்கள் அடிக்கடி மேடையில் மத்ஹபை குறித்து ஒன்று சொல்வார்கள். அதிகமாக சாப்பிட்டால் போதை தருவதை குறைவாக சாப்பிட்டால் ஹராம் இல்லை. அதாவது பத்துக் கிளாஸ் அடித்தால் தான் போதை ஏறும் என்றால், ஒன்பது கிளாஸ் அடிப்பது  தவறில்லை என்று மத்ஹபு சட்டம் சொல்கிறது என்று கிண்டலடிப்பார்கள். அதே பாணியில் இவர்களின் இந்த தீர்ப்பு குறித்து சொல்வதாக இருந்தால், 'கரண்டைக்கு கீழ் ஆடையணிதல் என்பது தரையில் இழுபட்டால் ஹராம். தரையை தொட்டால் ஹராமில்லை' என்பதுதான்.
 
மேலும், இவர்கள் வைத்துள்ள அகராதிப் படி பார்த்தால்  கூட 'இஸ்பால்' என்பது ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுதலாகும் என்பதுதானே! ஆனால் இவர்களோ அதையும் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை  என்று தீர்ப்பளிப்பது மனோ இச்சையின் வெளிப்பாடுதானே? தரையை தொடுவதற்கும், தரையில் இழுபடுவதற்கும் வேறுபாடு கூட விளங்க வில்லையா?
 
கரண்டைக்கு கீழே ஆடையணிதல் நரகத்திற்கு இட்டுச் செல்லும் செயல், பெருமைக்குரிய செயல், அல்லாஹ் விரும்பாத செயல் என்றெல்லாம் தெளிவாக இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொல்லியிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு மாற்றமாக தரையில் இழுபடாமல் ஆடை அணிந்தால் தவறில்லை என்று ஃ பத்வா வழங்கும் இவர்களை சமுதாயம் என்று அடையாளம் காணப் போகிறது?
அதெல்லாம் சரி! தொழுகைக்கு 'டவுசர்' போதும்; மற்ற நேரங்களில் தரையை தொடும் அளவுக்கு ஆடையணியனுமா?

-எண்ணம்; சகோதரர் பக்ருதீன்.
எழுத்து; முகவைஅப்பாஸ்.

பெண்கள் ஜியாரத் செய்யலாமா? பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா? என்றால் செய்யக் கூடாது என்று அறிஞர் பீஜே உட்பட அவர் தரப்பு ஆதரவாளர்கள் பல காலமாக எழுத்திலும் பேச்சிலும் செய்துவந்ததை அனைவரும் அறிவோம். எந்த அளவுக்கென்றால் இறந்தவர்கள்  கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்யலாம் என்று சொல்பவர்களை 'பறேலவிகள்' என்று கடுமையாக அன்று அந்நஜாத்தில்  விமர்சித்தார் அறிஞர் பீஜே. ஆனால் இன்று ஆய்வு என்ற பெயரில் பெண்கள் ஜியாரத் கூடும் என்ற ஃபத்வாவை வழங்கி இவரே 'பரேலவி'யாக காட்சி தருகிறார். பெண்கள் கப்ர் ஜியாரத் கூடும் என்பதற்கு இவர் வைத்துள்ள ஆதாரம்;

1 .ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் "அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸலாமு அலா அஹ்ரித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்ரிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்" என்று சொல்" என்றார்கள்.(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்ரிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங் களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)
நூல் முஸ்­லிம் 1774

இறந்தவர் கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்ய இன்று பீஜே ஆதாரமாக காட்டும் மேற்கண்ட ஹதீஸ் குறித்து அந்நஜாத்தில் 1987 மே மாதம் செய்த  விமர்சனம் பாரீர்;

"இறந்தவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்" என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். "மூமின்களாகிய கபுருவாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் நம்மில் முன் சென்றவர்களுக்கும் இனி வருபவர்களுக்கும் அல்லாஹ் மன்னிக்கட்டும்". (என்ற பொருள் கொண்ட வார்த்தைகளை) ஓதும்படி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள் : முஸ்லிம், நஸயீ

இது பெண்கள் ஜியாரத்தை ஆதரிப்பவர்களின் இரண்டாவது ஆதாரம். இதில் அவர்களின் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை எவரும் உணரலாம். ஏனெனினல் "கபுரை ஜியாரத்து செய்யும் போது நான் என்ன ஓத வேண்டும்" என்று ஆயிஷா(ரழி) கேட்கவில்லை. மாறாக கபுராளிகளுக்காக (இறந்தவர்களுக்காக) நான் என்ன கூற வேண்டும் என்று தான் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த அந்த துஆவை வீட்டிலிருந்து கொண்டே இறந்தவர்களுக்காக நாம் ஒதலாம். கபுருக்கு சென்று ஜியாரத்து செய்வது பற்றி இதில் குறிப்பிடப்படவே இல்லை . மேலும் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸ் நீண்ட ஹதீஸின் இறுதிப் பகுதியாகும். அதன் முன் பகுதிகளையும் நாம் கவனித்தால் பெண்கள் ஜியாரத்து கூடாது என்ற முடிவுக்கே வரமுடியும். அந்த முற்பகுதியைப் பார்ப்போம்:

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
என் இல்லத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்கி இருக்கும் போது தங்கள் மேலங்கியைக் களைந்து, செருப்பைக் கழற்றி, காலருக்கே வைத்து பூ, தங்கள் படுக்கையின் மீது ஒருக்களித்துப் படுத்தார்கள். அவர்கள் தீடிரென மேலங்கிளை அணிந்து கொண்டு, செருப்பை மாட்டிக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு வெளியேறினார்கள். நானும் முக்காடிட்டுக் கொண்டு உடலை மறைத்துக் கொண்டு அவர்களின் அடிச்சுவட்டைத் தொடர்ந்தேன். "பகீஃ" என்ற கபரஸ்தானுக்கு வந்தார்கள். அவர்களுக்காக துஆச் செய்தார்கள்.
அவர்கள் திரும்பும் போது நானும் திரும்பினேன், அவர்கள் வேகமாக நடக்க நான் (அதைவிட ) வேகமாக வந்தேன். (எப்படியோ) அவர்களுக்கு முன்பே வீடு வந்து ஒருக்களித்துப் படுத்தேன். உடன் அவர்களும் வந்தனர். என்னைக் கண்ட அவர்கள் "ஆயிஷா! ஏன் உனக்கு மூச்சிரைக்கிறது?" என்று கேட்டார்கள்'. (அதாவது வேகமாக விரைந்து வந்ததால் ஆயிஷா(ரழி) மூச்சு இறைக்கப்படுத்திருந்தார்கள்)
நான், ஒன்றுமில்லை என்று கூறினேன். காரணத்தை நீ கூறாவிட்டால் அல்லாஹ் எனக்கு அறிவிப்பான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நடந்ததைக் கூறினேன். உடனே எனக்கு வேதனை ஏற்படும் விதமாக என் நெஞ்சில் அறைந்தார்கள், பிறகு தான் கபரஸ்தானுக்குச் சென்ற காரணத்தைப் பின்வருமாறு கூறினார்கள். ஜிப்ரில்(அலை) அவர்கள் வந்து "பகீஃ" கபரஸ்தானில் அடங்கப்பட்டவர்களுக்காக அங்கே வந்து பாவமன்னிப்புக் கோரும் படி உன் இறைவன் கட்டளையிட்டான் என்று கூறினார்கள். (அதனால் அங்கே சென்று அவர்களுக்காக மன்னிப்புக் கோரினேன்)
"அவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்" என்று கேட்டேன்.
"முமீன்களாகிய கபுர்வாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் . நம்மில் முன் செல்பவர்களுக்கும், இனி வருபவர்களுக்கும் அல்லாஹ் மன்னிக்கட்டும் என்ற பொருள் கொண்ட வார்த்தையைச் சொல்!" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸின் முற்பகுதியை (எதிர்த்தரப்பினர் அதைக் குறிப்பிட மாட்டார்கள்) க்கவனித்தால் பெண்கள் ஜியாரத் கூடாது என்று கருதத்தான் ஆதாரமுள்ளது. அன்னை ஆயிஷா(ரழி) நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் சென்று விட்டு, அவர்களுக்குத் தெரியாமலே விரைந்து வந்து ஒன்றும் நடவாதது போல் இருந்து விடப் பார்க்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்ட போதும் "ஒன்றுமில்லை" என்றே பதில் கூறுகிறார்கள். இதிலிருந்தே பெண்கள் கப்ருகளுக்குச் செல்வதை நபி(ஸல்) அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நன்கு தெரியவரும். நடந்ததைக் கூறியதும் நெஞ்சில் வேதனை ஏற்படும் அளவுக்கு அறைகிறார்கள் என்ற வாசகமும் கவனிக்கத்தக்கது.
இந்த ஹதீஸிலும் பெண்கள் ஜியாரத் செய்யலாம் என்பதற்கு நேரடியான ஆதாரமும் இல்லை. சுற்றி வளைத்துக் கொண்டாவது அதற்கு ஆதாரம் உண்டா என்றால் அதுவுமில்லை. மாறாக கூடாது" என்று கருதத்தான் அதில் இடம் உண்டு.என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே இன்று அதை மறந்து அதே ஹதீஸை பெண்கள் ஜியாரத்துக்கு  ஆதாரமாக காட்டுகிறார் என்றால் இவரின் முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுங்கள்.

பீஜேயின் ஆதாரம் 2 ;
நீங்கள் கபுருகளை ஜியாரத்து செய்ய நான் ஏற்கனவே தடை விதித்திருக்கிறேன். இனி நீங்கள் கபுருகளை ஜியாரத் செய்யுங்கள். அறிவிப்பவர் : புரைதா(ரழி) நூல் : முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸை குறித்து அன்று பீஜே செய்த விமர்சனம் பாரீர்;
பெண்களுக்கு ஜியாரத்து செய்வதை தடுக்கப்பட்டு தெளிவான பல ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இவர்களின் இந்த வாதத்தில் நியாயமிருக்கும். ஆனால் தடை செய்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அவற்றை பார்ப்போம்.

"நபி(ஸல்) அவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை 'லஃனத்' செய்தனர்.
இது நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி. இந்த நபிமொழியை இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்), இமாம் திர்மிதீ, இமாம் இப்னுமாஜா ஆகிய மூவரும் மூன்று வழிகளில் அறிவிக்கின்றனர். அபுஹுரைரா(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஹஸ்ஸான்(ரழி) ஆகிய மூன்று சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கின்றர். இந்த மூன்று ஹதீஸ்களையும் மேற்கூறிய மூன்று இமாம்களும் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இமாம் நஸயீ, இமாம் இப்னு ஹிப்பான் இருவரும், இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாகவும், அபூஹுரைரா(ரழி) அவர்கள் மூலமாகவும் இந்த நபி மொழியை அறிவிக்கின்றனர்.
இமாம் அபூதாவுது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாக இதை அறிவிக்கின்றனர்.
இத்தனை வழிகளில் அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தான் நாம் மேலே எடுத்துக் காட்டிய ஹதீஸ்.
இந்த ஹதீஸில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லாமல் பெண்கள் ஜியாரத் லஃனத்துக்கு உரியது. அதுவும் அல்லாஹ்வின் திருத்தூதரின் லஃனத்துக்கு உரியது என்பது தெளிவாக்கப்படுகிறது. -[அந்நஜாத் 1987 மே]

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபியவர்கள் சபித்தார்கள் என்ற ஹதீஸ் இருப்பதால், நீங்கள் கபுருகளை ஜியாரத்து செய்ய நான் ஏற்கனவே தடை விதித்திருக்கிறேன். இனி நீங்கள் கபுருகளை ஜியாரத் செய்யுங்கள். என்ற ஹதீஸை வைத்து பெண்களுக்கு ஜியாரத்துக்கான  பொது அனுமதியாக கருத  முடியாது என்று அன்று சொன்ன  பீஜே, இன்று அந்த ஹதீஸை பலவீனம் என்கிறார்.

கப்ருகளை தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஹீரைரா ர­லி அவர்கள் அறிவித்த செய்தி திர்மிதியில் 976 ல் இடம் பெற்றுள்ளது.
ஆனால் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அம்ரு பின் அபீ ஸலமா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் தீர்பளித்திருக்கிறார்கள். 

என்று கூறி  பெண்களுக்கு கப்ர் ஜியாரத் கூடும் என்கிறார். அன்று வழிகளில் அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று சொன்னவர், இன்று தனது நிலைப்பாட்டிற்காக அந்த ஹதீஸ் பலவீனமானதாக கூறுகிறார். இப்படி ஒவ்வொரு மஸாயில் பிரச்சினையிலும் நாளுக்கொரு முரண்பாட்டை கடைபிடிக்கும் இவரை மக்களே புரிந்து கொள்ளுங்கள்.
 

'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடலாமா? பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
திருக்குர்'ஆன் மொழிபெயர்ப்புகளில் பீஜே மொழிபெயர்ப்பு நீங்கலாக மற்ற எல்லா மொழிபெயர்ப்புகளிலும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறு குறிப்பிடப்படுவது சரியா? என்ற கேள்விக்கு அந்நஜாத் இதழில் அறிஞர் பீஜே அன்று சொன்ன பதில் உங்கள் பார்வைக்கு;
 
'யாராக இருந்தாலும் ஆதாரம் கேளுங்கள்' என்று எழுதி இருந்தீர்கள்! குர்ஆனில் மக்கீ, மதனீ என்று கூறுவதற்கு ஆதாரம் உண்டா?
-மவ்லவி A.R. முஹம்மது அஸ்அது, அம்மாபட்டினம்.
 
இதில் என்ன ஆதாரம் கேட்கிறீர்கள்? மக்கீ என்றால் மக்காவில் இறங்கியது என்று பொருள் மதனீ என்றால் மதீனா வாழ்வில் இறங்கியது என்று பொருள். மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்? பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் 'பார்ஸீ' என்று சொல்லவில்லையா? அவை எங்கே இறங்கின என்ற சரித்திரக் குறிப்பை உணர்த்துவதற்கு அப்படிக் கூறுகிறோம்.[1987 மே,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!  அந்நஜாத்]
 
மேற்கண்ட அறிஞர் பீஜேயின்  பதிலை நிதானமாக  படித்தால், ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடுவது தவறு அல்ல என்றும், அதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றும் கூறியதோடு,  மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்? பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் 'பார்ஸீ' என்று சொல்லவில்லையா? என்று அறிவுப்பூர்வமாக வாதம் வைத்த அறிஞர் பீஜே, இன்று 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடுவது தவறு என்கிறார்.
 
''எனவே ஒரு அத்தியாயம் முழுவதும் மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதீனாவில் அருளப்பட்டது என்று குறிப்பிடுவதாக இருந்தால் அதற்கு தெளிவான ஆதாரங்கள்  இருக்க வேண்டும். இத்தகைய ஆதாரங்கள்  எதுவுமின்றியே மக்காவில் அருளப்பட்டவை  மதீனாவில் அருளப்பட்டவை  என்று அத்தியாயங்களின் துவக்கத்தில் அச்சிடுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது' என்கிறார்.
 
நன்றாக கவனிக்க வேண்டும் 'மக்கீ' அல்லது 'மதனீ'  என்று குறிப்பிடுவதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றவர், இன்று தெளிவான ஆதாரம்  வேண்டும் என்கிறார். அன்று சரியாக தெரிந்ததை  மாற்ற இன்று இவர் எந்த ஆதாரத்தை கண்டு விட்டார்? ஏனிந்த முரண்பாடு? எல்லாம் மனோ இச்சையின் வெளிப்பாடு.