திங்கள், 25 ஜூன், 2012

பீஜே அவர்களுக்கு ஒரு அப்பாவி சகோதரனின் கடிதம்.

அஸ்ஸலாமு அலைக்கும் ,,,
வல்ல ரஹமானை போற்றி புகழ்ந்தவனாக ...

அன்புள்ள அண்ணன் pj அவர்களுக்கு நலம், நலம் பல சூழட்டும் ...

நிற்க ; உங்களின் மார்க்க பிரசாரத்தினால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன் ,,நீங்கள் பேசிய எந்த 
தலைப்புள்ள குறுந்தகடுகள் வெளி ஆனாலும் முதலில் அதை வாங்கி பார்த்துவிட்டுத்தான் அடுத்த 
வேலை பார்ப்பேன் ,,அந்த அளவிற்கு உங்களின் பேச்சாற்றலையும், மார்க்க விளக்கங்களையும் 
பின்பற்றகூடியவன். உங்களை பற்றி யார் தவறாக பேசினாலும் அவர்களிடம் மல்லுக்கு நிற்பவனில் 
முதலாமானவன் என்றுகூட சொல்லலாம், 
ஒரு முறை எங்கள் ஊருக்கு பயணம் சென்று இருந்தேன் [காரைக்கால்] அப்பொழுது ஜாக் கில் இருக்கும் 
எனது பால்ய சிநேகிதரிடம் மார்க்க சம்மந்தமாக விவாதிக்க நேரிட்டது, அப்பொழுது என் நண்பர் ஒரு 
குர்ஆன் வசனத்தை குறிப்பிட்டு ,[,49:6முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.,,] கடந்த இரு வருடங்களாக உங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை   பற்றியும் நீங்கள் மற்றவர்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் பற்றியும் செய்திகளை  குறிபிட்டார் ,,,அந்த நொடிப்பொழுது அவரிடம் பேசாமல் வீடு திரும்பி விட்டேன் அன்றைக்கு முழுதும் என்னுள் எதோ உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது ,,அதற்க்கு இரண்டு நாட்கள் கழித்து நான் பள்ளிக்கு தொழ சென்ற நேரம் . சஹாபாக்களை 
பின்பற்றுவது குறித்த குறுந்தகடை சில சகோதரர்கள் விநியோகம் செய்தார்கள் ,,அதை அங்கு உள்ள நம் tntj சகோதர்கள்  கொடுக்க கூடாது என்று தடை செய்தார்கள் ,,,மார்க்க விஷயங்களில் உள்ள கருத்து முரண்பாடுகளை 
மற்றவர்கள் தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது அதை என் நம் சகோதரர்கள் தடுக்கிறார்கள் என்று 
நான் சில சகோதரர்களிடம் முனங்கி கொண்டே வீடு திரும்பி விட்டேன் ,,,பிறகு உணர்வில் வந்த செய்தியை கண்டு 
அதிர்ச்சி யுற்றேன் ,அதில் அந்த குறுந்தகடை பெண்கள் மூலம் விநியோகித்தார்கள் என்றும் அது தவ்ஹீத் ஜமாஅத் 
பெயரை சொல்லி விநியோகித்தார்கள் எனவும் விநியோகித்தவர்கள் பச்சிளம் பாலகர் எனவும் குறிப்பிட்டு இருந்தது 
இவை அத்தனையும் பொய் என்பது நான் நேரில் கண்டது ...அதை கொடுத்தவர்கள் இளைன்னர்கள் ,அவர்கள் பெண்களின் பக்கம் செல்லவே இல்லை ,இதுதான் எனக்கு உங்களை பற்றிய முதல் நெருடலை கொடுத்தது ,,
அடுத்து,மருத்துவ கவுன்சிலிங் சம்மந்தமாக நீங்கள் ஆர்பாட்டம் நடத்திய பிறகு. ம ம க அந்த அரசாணையை வெளி
இட்ட பொழுது  நீங்கள் அறியாமையிலோ அல்லது தெரியாமலோ ஆர்பாட்டம் நடத்தி இருப்பீர்கள் என்று எண்ணினேன்,, எம் சமூகத்தாரை அலைகழிக்க வைத்த அந்த ஆர்ப்பாட்டம். அதற்க்கு எம் சகோதர சகோதரிகளுக்கு தெரியாமல் நடந்து விட்டது என்று நீங்கள் வருத்தம் தெரிவிப்பீர்கள் என்றும் நினைத்தேன்  ஆனால் நடந்தது வேறு 
ம ம க வின் சமுதாய துரோகம் என்றும்  மருத்துவ  கவுன்சலின்[பணி நியமனம்] சம்மந்தமாக நீங்கள் விளக்கம் 
அளிப்பீர்கள் என்று எதிர்பார்த்து என் உறவினர் மூலமாக மண்ணடிக்கு வந்து உங்களின் பொதுகூட்ட விளக்க உரையை கேட்க ஆவலாக இருந்தேன் ,,,கடைசி வரை நீங்கள் மருத்துவ பனி நியமனம் சம்மந்தமாக எதுவுமே பேசவில்லை ...அந்த விஷயத்தில் அரசாங்கம் மக்களுக்கு துரோகம் செய்ததாக சொல்லும் நீங்கள் அதற்க்கு ஆதாரம் கொடுக்காமலும் அது சம்மந்தமாக விளக்கம் கொடுக்காமலும், ம ம க என்ற கட்சியையும். சகோ ஜவாஹிருல்லாவையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தீர்களே தவிர நீங்கள் எதற்காக அந்த பொதுக்கூட்டம் கூட்டி நீர்களோ அதை பற்றி சற்றும் பேசாமல்  லேசாக அரசாங்கத்தையும்  . காட்டமாக ம ம க வையும் விமர்சித்ததை தவிர  நாம் எதிர்பார்த்த அளவிற்கு வேறு ஒன்றும் விளாகம் கொடுக்கவில்லை ,,,அதற்க்கு பிறகுதான் நான் முன்பு உங்களுக்கு ஆதராவாக செய்த செயலை கண்டு வருந்தினேன்..[அல்ஹம்துலில்லாஹ் ]அல்லாஹ் எனக்கு இப்பொழுதுதான் உங்கள் விசயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவை கொடுக்கின்றான் ...உங்களை நம்பி 
இருக்கும் எம்மை போன்ற த த ஜ சகோதரர்களுக்கு நீங்கள் காட்டும் நேர் வழி இதுதானா? உங்களின் வார்த்தைகளை 
நம்பி இத்தனை காலாம் நான் பின்பற்றி வந்தது எவ்வளவு பெரிய தவறு என்பது இபொழுது உணருகிறேன் ..
மார்க்கத்தை சொல்லும் உங்களுக்கு ஏன் இந்த போக்கு, மனம் வலிக்கிறது அண்ணன் அவர்களே. உங்களின் சுய கவுரவம், காப்பாற்றிக்கொள்ள எங்களை[த த ஜ ] போன்றவர்களை பகடைக்காயாக  மாற்றிகொல்வதினால்  உங்களுக்கு என்ன கிடைத்துவிடும் மறுமையில்?...இப்படிப்பட்ட ஒரு அமைப்பில்[அபிமானியாக]  இருந்ததை 
எண்ணினால் உள்ளம் உள்ளபடியே குமுறுகிறது.உறக்கமில்லாமல் கண்கள் கலங்குகிறது. அல்லாஹ்விற்காக 
உங்களின் இந்த த த ஜ  சமுதாயத்தை அடிமையாக்கும் போக்கை மாற்றிகொள்ளுங்கள் அண்ணன், இல்லை 
என்றால் அல்லாஹ் நாடினால் அந்த அப்பாவி  த த ஜ சகோதரர்கள் என்னைப்போல் தெளிவடையலாம்..
இல்லாவிட்டால் அவர்களின் நிலை என்ன? அவர்களை வழிகெடுக்கும் பாவத்திற்காக மறுமையில் உங்களின் 
நிலை என்ன ...அல்லாஹ்விடம் உங்களுக்காக பிரார்த்தனை புரிவதை தவிர வேறு வழி உண்டோ........?

என்றும் அன்புடம் 
அபு சாஜித் ...காரைக்கால் [ முன்பு உங்கள் சார்பு கொண்டு இருந்த என நிலையை கண்டு நானே வேட்கபடுவதால் 
என்னுடைய முழு பெயர் வெளியிட மனம் வரவில்லை...

அஸ்ஸலாமு அலைக்கும்.. 
 
குறிப்பு ; எத்தனையோ விஷயத்தில் எங்களை முட்டாள் ஆக்கிய நீங்கள் இந்த கடிதத்தை கூட ஒருகால்  உங்களின் எதிரிகளால் எழுதப்பட்டது என்று கூறி உங்கள் நாவான்மையால் மீதமிருக்கும் அப்பாவி த த ஜ சகோதரர்களை நம்பவைக்கலாம் ,,,ஆனால் மறுமை என்று ஒன்று இருக்கிறதை நீங்கள் மறந்தாலும் நாம் மறவோம் ,,,அங்கே 
உண்மை மட்டுமே பேசும். 

புதன், 13 ஜூன், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [இறுதிப்பகுதி]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணனான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

மவ்லவி ஹாமித்பக்ரி மன்பஈ அவர்கள் பத்துக்கும் மேற்ப்பட்ட பெயரில் லெட்டர் பேடு தயாரித்து வசூல் வேட்டை நடத்தினார் என்று பீஜே குற்றம் சாட்டினார். அதற்கான ஆவணங்களை அவர் பதிவு செய்யவில்லை. அது போகட்டும். இவரது மேலான்மைக்குழுத் தலைவர் சம்சுல்லுஹா அவர்கள், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் முகவரியான 
11 A ராவுத்தர் கிழக்குத்தெரு என்றே ஒரே முகவரியில்,

  1. தவ்ஹீது ஜமாஅத்.
  2. மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி.
  3. மேலப்பாளையம் ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்.
இவ்வாறான லெட்டர் பேடுகள் தயாரித்து அரபியில் பல கடிதங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளாரே! இதற்கு பீஜே என்ன சொல்லப்போகிறார்? மேற்கண்ட அனைத்தும் ஒரே இடத்தில் இயங்குகிறது எனவே ஒரே முகவரியில் லெட்டர் பேடு தயாரித்தார்கள் என்று பீஜே சொல்லலாம். தவ்ஹீத் ஜமாஅத் சரி, மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி சரி. அதென்ன மேலப்பாளையம் ஜாக் என்ற அமைப்பு?

ஜாக் வழிகேடு இயக்கம் என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டு அந்த ஜாக்கை உல்டா பண்ணி மேலப்பாளையம் ஜாக் என்று ஒரு அமைப்பு துவங்கியது அதுவும் 2004 ல் ததஜ உருவான பின்னால் 2005 ல் மேலப்பாளையம் ஜாக் என்ற பெயரில் ஒரு குட்டி அமைப்பு உருவாக்கியதன் காரணம் என்னவென்று பீஜே சொல்வாரா? ஊரில் உள்ள சொத்துக்களை எல்லாம் ததஜ பெயரில் எழுத வேண்டும் என்று சொல்லும் பீஜே, மேலப்பாளையம் பள்ளிவாசலை ததஜ பெயரில் எழுதி வைக்கச் சொல்ல முடியுமா? மேலப்பாளையம் ஜாக் என்ற லுஹாவின் குட்டி அமைப்பை கலைக்கச் சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால் இந்த குட்டி அமைப்பு உருவாக்கப்பட்டதே உண்மையான ஜாக் பெயரில் உள்ள மஸ்ஜிதுர் ரஹ்மானை அமுக்குவதற்காகத் தானே!

சரி போகட்டும்., வெளிநாட்டிற்கு பிழைக்கப்போன தமிழனிடம் மட்டுமே நாங்கள் காசு வாங்குவோம். வெளிநாட்டுக்காரன் கைமடக்கு தந்தால் வாங்கமாட்டோம் என்று மார்தட்டும் பீஜே, அஹ்லே ஹதீஸ் வழிகேடு என்று சொல்லிவிட்டு அந்த அமைப்பிடம் அரபியில் வாங்கிய இந்த பரிந்துரைக் கடிதம் எதற்காக என்று பதில் சொல்லட்டும். 

ததஜவுக்கு சொந்தமான, சம்சுல்லுஹா மற்றும் எம்.எஸ்.ஸுலைமான் போன்றோரின் மேற்பார்வையில் இயங்கும் அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்லூரிக்காக ஒரு அரபி நிறுவனத்திற்கு சம்ஷுல்லுஹா அவர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய வெவ்வேறு இரு கடிதம் சாம்பிளுக்காக.


இந்த கடிதங்கள் எல்லாம் எந்த தமிழனுக்கு எழுதப்பட்டவை என்று சொல்லட்டும். இதுபோன்று இன்னும் ஏராளம் உண்டு.

அன்பான சகோதரர்களே!
வெளிநாட்டு நிதி விசயத்தில் தன்னை விட்டு பிரிந்து சென்ற ஹாமித்பக்ரி மற்றும் சைபுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் மீது பழிபோட்டு விட்டு தன்னை பரிசுத்தவனாக காட்டிய பீஜேயின் வெளிநாட்டு நிதி தொடர்பான விசயங்களையும், அவரோடு இன்றும் இருக்கும் சகாக்களின் வெளிநாட்டு நிதி தொடர்பான விசயங்களையும் உரிய ஆவணங்களின் அடிப்படையில் 13 தொடர்களாக பதிவு செய்திருக்கிறோம். பல மாதங்களாக நாம் பல்வேறு கேள்விகளை எழுப்பியும் பீஜே மவுனம் காப்பதில் இருந்து அவரது உண்மைநிலையை மக்கள் அறிந்து கொள்ளலாம். பீஜேயின் அவரது சகாக்களின், அவரது ஜமாஅத்தின் வெளிநாட்டு நிதி தொடர்பான நேரடி சாட்சிகள் மற்றும் இன்னும் சில ஆவணங்கள் நம்மிடம் உள்ளன. இதுவரை எழுப்பிய வினாக்களுக்கு பீஜே பதிலளித்தால் மீதமுள்ள ஆவணங்களும் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ். முஸ்லிம்களே இவரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பதுதான் எனது ஒரே வேண்டுகோளாகும்.

பீஜேயின் இரட்டை வேடத்தை தோலுரிக்கும் எனது இந்த முயற்சிக்கு, ஆவணங்கள் தந்துதவிய சகோதரர்கள் ஆலோசனைகள் வழங்கிய சகோதரர்கள் அனைவருக்கும், என்னை தனி மெயிலில் தரக்குறைவாக திட்டிக் குவித்த பீஜேயின் அபிமானிகளுக்கும் நன்றி. 
இந்த தொடர் முற்றுப்பெருகிறது. பீஜேயின் அன்றும்-இன்றும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன் 
இஸ்லாமிய சகோதரன்.,
முகவைஅப்பாஸ்.