ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [திருத்தப்பட்டது][part 7]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

எங்கே போனது 5 ,47 ,085 ரூபாய்கள்?

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அபூதாவூத் மொழிபெயர்ப்புக்காக லுஹாவுக்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டதையும், பின்பு அவர் அபூதாவூதை மொழிபெயர்த்து தராததால் பீஜேயின் திர்மிதியை வெளியிடுவதற்காக பீஜெயிக்கு ஒரு லட்சம் இஸ்லாமிய கல்விச் சங்கம் வழங்கிய விஷயங்களை எழுதி, இவர்கள் தானமாக தந்த தியாகிகள் அல்ல. துரோகிகள் என்று தெளிவு படுத்தியிருந்தோம். இந்த தொடரில் திர்மிதி தொடர்பாகக பீஜே சொல்லும் இன்னொரு பொய்யை அலசுவோம்.

''பல மாதங்கள் கடுமையாக உழைத்து தயார் செய்து வைத்ததை எங்களிடம் தாருங்கள். நாங்கள் வெளியிடுகிறோம் என்று ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் கேட்டனர். மற்ற நிர்வாகிகளும் வற்புறுத்தியதன் அடிப்படையில் திர்மிதியை நான் அவர்களுக்கு வழங்கினேன். மேலும், திர்மிதியை வெளியிட்டு அதை முழுமையாக ஜமாஅத்தில் ஒப்படைத்துவிட வேண்டும். அவை விற்பனையாவதற்கு ஏற்ப பணம் போட்டவர்களுக்கு ஜமாஅத் திரும்பக் கொடுக்கும்.பணம் தந்தவர்கள் பட்டியலை ஜமாத்திடம் தரவேண்டும் என்ற நிபந்தனை விதித்தோம்.

இந்த நூலை விற்பனை செய்யும் உரிமை சாஜிதா புக் சென்டர் வசம் இருந்தது. அவர் விற்று பணம் தரும் போதெல்லாம் பங்கு சேர்ந்தவர்களுக்கு உரிய தொகையை நாங்கள் கொடுத்து வந்தோம். ஆனால் திர்மிதி வெளியாகி சில நாட்களில் ஹாமித்பக்ரி ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார். உடனே சாஜிதா புத்தக வியாபாரியிடம் சென்று மீதிப் புத்தகத்தின் பணத்தை என்னிடம் தரவேண்டும்.ஜமாஅத்தில் கொடுக்கக் கூடாது என்று கூறி அந்தப் பணத்தை சாப்பிட ஆரம்பித்தார். ஷேர் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டால் தவ்ஹீத் ஜமாஅத்தில் எல்லாப் பணத்தையும் கொடுத்து விட்டேன் என்று கூறி அவர்களை விரட்டியடித்தார். பல நூறு ஏழை மக்கள் இவரிடம் கொடுத்த பணத்தை இன்னும் திரும்பப் பெறவில்லை. அவர்களின் சாபமும் பத்துவாவும் அவர் மீது உள்ளது'' இவ்வாறு பீஜே கூறியுள்ளார்.

உண்மை நிலை என்ன?

திர்மிதியை வெளியிடும் உரிமை இஸ்லாமிய கல்விச் சங்கத்திடமும், அதை விற்பனை செய்யும் உரிமை சாஜிதாவிடம் வழங்கப்பட்டது. சாஜிதா தரும் பணத்தை ஷேர் ஹோல்டருக்கு விநியோக்கிக்கும் பொறுப்பு பீஜேயின் நம்பிக்கைக்கு பாத்திரமான அன்றும் பொருளாளர், இன்றும் பொருளாளராக  இருக்கும் அன்வர் பாஷாவுக்கு வழங்கப்பட்டது. இதுவரைக்கும் பீஜே சொல்வது உண்மை. அதற்கு பிறகு சொல்வது அவருக்கே உரித்தான வழக்கமான பொய். 

திர்மிதி ஐந்தாயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டது. அதை சென்னையில் அச்சடித்து பைண்டிங் செய்யப்படாமல், பிரிண்டிங் சிவகாசியிலும், பைண்டிங் சென்னையிலும் செய்யப்பட்டது. இதில் பீஜேயின் உறவினர் ஒருவர் பலனடைந்தார். தேவைப்பட்டால் அவர் பெயரைச் சொல்வோம். பிரிண்டிங் ஓரிடத்திலும், பைண்டிங் ஓரிடத்திலும் நடந்ததால் அந்த நூலின் சுமார் எழுநூறு புத்தகங்கள் அளவுக்கு சேதமானது. மேலும் பைண்டிங் சரியில்லை என்ற குற்றச்சாட்டு திர்மிதி வெளியீட்டு விழாவிலேயே முன்வைக்கப் பட்டது.  ஆக, விற்பனை செய்யும் தரத்தில் ஏறக்குறைய 4300 புத்தகங்கள் அளவுக்குத் தான் சாஜிதாவுக்கு கிடைத்தது. இதுபோக இந்த புத்தகங்கள் தேங்கிய நிலையில், அவ்வப்போது பீஜேயின் அனுமதியின் பேரில் 150 ரூபாய்களுக்கு சில நூறு பிரதிகள் விற்கப்பட்டது. ஆரம்பத்தில் சில்லறை விலை 230 ஆக இருந்ததை மாற்றி, 190 ரூபாய் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதில் மொத்தமாக வாங்குபவர்களுக்கு கழிவு உண்டு. 

இந்த நூலை விற்று வந்த சாஜிதா புக் சென்டர் நிறுவனர் ஜக்கரியா அவர்கள், 
5 ,47 ,085 [ ஐந்து லட்சத்து நாற்ப்பத்தி ஏழு ஆயிரத்து என்பத்தி ஐந்து] ரூபாய்களை அன்வர்பாஷாவிடம் வழங்கியுள்ளார். அதோடு பின்னாளில் ஒரு ஷேர் ஹோல்டருக்கு ஐயாயிரம் வழங்கியுள்ளார். ஆக ஐந்து லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரத்து என்பத்தி ஐந்து ரூபாய்கள் ஜக்கரியவால் திர்மிதி நூலுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதுபோக திடீரென்று பீஜே அருள் வந்தவராக மீதமுள்ள புக்குகளை மீடியா வேல்டிடம் ஒப்பைடைக்க சொன்னார். பின்பு திரும்பவும் சாஜிதாவிடம் ஒப்படைக்கச் சொன்னார். இதில் மீடியா வேல்டு எத்தனை நூல்கள் விற்றது; அந்த தொகை என்ன ஆனது என்பது பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.

மேலும், திர்மிதி வெளியான சில நாட்களில் ஹாமித்பக்ரி ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார். பின்பு சாஜிதா புக் வியாபாரியிடம் திர்மிதி காசை வாங்கி சாப்பிட்டார் என்று பீஜே சொல்கிறாரே! சில நாட்களில் திர்மிதி ஐந்தரை லட்சத்துக்கு வியாபாரமாகி விட்டது என்கிறாரா? பொய் சொல்வதற்கும் ஒரு அளவில்லையா? திர்மிதி காசை ஹாமித்பக்ரி சாப்பிட ஆரம்பித்தார் என்று கதை விடும் பீஜே, ஜக்கரியா தந்த தொகையை லாவகமாக மறைத்தது ஏன்? அந்த தொகையை சொன்னால் இவர் சொல்லும் பொய் அடிபட்டுப் போகும் என்பதாலா?

திர்மிதி விசயத்தில் பீஜெயிடம் நாம் வைக்கும் கேள்விகள்;
  1. திர்மிதிக்காக இஸ்லாமிய கல்விச் சங்கத்திடம் ஒரு லட்சரூபாய் ராயல்டி வாங்கியது உண்மையா? இல்லையா?
  2. ஜக்கரியாவிடம் 5 ,47 ,085 [ ஐந்து லட்சத்து நாற்ப்பத்தி ஏழு ஆயிரத்து என்பத்தி ஐந்து] வாங்கியது உண்மையா? இல்லையா?
  3. இந்த தொகை யார் யாருக்கு எவ்வளவு விநியோகிக்கப்பட்டது என்ற வெள்ளையறிக்கை வெளியிடத் தயாரா?
  4. ஹாமித் பக்ரி வழங்கிய ஷேர் ஹோல்டர்கள் பட்டியலை வெளியிட்டு, இன்னினாருக்கு நாங்கள் பணத்தை வழங்கிவிட்டோம்; இன்னின்னாரை ஹாமித்பக்ரி ஏமாற்றி விட்டார் என்று வெளியிடவேண்டும்.
  5. திர்மிதி வெளியான சில நாட்களில் ஹாமித்பக்ரி நீக்கப்பட்டார் என்பதற்கு  திர்மிதி வெளியான நாளையும், ஹாமித்பக்ரி நீக்கப்பட்ட ஆதாரத்தையும் வைத்து நிரூபிக்கத் தயாரா?
  6. ஹாமித் பக்ரியிடம் அபூதாவூதுக்காக லுஹாவும், திர்மிதிக்காக பீஜேயும் வாங்கிய தொகையையும், திர்மிதி விற்று ஜக்கரியா தந்த தொகையையும் மறைத்த நோக்கம் என்ன?

அடுத்து வருவது;
த த ஜமாஅத் வெளிநாடுகளில் பெற்ற நிதி உதவிகள்; வெளிநாடு நிதி மூலம் கட்டிய பள்ளிகள். அதற்காக பீஜே செய்த முயற்சிகள்.

அருளாளன் நாடினால் அதிவிரைவில்.


செவ்வாய், 17 ஏப்ரல், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 6]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஆளாய் பரந்த அந்த ஒரு லட்சம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், இப்போது அவர் தன்னைத் தானே திர்மிதியை தந்த தியாகியாக காட்டிக்கொள்வதில் உள்ள பொய்களை பார்ப்போம்.

''நான் திர்மிதி நூலை மொழிபெயர்த்து சொந்தமாக வெளியிட திட்டமிட்டு தயார் நிலையில் வைத்திருந்தேன்''என்று பீஜே கூறுகிறார். அதாவது இவர் தயாரித்து சொந்தமாக ரிலீஸ் செய்ய இருந்தாராம். அவரும், அவரோடு நெருக்கமாக இருந்தவர்களும் உயிரோடு இருக்கும் இந்த காலத்திலேயே இப்படி அப்பட்டமாக பொய் சொல்கிறார் என்றால், அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும். உண்மையில் திர்மிதியைப் புதுப்பெண்ணாக இவர் ஹாமித்பக்ரி கையில் ஒப்படைத்தாரா? என்றால் இல்லை. ஏற்கனவே இந்த திர்மிதி இவர் ஜாக்கில் குப்பை கொட்டிக்கொண்டிருந்த காலத்திலேயே ஏறக்குறைய முப்பது பாகங்களுக்கும் மேலாக சிறிய நூல்களாக வெளிவந்து விட்டது. அந்த பாகங்களை எல்லாம் ஒட்டித்தான் ஹாமித்பக்ரி கையில் ஒப்படைத்தார். அதாவது அவர் அடிக்கடி சொல்வாரே! 'புதிய மொந்தையில் பழைய கள்' என்று; அதுபோல ஏற்கனவே வெளியான நூலைத்தான் 'மேக்கப்' போட்டு ஹாமித்பக்ரியிடம் தந்தார். இதில் தியாகம் எங்கே வாழுது? துரோகம் தான் வாழுது! அது என்ன துரோகம்? இவரது திர்மிதியை ஏற்கனவே விற்றுவந்த ஜாக்கின் வெளியீட்டு நிறுவனம், இவர் ஹாமித்பக்ரியிடம் கொடுத்து பெரிய புக்காக வெளியிட்ட பின்னால் ஜாக்கிடம் இருந்த சிறிய வடிவிலான திர்மிதி விற்பனையாகாமல் தேங்கிப் போனது. ஏற்கனவே ஒரு நிறுவனம் திர்மிதியை விற்று வரும் நிலையில், அதே திர்மிதியை இன்னொருவருக்கு கொடுப்பது, ஒரே நிலத்தை இரண்டு பேருக்கு விற்பதைப் போன்ற துரோகமல்லவா? இந்த துரோகத்தை செய்த பீஜே, அதையே தியாகமாக காட்டுவது அவரின் திறமைதானே!

இங்கே இன்னொன்றையும் பீஜே சொல்வார். அது என்னவென்றால், திர்மிதி சிறிய நூல்களாக பல பாகங்களாக வெளியாகியபோது, அதற்கான உரிமையை நான் அவர்களுக்கு கொடுக்கவில்லை. நானே புத்தகத்தை பிரிண்டிங் செய்து பைண்டிங் செய்து நூலாக அவர்களுக்கு கொடுப்பேன். அதற்குரிய விலையை நான் வாங்கிக் கொண்டேன். ஆனால் ஹாமித்பக்ரியிடம் ஹதீஸ்களை அவர் கையில் தூக்கி கொடுத்து, அதற்க்கான வெளியீட்டு உரிமையை இஸ்லாமிய கல்விச் சங்கத்திற்கு வழங்கினேன். எனவே அது வேறு; இது வேறு என்று பீஜே சொல்லலாம். ஒரு பொருளை ஒருவர் மூலமாக விற்றுவரும் நிலையில், அதே பொருளை வேறு வடிவத்தில் விற்பதாக இருந்தால் ஏற்கனவே விற்றுவரும் அவரிடம் அதைப் பற்றி பேசி, அவர் மறுத்தால் அவர் பாதிக்காத வகையில் வேறு ஒருவர் மூலமாக விற்கலாம். ஆனால் திர்மிதியை சிறிய பாகங்களாக வெளியிட்டு வந்த அந்த நிறுவனத்துடன் பீஜே, இந்த ஆலோசனை நடத்தினார் என்பதற்கான ஆதாரத்தை காட்டவேண்டும். நாம் விசாரித்த வகையில், இப்போது திர்மிதி பெரிய புத்தகமாக வெளியிட்டால் ஏற்கனவே சிறிய பாகங்களாக வெளியிட்டவர்கள் பாதிக்கப்படுவார்களே என்ற கருத்து பீஜெயிடம் சொல்லப்பட்டபோது, இல்லம்மா! சிறிய பாகம் வாங்க விரும்புறவன் அதை வாங்கிருவான்; பெரிய பாகமாக வாங்க விரும்புறவன் இதை வாங்கிருவான். எனவே அந்த விற்பனை பாதிக்காது என்று சொன்னதாக தகவல் கிடைத்தது. எது எப்படியோ, திர்மிதியை ஹாமித்பக்ரி கையில் பீஜே ஒப்படைத்தபோது அது புத்தம்புதிய காப்பியாக இருக்கவில்லை. அது ஏற்கனவே பல தியேட்டர்களில் ஒடி, மழை பெய்தது போன்ற கோடு வரும் அருதப் பழசான பிலிம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

''பல மாதங்கள் கடுமையாக உழைத்து தயார் செய்து வைத்ததை எங்களிடம் தாருங்கள். நாங்கள் வெளியிடுகிறோம் என்று ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் கேட்டனர். மற்ற நிர்வாகிகளும் வற்புறுத்தியதன் அடிப்படையில் திர்மிதியை நான் அவர்களுக்கு வழங்கினேன்''என்று பீஜே கூறுகிறார்.
ஹாமித்பக்ரியிடம் திர்மிதியை கொடுத்ததை கூறும் பீஜே, அதற்காக அவரிடம் இருந்து வாங்கியதை மட்டும் லாவகமாக மறைத்து தன்னை தியாகியாக காட்டுகிறார். அபூதாவூத் மொழிபெயர்த்து தருவதற்காக முன்பணமாக ஒரு லட்சம் வாங்கிய லுஹா அல்வா கொடுத்தார். [அவர் மாவட்டத்தில் அதுதானே பிரபலம்] பின்பு இந்த வாய்ப்பை பயன்படுத்திய பீஜே, ஹாமித்பரியிடம் தனது திர்மிதி நூலை வெளியிட ஒரு லட்சம் பெற்றுக் கொண்டார். முதலில் 3000பிரதிகள் அச்சடிப்பது என்ற அடிப்படையில் அதற்காக 60 ,000 வாங்கிக்கொண்ட பீஜே, பிறகு தனது பணத்தேவையை முன்னிட்டு 5000 பிரதிகள் அச்சடித்துக் கொள்ளுங்கள் என்று ஹாமித்பரியிடம் சொல்லி மீண்டும் 20000 பெற்றுக் கொண்டார். ஆக 5000 பிரதிகளுக்கு ஒரு நூலுக்கு 20 ரூபாய் வீதம் ஒரு லட்சம் பெற்றுக்கொண்டு தான் பீஜே திர்மிதியை கொடுத்தார். [திர்மிதியின் சில்லறை விலை 230 ரூபாய்; மொத்தவிலை 180மட்டுமே. இதில் விற்பனையாளருக்கு கழிவு வேறு. அந்தவகையில் நூலின் அசல் விலையில் சுமார் ஆறில் ஒரு பங்கை பீஜே ராயல்டி பெற்றுள்ளார்] 

மேலும், ஒரு லட்சம் என்பது இன்றைக்கு சாதாரணம். ஹாமித்பக்ரி மோசடி செய்தார் என்பதற்கு அன்றைக்கு பத்து லட்சம் என்றால் பயங்கரமான தொகை என்று பில்டப் காட்டும் பீஜே; இந்த ஒரு லட்சமும் அன்றைக்கு உள்ள மதிப்பில் எவ்வளவு பெரிய தொகை என்பதை சொல்வாரா? கணக்கு தெரியவில்லை என்றால் இவர் தொண்டியில் கட்டியுள்ள வீட்டின் கதவு ஜன்னல்களை கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

ஆக, மக்களிடம் ஷேர் வசூலித்து ஹாமித்பக்ரி அபூதாவூத் வெளியிடாத காரணத்தால் ஜமாஅத் பெயர் கெட்டது போலவும், ஜமாஅத்தின் களங்கத்தை துடைக்கும் வகையிலும், ஹாமித்பக்ரியை கடனிலிருந்து மீட்கும் வகையிலும், முல்லைக்கு தேர் தந்த பாரி போன்று, இவர் தனது திர்மிதியை தானமாக தந்தது போன்று பிலிம் காட்டுகிறாரே! இவர் எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரர் என்று மக்களே புரிந்து கொள்ளுங்கள். ஒருவரை கடனிலிருந்து காப்பது என்றால் அவருக்கு தனது பொருளை இலவசமாக கொடுத்து இதை விற்று கடனை கட்டு என்று ஒருவர் சொன்னால் அவர் உண்மையில் தியாகி. ஆனால் ஒருவரது கடன் இக்கட்டை பயன்படுத்தி தனது பொருளை வியாபாரமாக்கி பணம் வாங்கிக்கொண்ட ஒருவர் தியாகியாக முடியுமா? தான் ஒருவருக்கு கொடுத்த பொருளை சொல்லிக்கட்டும் பீஜே, அதற்கு பகரமாக தான் பெற்ற கையூட்டை மறைத்தாரே! இப்போது பீஜே தியாகியா? துரோகியா? மக்களே முடிவு செய்யுங்கள்.

திர்மிதி விற்பனை காசை சாப்பிட்டது ஹாமித்பக்ரியா? ஜமாத்தா? அன்வர்பாஷாவா?

அருளாளன் நாடினால் அதிவிரைவில்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 5]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

முன்னுரை; அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் பீஜேயின் அன்றும் இன்றும் உள்ள நிலைப்பாடுகளையும், அயல்நாட்டு நிதி பிரச்சினையில் அவர் அடித்து விடும் அப்பட்டமான பொய்களையும் அலசிவரும் இந்த தொடரில், இதுவரை அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் அவரது இப்போதைய நிலைப்பாடு அவரது தீர்ப்புக்கே மாற்றமாக அவரது மனோ இச்சை முடிவு என்பதையும், தானும் தனது ஜமாத்தும் வெளிநாட்டு நிதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற பெயரால் ஹாமித்பக்ரியும், சைபுலாஹ்வும் தான் வசூல் வேட்டையாடினார்கள் என்ற அவரது பொய்யை உடைக்கும் வகையில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் உறுப்பினர்கள் யார் யார் என்பதை பட்டியலிட்டதோடு, அந்த சங்கத்திற்கும் பீஜெயுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தினோம். அந்த சங்கம் குறித்த அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பினோம். 

இப்போது அவர் தன்னைத் தானே திர்மிதியை தந்த தியாகியாக காட்டிகொள்வதற்கு காரணமாக அமைந்த அபூதாவூத் மொழிபெயர்ப்பு குறித்த அவரின் அப்பட்டமான பொய்யைப் பார்ப்பதற்கு முன்னால் ஏற்கனவே கேட்ட ஒரு கேள்வியை பீஜெயிக்கு மீண்டும் வைக்கிறோம்.அதற்கு அவர் பதில் சொல்லியாகவேண்டும்.

இன்று பீஜே ஜமாஅத்தில் இல்லாத இரு பிரச்சாரகர்கள் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெளிநாடு பயணம் மேற்கொண்டனர் என்று சொன்னீர்களே! அந்த இருவர் யார்? 
 
அபூதாவூத் விசயத்தில் பீஜே சொல்வது என்ன? 

ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் அரபுநாடுகளுக்கு சென்றனர். அங்கு மக்களிடம் ஒரு திட்டத்தை முன்வைத்தனர். அதாவது நாங்கள் ஹதீஸ் நூல்களை தமிழாக்கம் செய்து வெளியிடப்போகிறோம். அதில் நீங்கள் ஷேர் சேர்ந்தால் நல்ல லாபத்துடன் முதலீட்டை திரும்பத்தருவோம் என்று சொல்லி நிதி திரட்டினார்கள். அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் முதன்மை நிர்வாகிகளாக இருந்தாலும் மற்ற நிர்வாகளிடமோ மூத்த அறிஞர்களிடமோ அவர்கள் எந்த ஒப்புதலும் பெறவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் அவர்கள் வெளியிடப்போவதாகவும் அவர்கள் சொல்லவில்லை. இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பெயரால் வெளியிடப்போவதாக மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி நிதிகளை திரட்டினார்கள்.

இப்படி பங்கு சேர்த்து பல மாதங்கள் ஆன பின்னும் நூல் வெளியிடும் எந்த முயற்சியிலும் அவர்கள் இறங்கவில்லை. பங்கு சேர்ந்தவர்கள் என்னிடமும் லுஹாவிடமும் தொலைபேசி வழியாகவும், எழுத்து மூலமாகவும் புகார்களை அனுப்பினார்கள். உடனடியாக நிர்வாகக்குழுவை கூட்டி ஹாமித்பக்ரியிடமும் சைபுல்லாஹ்விடமும் விளக்கம் கேட்டோம். யாரை கேட்டு ஷேர் சேர்த்தீர்கள்? நீங்கள் இருவரும் ஜமாஅத்தின் தலைவர் மற்றும் செயலாளராக இருந்துகொண்டு இப்படி நிதி திரட்டுவது ஜமாஅத்தின் செயலாக பார்க்கப்படாதா? சரி! பணம் திரட்டி வந்து பல மாதங்கள் கடந்த பின்னரும் எந்த நூலையும் வெளியிட முயற்சி செய்யாமல் இருப்பது ஏன்? உடனடியாக ஷேர் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று பீஜெயாகிய நான் வற்புறுத்தினேன். ஆனால் அதிகமான நிர்வாகிகள் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம்; உடனே ஹதீஸ் நூலை வெளியிட்டு இவ்விருவரும் கொடுத்த வாக்கை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம் என்று சொன்னதால் இவ்வாறே முடிவு எடுக்கப்பட்டது.

இவர்கள் சொன்னபடி அபூதாவூதை வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே அபூதாவூத் 300 ஹதீஸ்களை லுஹா மொழிபெயர்த்து வைத்து இருந்தார். மேலும் 700 ஹதீஸ்களை மொழிபெயர்த்து 1000 ஹதீஸ்களாக வெளியிட எவ்வளவு நாள் தேவைப்படும் என்று லுஹாவிடம் கேட்டபோது தனக்கு ஆறு மாதங்களாவது தேவைப்படும் என்று கூறிவிட்டார். அப்படியானால் இன்னும் தாமதப்படும் மக்களிடம் இன்னும் கெட்டபெயர் ஏற்படும் என்று அனைத்து நிர்வாகிகளும் கருதினார்கள். நான் திரிமிதி நூலை மொழிபெயர்த்து சொந்தமாக வெளியிட திட்டமிட்டு தயார் நிலையில் வைத்திருந்தேன். பல மாதங்கள் கடுமையாக உழைத்து தயார் செய்து வைத்ததை எங்களிடம் தாருங்கள். நாங்கள் வெளியிடுகிறோம் என்று ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் கேட்டனர். மற்ற நிர்வாகிகளும் வற்புறுத்தியதன் அடிப்படையில் திர்மிதியை நான் அவர்களுக்கு வழங்கினேன்.
மேலும், திர்மிதியை வெளியிட்டு அதை முழுமையாக ஜமாஅத்தில் ஒப்படைத்துவிட வேண்டும். அவை விற்பனையாவதற்கு ஏற்ப ஷேர் போட்டவர்களுக்கு பணத்தை ஜமாஅத் வழங்கும் என்று நிபந்தனை விதித்தோம்.

மேலே நீங்கள் படித்தது அபூதாவூத் வெளியீடு குறித்த பீஜேயின் வர்ணனையாகும். இதில் முதலாவதாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், ஹாமித்பக்ரியும்-கைவிட்ட தமுமுகவும் என்ற ஒரு நீண்ட தொடரை எழுதிய பீஜே, அபூதாவூத் வெளியிடுவதற்காக ஹாமித்பக்ரிதான் ஷேர் சேர்த்தார் என்று முழுக்க முழுக்க ஹாமித்பக்ரியை சாடியிருந்தார். அதில் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களை குறிப்பிடவில்லை. பார்க்க; 

அப்போது சைபுல்லாஹ்வை சேர்க்காததற்கு காரணம் அவர் அன்று ஜமாஅத்தில் இருந்தார். இப்போது ஷேர் மோசடி என்று இவரால் கூறப்படும் இதில் சைபுல்லாஹ் அவர்கள் பெயரை இணைப்பதற்கு காரணம் அவர் இப்போது ஜமாஅத்தில் இல்லை. ஆக இவரது ஜமாஅத்தில் இருந்தால் இவரே மோசடி என்று சொல்லும் ஒரு திட்டத்தின் பங்குதாரரை மறைத்து காப்பாற்றுவார். இவரை விட்டு வெளியேறினால் அவரை மோசடியாளராக அடையாளம் காட்டுவார் என்பதற்கு இது ஒரு சான்று என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் அபூதாவூத் ஷேர் சேர்த்தது தனக்கோ ஏனைய நிர்வாகிகளுக்கோ தெரியாது. எங்களிடம் அவர்கள் அனுமதி வாங்கவில்லை. பின்னர் இதுபற்றி மக்கள் புகாரளித்த பின் தான் அவர்கள் இருவரையும் நிர்வாகக்குழுவில் சங்கைப்பிடித்தோம் என்று சளைக்காமல் சரடு விடுகிறார் பீஜே. ஆனால் இவ்விருவரும் வெளிநாட்டில் ஷேர் வசூலிக்கும் காலத்திலேயே இவருக்கு இந்த விஷயம் தெரியும் என்பதற்கு அவரது வாயாலேயே அல்லாஹ் வாக்குமூலம் கொடுக்க வைத்த அற்புதம் பாரீர்;

ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும் என்ற இவரது தொடரில், ''இதுபோல் வெளிநாடு சென்று ஹாமித்பக்ரி அபூதாவூத் வெளியிடப்போகிறேன் ஷேர் தாருங்கள். லாபம் தருகிறேன் என்று பல லட்சங்கள் திரட்டினார். என்னிடம் தொலைபேசியில் கேட்டவர்களுக்கு, யாரும் இதில் சேரவேண்டாம் என்று கூறினேன்.'' என்று பீஜே கூறுகிறார்.

இதன் மூலம் அபூதாவூத் வெளியிடுவது தாமதமான பின்னர், புகார் வந்த பின்னர் தான் தனக்கும் ஏனைய நிர்வாகிகளுக்கும் தெரிய வந்தது போல் பீஜே சொல்லியது அப்பட்டமான பொய்யல்லவா? தன்னிடம் போனில் கேட்டவர்களை இதில் ஷேர் சேராதீர்கள் என்று பீஜே சொன்னதற்கு காரணம், ஹாமித்பக்ரி மோசடியாளர் என்பதால்தான் என்றால், ஹாமித்பக்ரியின் இந்த மோசடியிலிருந்து ஏனைய மக்களையும் காக்கும் வகையில், ஹாமித்பக்ரி ஷேர்  கேட்டால் கொடுக்காதீர்கள் என்று இவர் அந்த வெளிநாட்டு கிளைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பாதது ஏன்? ஷேர் வசூலித்த ஹாமித்பக்ரியை தொடர்பு கொண்டு இந்த ஷேர் நீங்கள் பிடிக்கக் கூடாது; மீறி பிடித்தால் ஜமாஅத் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று சொல்லாதது ஏன்? சரி! இவர் கூற்றுப் பிரகாரம் ஹாமித்பக்ரி பல லட்சங்கள் அள்ளிக் கொடுவந்தாரே! வந்த பின்னால், ஏங்க பக்ரி! இந்த ஷேர் கலெக்ட் பண்ணீங்களே! அது என்ன ஆச்சு? ஏன் இன்னும் நூலை வெளியிடவில்லை? அதற்காக நீங்கள் எடுத்த முயற்சிகள் என்ன? என்று பீஜே கேட்காதது ஏன்? மக்கள் புகார் வரும்வரை வாய்மூடி மவுனம் காத்தது ஏன்? நிர்வாக்குழு கண்டிப்பதற்கு முன்பே நான் இதுபற்றி கேட்டேன் என்று பீஜே இப்போது சொன்னாலும் மாட்டிக்கொள்வார். 

அடுத்து, அபூதாவூத் விசயத்தில் ஹாமித்பக்ரி வசூலித்தது எவ்வளவு என்று பீஜெயிக்கு தெரியாது என்றால், அது எத்தனை லட்சங்கள் என்று எனக்கு தெரியாது என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும் என்ற தொடரில், ''பல லட்சங்கள்; பத்துலட்சத்திற்கு மேல் என்று கூறுகிறார். உணர்வு 16;3௦ ல், சில லட்சங்கள் அது இப்போது எனக்கு நினைவில் இல்லை என்கிறார். பல லட்சங்களா? சில லட்சமா? இது போகட்டும்.

அபூதாவூத் பிரச்சினையில் மக்கள் புகாரளித்த பின் தான் லுஹாவை அணுகி ஆயிரம் ஹதீஸ் கேட்டதாகவும் அவர் ஆறுமாதம் ஆகும் என்றதாகவும் ஒரு செய்தியை சொல்கிறார் பீஜே. ஆனால் உண்மை என்ன? மேலப்பாளையம் வழக்கு ஒன்றில் சிறைமீண்ட லுஹா, தான் மொழிபெயர்த்த அபூதாவூத் ஹதீஸ் இத்தனை வைத்துள்ளேன் என்று ஹாமித்பக்ரியிடம் சொன்ன பின் தான் அபூதாவூத் வெளியிடும் திட்டமே தீட்டப்படுகிறது. அதற்காக ஷேர் பிடிக்கப்படுகிறது. அபூதாவூத் மொழிபெயர்ப்ப்புப் பணிக்காக லுஹாவுக்கு ஒரு லட்ச ரூபாய் இஸ்லாமிய கல்விச்சங்கம் வழங்கியது. உண்மை இவ்வாறிருக்க மக்கள் புகார் வந்த பின் தான் லுஹாவை அணுகியதாக பீஜே சொல்வது அப்பட்டமான பொய்யல்லவா? பிரச்சினை வந்த பின்பு கூட என்னால் முடியாது; இன்னும் ஆறு மாதம் ஆகும் என்று கூறிய லுஹா, இந்த பணிக்காக என்று ஒப்புகொண்டுஒரு லட்சம் வாங்கியது எதற்காக என்று கூறுவரா? நான் ஒரு லட்சம் வாங்கவில்லை என்று லுஹா அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மறுப்பாரா? 

ஆக ஹாமித்பக்ரி அபூதாவூத் வகைக்காக ஷேர் பிடித்தது உண்மை. அதற்காக லுஹாவுக்கு ஒரு லட்சம் தந்து அதை வெளியிட முயற்சி செய்தது உண்மை. இதை மறைத்து ஹாமித்பக்ரி ஏதோ அந்த லட்சங்களை முழுசாக முழுங்கி ஏப்பம் விட்டது போல் பீஜே சொல்வது அப்பட்டமான பொய்யாகும். இறுதியாக, இதுவரை நாம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பீஜே பதிலளிக்க வேண்டும்.

இதே அபூதாவூத் விசயத்தில் பீஜேயின் பல ஆண்டு நாடகங்கள்;








1991 லேயே அபூதாவூத் தயார் நிலையில் உள்ளதாக கூறும் பீஜே, அந்த அபூதாவூத் மாயமாய் மறைந்த ரகசியத்தை கொஞ்சம் மக்களுக்கு சொல்வாரா?

அடுத்து வருவது;
திர்மிதி வெளியீட்டில் பீஜேயின் நம்பிக்கைத் துரோகங்கள்.

திரிமிதியின் திரை மறைவு பணப் பரிமாற்றங்கள்.

திர்மிதி விற்பனை காசை சாப்பிட்டது ஹாமித்பக்ரியா? ஜமாத்தா? அன்வர்பாஷாவா?

அருளாளன் நாடினால் அதிவிரைவில்.



வெள்ளி, 6 ஏப்ரல், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 4]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் பீஜேயை நோக்கி,

அன்று குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் வெளிநாடு நிதி கூடும் என்றீர்கள். இன்று அந்த வசனத்திற்கு மாற்றமாக மனோஇச்சையை சட்டமாக்கி முரண்பட்டது ஏன் என்று கேட்டோம். 

குர்ஆன் அனுமதி அடிப்படையில் வெளிநாட்டு நிதி பெறுபவர்களை அரபுநாட்டு சல்லிக்கு மாரடிப்பவர்கள் என்று விமர்சிப்பது சரியா? என்று கேட்டோம்.

இஸ்லாமிய கல்விச் சங்கம் தான் வசூல் செய்தது. எனக்கோ தவ்ஹீத் ஜமாத்திற்கோ சம்மந்தமில்லை என்று பீஜே சொன்னதற்கு, இஸ்லாமிய கல்விச் சங்கம் விசயத்தில் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டோம். இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் அங்கத்தினர்கள் ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் மட்டும் தான் என்று பீஜே சொல்லத்தயாரா? என்று கேட்டோம்.

இன்று பீஜே ஜமாஅத்தில் இல்லாத இரு பிரச்சாரகர்கள் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெளிநாடு பயணம் மேற்கொண்டனர் என்ற பீஜேயின் வாதத்தை வைத்து அந்த இருவரின் பெயரை பீஜே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டோம்.

இன்னும் இதுபோன்ற அடுக்கடுக்கான கேள்விகளை பீஜேயை நோக்கி நாம் எழுப்பியும் அவர் அசையாமல் இருப்பதின் மூலம் வெளிநாட்டு நிதி விசயத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற சங்கம் இவர் ஆதரவுடன் வசூல் வேட்டையாடியதை ஒப்புக்கொண்டுள்ளார். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

வெளிநாட்டு நிதி வசூலித்தது ஹாமித்பக்ரிக்கு மட்டுமே சொந்தமான இஸ்லாமிய கல்விச் சங்கம்தான் என்று சொன்ன பீஜே, பிறகு அதில் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களும் ஒரு அங்கம் என்றார். அப்போது நாம் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் இவ்விருவரைத் தாண்டி வேறு யாரும் இருக்கவில்லையா என்று கேட்டோம். அதற்கு பீஜே பதிலளிக்காததால், இப்போது நாமே இஸ்லாமிய கவிச் சங்கத்தின் அங்கத்தினர்களாக இருந்து இன்றும் பீஜெயோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சிலரை அடையாளம் காட்டுகிறோம்.

  • இன்று பீஜேயின் மேலாண்மைக்குழு தலைவராக வீற்றிருக்கும் சம்சுல்லுஹா ரஹ்மானி.
  • இன்று பீஜேயின் மேலாண்மைக்குழு உறுப்பினராக வீற்றிருக்கும் எம்.எஸ்.ஸுலைமான்.
  • இன்று பீஜேயின் தணிக்கைக் குழு தலைவராகவும், வருங்கால செயல் தலைவராகவும் அரியணை ஏறவுள்ள எம்.ஐ.ஸுலைமான்.

இவர்கள் மட்டுமன்றி இன்னும் சிலரும் இந்த சங்கத்தின் அங்கத்தினர்கள். அவர்கள் பட்டியல் இங்கே தேவையில்லை என்பதால் வெளியிடவில்லை. ஆக, இஸ்லாமிய கல்விச் சங்கம் என்பது ஹாமித்பக்ரி வசூல் மோசடி செய்வதற்காக தனக்கு மட்டுமே சொந்தமாக உருவாக்கிக் கொண்டது என்று பீஜே சொன்னது அப்பட்டமான பொய் என்பதை, அவரது இன்றைய சகாக்கள் அந்த சங்கத்தின் அங்கத்தினர்கள் என்பதன் மூலம் நிரூபித்துள்ளோம். 

இந்த லட்டர் பேடு சங்கத்தின் மூலம் ஹாமித்பக்ரி தமிழகம் முழுக்க வசூல் வேட்டையாடினார். அது நிர்வாகிகளுக்கு தெரியவந்தபோது, நானும்[பீஜே] சைபுல்லாஹ்வும், லுஹாவும், அலாவுதீனும் அடங்கிய குழுவில் அவரை கண்டபடி கண்டித்தோம் என்று பீஜே சொன்னாரே! அந்த லட்டர் பேடு சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ் எப்படி ஹாமித்பரியை கண்டிக்க முடியும் என்று ஏற்கனவே கேட்டோம். இப்போது அந்த லட்டர் பேடு சங்கத்தின் அங்கமான லுஹா எப்படி ஹாமித்பக்ரியை கண்டிக்க முடியும் என்பதற்கும் பீஜே பதில் சொல்லட்டும். ஹாமித்பக்ரியின் வசூல் மோசடிக்கும், அந்த சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ், லுஹா, எம்.ஐ.ஸுலைமான், எம்.எஸ். ஸுலைமான் ஆகியோருக்கும் சம்மந்தமில்லை என்று பீஜே மறுப்பாரா? அந்த சங்கத்தின் தலைவரான ஹாமித்பக்ரி வசூல் மோசடி செய்தார் என்பது உண்மை என்றால், அந்த மோசடி சங்கத்தில் அங்கம் வகித்த இவர்கள் மீது பீஜே எடுத்த நடவடிக்கை என்ன? ஆக பலர் அங்கம் வகித்த கூட்டு நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தான் ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் வெளிநாட்டு நிதி பெற முயற்சித்தார்கள். ஆனால் அவ்விருவர் மட்டும் இன்று பீஜெயோடு இல்லாத காரணத்தால், அவ்விருவர் மீது மட்டும் பழிபோட்டு இப்போது தன்னோடு இருக்கும் மற்ற சகாக்களை காப்பாற்ற நினைக்கிறார் பீஜே.

இன்னும் சொல்லப்போனால், ஒரு பேச்சுக்கு ஹாமித்பக்ரி செய்த வசூல் மோசடி, சைபுல்லாஹ், லுஹா, இரண்டு சுலைமான்களுக்கு தெரியாமல் நடந்தது என்றே வைத்துக் கொண்டாலும் இந்த வசூல் விவகாரம் தெரிந்தவுடன் இவர்கள் எல்லாம் இந்த சங்கத்தில் இருந்து விலகிவிட்டார்கள் என்று பீஜே சொல்லுவாரா? ஹாமித்பக்ரி இந்த சங்கத்தை கலைத்து விட்டு அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பணியை மட்டும்பார்த்தார் என்று பீஜே சொல்வாரா? 

இதையும் தாண்டி சொல்கிறோம். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளான ஹாமித்பக்ரி, சைபுல்லாஹ் ஹாஜா, இரண்டு சுலைமான்கள், லுஹா ஆகியோர் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் அங்கம் வகித்தது போல் அதே காலகட்டத்தில் தமுமுகவிலும் அங்கம் வகித்தார்கள். அதுவும் மேல் மட்ட அங்கத்தினர்களாக. தலைமைக்கழக பேச்சாளர்களாக. தமுமுக அந்த காலகட்டத்தில் ஒரு வெளிநாட்டு நிதி வசூலித்தால் அதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்று இவர்கள் சொல்லமுடியுமா? அவ்வளவு ஏன்? இன்று த த ஜமாஅத்தில் அங்கம் வகிக்கும் இவர்கள், இந்த ஜமாஅத் வெளிநாட்டு நிதி வாங்கியதை நிரூபித்து விட்டால், அதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்று இவர்கள் நழுவமுடியுமா? இன்னும் தெளிவாக சொல்வதனால் ஜமாஅத் என்பது பரந்து விரிந்த உறுப்பினர்களை கொண்டது. ஆனால் இஸ்லாமிய கல்விச் சங்கமோ குறிப்பிட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களை கொண்டது. அந்த சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அந்த சங்கத்தின் நிர்வாகிகள் முதல் உறுப்பினர்கள் வரை அனைவரும் பொறுப்பாளியாவார்.

எனவே இஸ்லாமிய கல்விச் சங்கம் வெளிநாட்டு நிதியோ, உள் நாட்டு நிதியோ வசூலித்தது மோசடி என்றால் அது ஹாமித்பக்ரி என்ற தனிமனிதனை மட்டும் சாராது. மாறாக பீஜேயின் இன்றைய சகாக்கள் உட்பட அனைவரும் அதில் பங்காளிகள் என்பதும், இந்த பங்காளிகளை தனது பங்காளிகளாக கொண்ட பீஜேயும் இந்த மோசடியில் ஒரு பங்காளி என்பதும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மையாகும். 

அடுத்து வருவது;

இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் ஊதியம் பெற்ற அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தாயி.

அபூதாவூத் மொழிபெயர்ப்பு; அவிழப்போகும் முடிச்சுகள்.

திர்மிதி வெளியீடு; பீஜேயின் தியாகமா? திரைமறைவு பணப் பரிமாற்றங்கள்.

இன்ஷா அல்லாஹ் விரைவில்.

வியாழன், 29 மார்ச், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 3]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் இதுவரை நாம் கேட்ட எந்த கேள்விக்கும் அறிஞர் பீஜே பதிலளிக்கவில்லை என்பதை நமது தொடரில் மேற்கோள் காட்டியுள்ளோம். நமது இரண்டாவது தொடரின் இறுதியாக,  ''நம் ஜமாஅத்தில் இப்போது இல்லாத இரண்டு பிரச்சாரகர்கள், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நாம் செயல்பட்டபோது, நம் ஜமாஅத்தின் சார்பில் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்வதற்காக சென்றார்கள் என்று கூறியுள்ளார். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் வெளிநாட்டிற்கு பிரச்சாரத்திற்கு சென்ற அந்த இரு பிரச்சாரகர்களின் பெயரை பீஜே பகிரங்கமாக சொல்லவேண்டும். என்றும், அப்படி அவர் சொல்லும் பட்சத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பெயரால் வசூல் செய்யப்பட்ட விசயத்தில்  தனக்கோ  தனது தவ்ஹீத் ஜமாத்திற்கோ சம்மந்தமில்லை என்ற அவரது பொய் முகம் வெளிப்படும் இன்ஷா அல்லாஹ்'' என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

ஒரு வாரம் கழிந்தும் நமது இந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. அவர் அந்த இரு தாயிகளின் பெயரை சொல்லவேண்டும். சொல்லவில்லையானால் இவரது அனுமதியின் பெயரில் தான் அந்த தாயிகள் இருவரும் வெளிநாட்டில் வசூல் வேட்டையாடினார்கள் என்ற உண்மையை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

அடுத்து இந்த வெளிநாட்டு நிதி விசயத்தில் அறிஞர் பீஜேயின் இன்னொரு முரண்பாட்டைப் பார்ப்போம்.

மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்கள் பீஜேயை நோக்கி, ''அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இவர்கள் இயங்கியபோது, இவர்களது அப்போதைய தலைவரும், அதற்கடுத்த தலைவராக செயல்பட்ட, தற்போதும் இவரது அமைப்பில் உள்ள ஒரு ஆலிமும் 1999 களில் குவைத்திலுள்ள லஜ்னத்துல் காரதில் ஹிந்திய்யா என்ற அமைப்பிடம் நிதி உதவி பெற முயற்சித்து முடியாமல் போனது. இதுகுறித்து நான் தங்கியிருந்த அறையில் இருந்துதான் அவர்கள் பேசித் திட்டங்கள் பலவும் தீட்டினார்கள். அரபுப்பணம் கிடைக்காதவர்கள் உள்நாட்டு வசூலை இலக்காகக் கொண்டு சீ...சீ...இந்தப்பழம் புளிக்கும் என்று நரி நாடகமாடுகின்றனர். இதுதான் உண்மையாகும்.'' என்ற விமர்சனத்தை முன்வைக்கிறார்.

நன்றாக கவனிக்க வேண்டும். மவ்லவி இஸ்மாயில் ஸலபி தனது விமர்சனத்தின் முக்கிய அம்சமாக,

  • வெளிநாட்டு நிதி பெறக்கூடாது என்ற பைலாவையுடைய, பீஜேயும் அங்கம் வகிக்கும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் மவ்லவி ஹாமித்பக்ரி, அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் மவ்லவி சைபுல்லாஹ் ஹாஜா ஆகிய இருவர், வெளிநாட்டு நிதி பெறும் நோக்கில் குவைத் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
  • இருவரும் குவைத்தில் உள்ள ஒரு நிறுவனத்தை அணுகியுள்ளனர்.
  • அதற்காக மவ்லவி இஸ்மாயில் ஸலபி தங்கியிருந்த அறையில் திட்டங்கள் தீட்டியுள்ளனர்.

இதுதான் இஸ்மாயில் சலபியின் விமர்சனத்தின் முக்கிய அம்சமாகும். 

இதற்கு மறுப்பு எழுதிய அறிஞர் பீஜே, '' இஸ்லாமிய கல்விச்சங்கத்தின் நிறுவனரான ஹாமித்பக்ரியும், அச்சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ்வும், 'தவ்ஹீத் ஜமாஅத் தான் வெளிநாடுகளில் உதவி வாங்காது. நாம் சுயேட்சையான நிறுவனம் தானே? நாம் உதவி வாங்கினால் என்ன என்று ஆலோசித்து அதற்கான முயற்சியில் இறங்கினர். அதன் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு கடிதங்கள் அனுப்பினார்கள். இலங்கை சென்றபோது ஜம்மியத்து அன்ஸாரிஸ் ஸுன்னா, ஷபாப், ஆகிய நிறுவனங்களிடம் பரிந்துரைக் கடிதங்கள் கேட்டனர். இதில் எனக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சம்மந்தம் இல்லை. இந்த விவரங்கள் சில நிர்வாகிகளுக்குத் தெரிந்தபோது தவ்ஹீத் ஜமாஅத் நிரவாகக்குழுவில் விவாதித்தோம். அப்போது அனைவரும் இது சரியான நடைமுறை அல்ல என்று சுட்டிக்காட்டினார்கள். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளாக உள்ளவர்கள் வேறு பெயரிலும் இதுபோன்ற உதவிகளைப் பெறக்கூடாது என்று முடிவு செய்தோம். இதன் பின்னர் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டனர்.'' என்று பீஜே பதிலளித்துள்ளார். 

பீஜேயின் இந்த பதிலில் இருந்து நாம் கேட்கும் கேள்விகள்;

  1. தனக்கும் தவ்ஹீத் ஜமாஅதுக்கும் சம்மந்தமில்லாத இஸ்லாமிய கல்விச்சங்கம் என்ற பெயரில், அதன் அங்கத்தவர்களான ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் வெளிநாட்டி நிதி பெறும் நோக்கில் ஆலோசனை செய்ததையும், அதற்காக இலங்கையில் பரிந்துரைக் கடிதம் பெற்றதையும், வெளிநாட்டிற்கு நிதி பெறும் நோக்கில் கடிதங்கள் அனுப்பியதையும் ஒப்புக்கொண்டுள்ள பீஜே, இந்த மூன்று விஷயங்கள் பீஜேவுக்கு தெரிந்தே நடந்ததா? அல்லது பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டரா? என்று சொல்லவேண்டும்.
  2. [வெளிநாட்டு நிதி பெற முயற்சிக்கும்] இந்த விவரங்கள் சில நிர்வாகிகளுக்குத் தெரிந்தபோது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக்குழுவில் விவாதித்தோம். அப்போது அனைவரும் இது சரியான நடைமுறை அல்ல என்று சுட்டிக்காட்டினார்கள். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளாக உள்ளவர்கள் வேறு பெயரிலும் இதுபோன்ற உதவிகளைப் பெறக்கூடாது என்று முடிவு செய்தோம். இதன் பின்னர் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டனர் என்று பீஜே சொல்வது உண்மையானால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய் என்று பீஜே சொல்வாரா?
  3. ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டது உண்மை என்றால், தவ்ஹீத் ஜமாஅத் முடிவை ஏற்று அவர்கள் வெளிநாட்டு நிதி பெறும் முடிவை கைவிட்டு விட்டனர் என்று பீஜே சொன்னது பொய்யா?
  4. நிர்வாகக்குழு முடிவுக்குப் பின்னரும் ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டது உண்மை என்றால், நிர்வாக்குழு முடிவை மீறிய அவர்கள் மீது பீஜே எடுத்த நடவடிக்கை என்ன?
  5. ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் வெளிநாட்டு நிதி பெற எடுத்த முயற்ச்சிகள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக்குழு முடிவால் கைவிடப்பட்டது என்றால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய்யாகி விடுகிறது. அப்படியானால், அபூதாவூத் மொழியாக்கம் ஷேர் பிடிப்பதற்காக இவர்கள் தனிப்பயணம் மேற்கொண்டார்கள் என்று பீஜே சொல்வாரா?
  6. ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் வெளிநாட்டு நிதி பெற எடுத்த முயற்ச்சிகள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக்குழு முடிவால் கைவிடப்பட்டது என்றால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய் என்றால், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குவைத் சென்ற அந்த இரு தாயிகள் பெயரை சொல்லத் தயக்கம் ஏன்?
அறிஞர் பீஜே மவுனம் கலைந்து மக்கள் தெளிவடையும் வகையில் பதிலளிப்பாரா?
தொடரும் அருளாளன் நாடினால்...

வெள்ளி, 23 மார்ச், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 2]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் அல்லாஹ்வின் வேதத்தின் அடிப்படையில் அன்று ஆகுமானது என்று சொன்ன பீஜே அவர்கள், இன்று மனோஇச்சை பாலிஸி பேசி வெளிநாடு நிதி பெறமாட்டோம் என்று சட்டம் போட்டுக்கொண்டு தன்னை தலைவராக கொண்ட ஜமாஅத்தை பின்பற்றச் செய்கிறார் இது முரணில்லையா? என்று கேட்டோம். இன்றுவரை இதற்கு பீஜே பதில் சொல்லவில்லை. 

அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வஹீ அடிப்படையிலான கட்டளைகளை மட்டுமே பின்பற்றுவோம். அவர்கள் மனிதர் என்ற அடிப்படையில் சொன்னதை ஏற்கமாட்டோம் என்று சொன்ன பீஜே, அல்லாஹ்வின் வஹீ அடிப்படியில் ஆகுமான ஒன்றை, இவரது சொந்த கற்பனையில் உதித்த சட்டங்களை சொல்லி புறந்தள்ளுவது மட்டும் முரணில்லையா? என்று கேட்டோம். பீஜே பதிலளிக்கவில்லை. 

மார்க்க அடிப்படையில் ஆகுமான நிதியை, அதுவும் ஆகுமானதுதான் என்று இவரே ஒத்துக்கொண்ட நிதியை பெற்று நலப்பணிகள் செய்பவர்களை கூலிக்கு மாரடிப்பவர்கள் என்று இவர் விமர்சிப்பது சரியா என்று கேட்டோம். பீஜே பதிலளிக்கவில்லை. ஆனால் பீஜேயாகிய நீங்கள் அரபு நாட்டில் பணம் வசூலித்தீர்களா? என்று ஒரு சகோதரர் கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளித்துள்ளார். இதிலிருந்து தான் முரண்பட்டு நிற்பதை அவரே ஏற்றுக்கொண்டு விட்டார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.

உணர்விலும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், நீங்கள்[பீஜே] அரபுநாட்டில் பணம் வசூலித்தீர்களா? என்ற கேள்வி-பதிலை பதிவு செய்துள்ள பீஜே, வழக்கம் போல இதிலும் முரண்பட்டு தன்னை அடையாளம் காட்டத் தவறவில்லை. அதைப் பார்ப்பதற்கு முன்னால் அந்த பதிலில், ''அரபுகளிடம் வசூல் செய்ய நான் ஆட்களை அனுப்பினேன் என்பதும், திர்மிதி நூலுக்கு அரபுமொழியில் மதிப்புரையும் முன்னுரையும் வாங்கினேன் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே பதிலளித்ததும் புளித்துப் போனதுமாகும்.''' என்று கூறியுள்ளார். ஒரு விமர்சனத்திற்கு சம்மந்தப்பட்டவர் பதிலளித்த பின்பும் அதை மறுநாளோ அல்லது மறு வாரமோ, மறு மாதமோ, மறு ஆண்டோ கிளப்புவது புளித்துப் போன விஷயம் என்றால், அதே உணர்வில் இவர் பதிலளித்த அதே எடிசனில் பாக்கர் மற்றும் ஜவாஹிருல்லாஹ் சம்மந்தமாக ஒரு விமர்சனம் வெளியாகியுள்ளது. அந்த விமர்சனத்திற்கு சம்மந்தப்பட்ட பாக்கரும்-ஜவாஹிருல்லாஹ்வும் முன்பே பதிலளித்துள்ள நிலையில், மீண்டும் கிளப்புவது மட்டும் புளித்துப் போனதாக இவருக்குத் தெரியவில்லையா? உணர்வில் மட்டுமல்ல. வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் மேற்கண்ட இருவர் பற்றி இவராலும், இவரது ஜமாத்தினராலும் அந்த விமர்சனம் வைக்கப்படுகிறதே. அப்படியானால் இவர்களுக்கு மட்டும் இன்னும் புளிப்புத் தட்டவில்லையா? அல்லது அடுத்தவர் பற்றிய விமர்சனத்தை நான் ஆயுளுக்கும் செய்வேன்.ஆனால் என்னைப் பற்றிய விமர்சனத்தை நான் பதில் கொடுக்கும் பதிலை ஏற்றுக் கொண்டு உடனே கைகழுவி விடவேண்டும் என்கிறாரா? ஒரு விமர்சனத்திற்கு பதில் கொடுப்பது மட்டும் போதுமானதன்று. கொடுக்கும் பதில் வைக்கப்பட்ட விமர்சனத்தை உடைத்து நொறுக்கும் வகையில் இருக்கவேண்டும். அப்படி இல்லாத நிலையில் அறிஞர் பீஜேயின் வார்த்தையில் சொல்வதாக இருந்தால் 'கை நிறைய கழுதை விட்டை' என்றாகிவிடும். அந்த வகையில் தான் பீஜே குறித்த விமர்சனங்களுக்கு அவரால் அளிக்கப்படும் பதில்கள் இருக்கின்றன. எனவே தான் அவரைப்பற்றிய விமர்சனங்கள் புதிய புதிய கோணங்களில் அவரைத் தாக்குகின்றன என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறோம்.

அடுத்து, இஸ்லாமிய கல்விச் சங்கம் என்பது அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பிற்கும், தனக்கும் சம்மந்தமில்லாத ஒரு நிறுவனம் என்று காட்டுவதற்காக கடும் பிராயசித்தம் செய்து முயற்சித்துள்ளார் பீஜே. இந்த இஸ்லாமிய கல்விச் சங்கம் என்பது யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதில் பீஜேயின் முரண்பட்ட கருத்தை முதலில் பார்ப்போம். 'ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும்' என்று ஒரு நீண்ட கட்டுரையை தனது இணையதளத்தில் 19 .10 .2010 அன்று வெளியிட்டார். அதில், 

''ஆனால் இவர்[ஹாமித்பக்ரி] தவ்ஹீத் ஜமாத்திற்கு தலைவராக இருந்துகொண்டே, இஸ்லாமிய கல்விச்சங்கம் என்ற பெயரில் லட்டர் பேட் அமைப்பை ஏற்படுத்தி, அதற்காக தமிழகம் முழுக்க வசூல் வேட்டையில் இறங்கினார். சம்பளம் கொடுக்கக் கூட நிதி இலலமல் தவ்ஹீத் ஜமாஅத் தள்ளாடும் நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளை தனது லட்டர் பேடு சங்கத்திற்கு நிதி திரட்ட பயன்படுத்திக் கொண்டார். தனக்கு மட்டுமே சொந்தமான லட்டர் பேட் இயக்கத்தின் பெயரால் எவ்வளவு நிதி திரட்டினாலும்  யாரும் அதைக் கேட்க முடியாது என்பதுதான் இதற்கு காரணம்.'''என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றாக கவனியுங்கள். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தலைவரான ஹாமித்பக்ரி அவர்கள், தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவராக இருந்துகொண்டே தனக்கு மட்டுமே சொந்தமான இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற லட்டேர்பேடு சங்கத்தை உருவாக்கி, தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளை பயன்படுத்தி தமிழகம் முழுக்க வசூல் வேட்டையாடினார். தனக்கு மட்டுமே சொந்தமான இயக்கம் என்பதால் யாரும் நம்மிடத்தில் கேளிவி கேட்க முடியாது என்ற துணிவில் ஹாமித்பக்ரி இப்படி வசூல்வேட்டை நடத்தினார் என்பது மேற்கண்ட பீஜேயின் வாக்குமூலம் சொல்கிறது.  இந்த வாக்குமூலம் வாயிலாக, இஸ்லாமிய கல்விச் சங்கம் என்பது மோசடி வசூல் செய்வதற்காக ஹாமித்பக்ரி தனக்கு மட்டும் சொந்தமாக உருவாக்கிக் கொண்ட ஒரு சங்கம் என்று பீஜே கூறுகிறார். இதை நன்றாக மனதில் வைத்துக் கொண்டு அடுத்த செய்திக்கு வாருங்கள்;

'ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும்'  என்ற அதே கட்டுரையில், ''இந்த விஷயம் [ஹாமித்பக்ரியின் வசூல் மோசடி] தெரிந்தவுடன் அவரை [ஹாமித்பக்ரியை] தமுமுக அலுவலகத்திற்கு அழைத்து நான், லுஹா, சைபுல்லாஹ் ஹாஜா, அலாவுதீன் அடங்கிய குழுவில் கடுமையாக விசாரணை  நடத்தினோம்.  ஜமாஅத்தின்  பெயரால்   கள்ள வசூல் செய்வதற்கா உம்மை தலைவராக நாங்கள்  நியமித்தோம்? என்று கடுமையாக கண்டித்தேன். எந்த காலத்திலும் நம்பிக்கை துரோகத்தை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது என்று எச்சரித்தோம். என் வாழ்நாளில் நான் அதிகமாக கோபப்பட்ட சந்தர்ப்பங்களில் அதுவும் ஒன்று என்கிறார் பீஜே

பீஜேயின் இந்த வாக்குமூலத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற ஒன்றை ஹாமித்பக்ரி அவர்கள் தொடங்கியதே இவருக்கு தெரியாதது போன்றும், அந்த சங்கத்தின் பெயரால் தமிழகம் முழுக்க ஹாமித்பக்ரி வசூல் வேட்டை நடத்தி அமுக்கியபின் தான் இவருக்கும் ஏனைய நிர்வாகிகளுக்கும் தெரியவந்தது போன்றும் உடனடியாக கண்கள் சிவக்க, லுஹா, சைபுல்லாஹ், அலாவுதீன் போன்ற சகாக்கள் சகிதம் ஹாமித்பக்ரியை 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கியதாக கூறுகிறார் பீஜே. இதில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தை உருவாக்கி வசூல் மோசடி செய்தது ஹாமித்பக்ரி மட்டுமே என்றும், ஹாமித்பக்ரி மட்டுமே இந்த சங்கத்தின் ஏகபோக உரிமையாளர் என்ற கருத்தையும், ஆழமாக பதிவு செய்கிறார் அறிஞர் பீஜே. இதையும் மனதில் நன்றாக பதிவு செய்துகொண்டு அடுத்து வாருங்கள்.

மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்களின் மறுக்கு மறுப்பு என்ற கட்டுரை ஒன்றை பீஜே எழுதுகிறார். அதில், ஹாமித்பக்ரி அவர்கள் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தினார். அது தவ்ஹீத் ஜமாஅத் கீழுள்ள நிறுவனம் அல்ல. அதில் சைபுல்லாஹ் ஹாஜாவும் அங்கமாக இருந்தார்.'' என்று குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை தனது உணர்வு பதில்கள் பகுதியிலும் பதிவு செய்துள்ளார்.

ஹாமித் பக்ரியும் கைவிட்ட தமுமுகவும் என்ற தனது முந்தைய வாக்குமூலத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற ஒன்று ஹாமித்பக்ரியின் ஏகபோக நிறுவனம் என்று சொன்ன பீஜே, அந்த ஏகபோக நிறுவனம் சார்பாக ஹாமித்பக்ரி வசூல் வேட்டை நடத்தியபோது, பக்ரியை விசாரணை நடத்திய குழுவில் சைபுல்லாஹ்வும் இருந்தார் என்று சொல்லியுள்ள பீஜே, இந்த வாக்குமூலத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் சைபுல்லாஹ்வும் ஒரு அங்கம் எனக் கூறியுள்ளார். அப்படியானால் ஹாமித்பக்ரியின் வசூல் மோசடியில் சைபுல்லாஹ்வும் ஒரு அங்கம் என்று ஆகிவிடுமே? பிறகு எப்படி சைபுல்லாஹ் அவர்கள், ஹாமித்பக்ரி மீதான இந்த விசாரணையில் அங்கம் வகிக்க முடியும்? தானும் அங்கம் வகிக்கும் ஒரு சங்கத்திற்காக வசூல் செய்ததற்காக சைபுல்லாஹ் அவர்கள் ஹாமித்பக்ரியை எப்படி கண்டிக்க முடியும்? இஸ்லாமிய கல்விச் சங்கம் வசூல் செய்தது தவறு என்றால், ஹாமித்பக்ரியை கடுமையாக எச்சரித்ததாக கூறும் பீஜே, அதே சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ் அவர்களை பற்றி வாய் திறக்காதது முரணில்லையா? ஹாமித்பக்ரி அவர்கள் தமிழகம் முழுக்க வசூல் செய்தது அச்சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ் அவர்களுக்கு தெரியாது என்று சொல்வரா பீஜே? மேலும் இச்சங்கம் வசூல்  செய்தது தவறு என்றால், உடனடியாக இச்சங்கத்தை கலைக்கவேண்டும் என்று ஹாமித்பக்ரிக்கு உத்தரவிட்டாரா பீஜே? இல்லையே? ஹாமித்பக்ரியின் இந்த வசூல் மோசடி சங்கத்தில் இருந்து சைபுல்லாஹ் அவர்களை உடனடியாக விலகச் சொன்னாரா பீஜே? இல்லையே? அப்படியானால் இச்சங்கம் ஹாமித்பக்ரி வசூல் மோசடி செய்வதற்காக தனக்காக உருவாக்கிக் கொண்டது என்று பீஜே சொன்னது பொய் என்பது உறுதியாவதோடு, இச்சங்கம் பீஜேயின் பார்வையில்தான் செயல்பட்டுள்ளது. அதை பீஜேயும் அங்கீகரித்துதான் செயல்படச் செய்துள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது. அதோடு இச்சங்கத்தில் ஹாமிபக்ரி, சைபுல்லாஹ் என்ற இரு அறிஞர்கள் மட்டும் தான் அங்கம் வகித்தார்கள் என்று பீஜே சொல்லத் தயாரா? அப்படி பீஜே சொல்லும் பட்சத்தில் இந்த சங்கத்திற்கும், அனைத்து தவ்ஹீத் ஜமாத்திற்கு இருந்த உறவு சந்தி சிரிக்கும் இன்ஷா அல்லாஹ்.

அடுத்து இச்சங்கம் சார்பாக வெளிநாட்டில் வசூல் செய்யப்பட்டதில் பீஜேவுக்கோ, அல்லது தவ்ஹீத் ஜமாஅத்திற்கோ சம்மந்தமில்லை என்ற பீஜேயின் பொய்யை அலசுவதற்கு முன்னால், மேலே நாம் சொல்லியுள்ள பீஜேயின் முரண்பாடுகளுக்கும் பொய்களுக்கும் பீஜே பதில் சொல்லவேண்டும். அடுத்து, அன்பளிப்பு சம்மந்தமான கேள்விக்கு பதில் கூறிய பீஜே அதில், ''நம் ஜமாஅத்தில் இப்போது இல்லாத இரண்டு பிரச்சாரகர்கள், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நாம் செயல்பட்டபோது, நம் ஜமாஅத்தின் சார்பில் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்வதற்காக சென்றார்கள் என்று கூறியுள்ளார். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் வெளிநாட்டிற்கு பிரச்சாரத்திற்கு சென்ற அந்த இரு பிரச்சாரகர்களின் பெயரை பீஜே பகிரங்கமாக சொல்லவேண்டும். அப்படி அவர் சொல்லும் பட்சத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பெயரால் வசூல் செய்யப்பட்ட விசயத்தில்  தனக்கோ  தனது தவ்ஹீத் ஜமாத்திற்கோ சம்மந்தமில்லை என்ற அவரது பொய் முகம் வெளிப்படும் இன்ஷா அல்லாஹ்.

தொடரும் அருளாளன் நாடினால்...

ஞாயிறு, 18 மார்ச், 2012

அயல்நாட்டு நிதியும்; அப்பட்டமாக பொய் சொல்லும் பீஜேயும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
''நல்ல விசயத்திலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள்[5 ;2 ] என்று அல்லாஹ் கூறுகின்றான். உதவலாம் என்பதில் பெறலாம் என்பதும் அடக்கம். சவூதியிலிருந்தோ வேறு எங்கிருந்தோ நல்ல காரியங்களுக்கு பணம் வந்தால் அதைப் பெறுவதில் எந்த தவறும் இல்லை. எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம். அல்ஜன்னத் ஜூன் 95

சவூதி மற்றும் எந்த பகுதியிலிருந்தும் பணம் பெறுவது சரியானதுதான் என்றும், எங்களுக்கு பணம் வரவில்லை என்பதால்தான் வரவில்லை என்கிறோமே தவிர வந்தால் பெற்றுக்கொள்வோம் என்று பீஜே அவர்கள் அன்று சொன்னதற்கு மாற்றமாக, இன்று 'பாலிசி' பேசி முரண்படுகிறார். இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொல்லையே இரண்டாகப் பிரித்து, வஹீ அடிப்படையில் அவர்கள் சொன்னதை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்றும், நபியவர்கள் நேரம்போகாமல் பேசிய[?]வைகளை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்ற கொள்கையுடைய அறிஞர் பீஜே, வஹீ அடிப்படையில் வெளிநாட்டு நிதி கூடும் என்று சொன்ன தீர்ப்புக்கு மாற்றமாக, பாலிசி எனும் தனது கருத்தை சட்டமாக்கி அதை தன்னை தலைவராக கொண்ட ஜமாஅத்தின் சட்டமாக்கி, தன்னை தலைவராக ஏற்றுக் கொண்டவர்களை பின்பற்றச் செய்கிறார் என்ற நமது கருத்துக்கு சம்மந்தப்பட்ட அறிஞர் பீஜே பதில் சொல்லவில்லை. ஆனால் அவரது இயக்கத்தினர் பதில் என்ற பெயரில் பாய்ந்து வந்து நேரடியாக 'பஸ்'ஸில் ஏறி உட்கார்ந்து விட்டார்கள். இது ஒருபுறமிருக்க மேற்கண்ட அல்ஜன்னத் பதிலில், 
எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம் என்ற தனது கூற்றிற்கு மீண்டும் முரண்பட்டு தான் அப்பட்டமாக பொய் சொல்லும் ஒரு பொய்யர் தான் என்று பீஜே நிரூபிப்பதை கீழே படியுங்கள்;

''இன்னொன்றையும் இந்த இடத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். வெளிநாட்டில் உதவி வாங்கக்கூடாது என்பது ஆரம்பம் முதலே நான் கடைபிடித்த கொள்கை அல்ல. ஆரம்பத்தில் ஜாக் இயக்கத்தில் நான் இருந்தபோது, அந்த இயக்கம் வெளிநாடுகளில் உதவி பெற்ற நிலையிலும் அதில் நான் இருந்தேன். நான் என்னளவில் அத்தகைய உதவியை மறுத்தேனே தவிர அந்த இயக்கம் உதவி பெற்றதை எதிர்க்கவில்லை. அதன் அடிப்படையில் தான் சலபிகள் கூட்டத்தினரின் நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டேன். கஷ்டப்படும் சிலருக்காக நானே அந்த காலகட்டத்தில் எதாவது [வெளிநாடுகளில்] உதவி வாங்கிக் கொடுங்கள் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்.எழுதியும் இருக்கிறேன். மற்றவர்களுக்காக நான் உதவி கேட்டு எழுதிய கடிதங்கள் நிறையவே உள்ளன.கமாலுத்தீன் மதனியிடம் கேட்டால் தருவார். நாளடைவில் பணமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதை கண்டு வெறுத்த நான் அதன் பிறகு தான் இதை[ வெளிநாட்டு நிதி] வெறுக்கலானேன். லிங்க்;

மேற்கண்ட பீஜேயின் இந்த வாக்குமூலம் மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்களுக்கு அவர் எழுதிய மறுப்பில் இருந்து எடுத்ததாகும். இந்த வாக்குமூலத்தில், ஜாக்கில் இவர் இருந்தபோது ஜாக் வெளிநாட்டு நிதியை பெற்றுள்ளது. அதை இவரும் சரிகண்டு அந்த அமைப்பில் இருந்துள்ளார். அந்த ஜாக் வாங்கும் வெளிநாட்டு சல்லிக்காக, இவரும் ஒத்து ஊதும் வகையில் இவருக்குப் பிடிக்காத சலபிக் கூட்டங்களில் பங்கெடுத்துள்ளார். கஷ்டப்படும் பலருக்கு வெளிநாட்டு நிதியை பெற்றுத்தருமாறு கூறியுள்ளார். பல கடிதங்களும் வரைந்துள்ளார். இப்படி தான் வாங்காவிட்டாலும் தனது இயக்கம் வாங்கியதை சரிகண்ட இவர், அதற்காக இவரது கொள்கைக்கு முரண்பட்ட சலபியையும் சரி கண்டு அவர்களின் மேடையில் முழங்கிய இவர், மற்றவர்களுக்காக வெளிநாட்டு நிதி பெற்றுத்தருமாறு கோரிக்கை வைத்த இவர், இன்று தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதோடு, மற்றவர்களை அரபு நாட்டு சலிக்கு மாரடிப்பவர்கள் என்று விமர்சிப்பது கேளிக்கூத்தல்லவா? ஜாக் பெற்ற சல்லிக்காக இவர் சலபிக்கூட்டத்தில் மாரடித்தார் என்று சொல்லலாமா? இதைஎல்லாம் விட ஜாக் வெளிநாட்டு நிதி பெற்று வந்த நிலையில், இவர் ஜாக்கில் இருந்த நிலையில், அல்ஜன்னத் பத்திரிக்கையில் பீஜே ஆசிரியராகவும், கமாலுத்தீன் மதனி வெளியீட்டாளர் ஆகவும் இருந்த காலகட்டத்தில் கேட்கப்பட்ட வெளிநாட்டு நிதி பற்றிய மேற்கண்ட கேள்விக்கு, எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம் என்று அப்பட்டமாக பொய் சொல்லியுள்ளார். எங்களுக்கு வரவில்லை என்பதன் அர்த்தம், எனக்கு அதாவது பீஜே எனும் எனக்கு வரவில்லை என்று அர்த்தம் என்று வார்த்தை ஜாலம் காட்டமுடியாது. அப்படி பீஜே தனிப்பட்ட தனக்கு வரவில்லை என்றால், 'நான் தனிப்பட்ட முறையில் வெளிநாட்டு நிதி வாங்கவில்லை. ஆனால் நான் சார்ந்துள்ள ஜாக் அமைப்புக்கு வெளிநாட்டு நிதி வருகிறது என்று பதில் சொல்லியிருக்க வேண்டும். வெளிநாட்டு நிதியை தனது அமைப்பு வாங்கிய நிலையில் அதை மறைத்து எங்களுக்கு அப்படி பணம் எதுவும் வரவில்லை என்று அப்பட்டமாக பொய் சொல்லியுள்ள இவரைத் தெரிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தை தூய வடிவில் சொல்ல துவங்கப்பட்ட அல்ஜன்னத்தில் அதன் ஆசிரியரான இவரே ஒரு பொய்யராக இருந்துள்ளார். இவர் நினைத்தால் எதை மறைக்கவும் எத்தனை பொய்யும் சொல்லத் தயங்காதவர் என்று அறிந்துகொள்ளுங்கள். 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

சனி, 17 மார்ச், 2012

சொந்த செலவில் கட்டிய பள்ளிவாசல்கள்; பீஜே அன்றும் இன்றும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

''ஒருவர் பல லட்சம் செலவு செய்து பள்ளிவாசல் கட்டுகிறார். அப்பள்ளிக்குத் தம் பெயரை வைக்க விரும்புகிறார். மார்க்கம் அதை அனுமதிக்கிறதா? என்ற கேள்விக்கு அல்ஜன்னத் மார்ச் 95 அல்ஜன்னத் மாத இதழில் பதிலளித்துள்ள அறிஞர் பீஜே, ''பள்ளிவாசல்கள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன.[72 ;18 ] என்ற வசனத்தை முன்வைத்து, ஒரு மனிதரோ ஒரு கூட்டத்தாரோ தம் சொந்த செலவில் பள்ளிவாசலைக் கட்டினாலும் அதில் அவருக்கோ அக்கூட்டத்திற்கோ தனி உரிமை ஏதுமில்லை' என்று கூறிவிட்டு, ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் சொந்தமானது என்ற எண்ணத்தில் இன்னாருடைய பள்ளி என்று பெயர் சூட்டகூடாது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம். பல்வேறு பள்ளிவாசல்கள் உள்ள ஊர்களில் ஒரு குறிப்பிட்ட பள்ளிவாசலை அடையாளம் காண்பதற்காக பெயர் சூட்டினால் அதில் தவறேதுமில்லை என்கிறார். அதோடு பள்ளிவாசலை கட்டியவரே தன் பெயர் சூட்டப்பட்ட வேண்டும் என்று ஆசைப்படுவது அவரது நோக்கத்தின் தூய்மையின்மையைக் காட்டுகின்றது என்றும் கூறுகிறார்.

ஒருவர் தன் சொந்த செலவில் பள்ளிவாசல் கட்டினாலும் அதில் அவருக்கு எந்த உரிமையுமில்லை. எந்த அளவுக்கென்றால் தான் கட்டிய அப்பள்ளியில் தனது பெயரை சூட்டக்கூட உரிமையில்லை என்பது அறிஞர் பீஜே அவர்களின் பதிலின் சாரம்சமாகும். அப்படியே இந்த பதிலை எஸ்.பி.பட்டினம் பள்ளிவாசலுக்கு பொருத்திப் பார்ப்போமா? எஸ்.பி. பட்டினத்தில் ஒரு தம்பதியினர் தங்கள் சொந்த செலவில் ஒரு பள்ளிவாசலை நிறுவி அதை மக்களின் பயன்பாட்டுக்கும் கொண்டு வந்து அந்த பள்ளியில் பல ஆண்டுகளாக தொழுகை நடைபெற்று வருகையில், திடீரென்று ஏதோ தனது சொத்தை விற்பதுபோல் பள்ளிவாசலை அறிஞர் பீஜே அவர்களின் ஜமாத்திற்கு பத்திரம் முடித்து கொடுக்கிறார்கள். அதை பீஜேயும் ஏற்றுக் கொள்கிறார். அதையொட்டி ஏற்பட்ட பிரச்சினையில் தொழுகை நடந்துவந்த பள்ளி பூட்டப்பட்டு இன்று பாழடைந்த மண்டபமாய் காட்சி தருகிறது. ஒருவர் தன் சொந்த செலவில் கட்டிய பள்ளிக்கு தன் பெயர் வைப்பதற்கு ஆசைப்பட்டால் அங்கே அவரது நோக்கம் தூய்மையற்றது என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே, இன்று, அல்லாஹ்வுக்காக மக்களின் தொழுகைக்காக வக்ப் செய்யப்பட்ட பள்ளியை ஒரு சொத்தைப் போல் பாவித்து அந்த தம்பதி எழுதித் தர முன்வந்தபோது, 'நீங்கள் என்றைக்கு அந்த பள்ளியை மக்களின் தொழுகை பயன்பாட்டுக்கு விட்டுவிட்டீர்களோ அதற்கு  பின்னால் அப்பள்ளி மீது உங்களுக்கு கடுகளவும் உரிமையில்லை. அதை நீங்கள் எங்களுக்கோ வேறு யாருக்கோ நீங்கள் பத்திரம் முடித்து தரமுடியாது. அப்படி நீங்கள் பத்திரம் முடித்து தந்தால், நீங்கள் அந்த பள்ளியை உங்கள் சொந்த சொத்தாக கருதியுள்ளீர்கள் என்று அர்த்தம்.  அப்பள்ளியை கட்டிய உங்களின் நோக்கம் தூய்மையற்றதாகிவிடும் என்று தடுத்தாரா பீஜே? இல்லை. அப்பள்ளியை தனது ஜமாஅத் சொத்தாக்கி கொண்டார். இது பீஜேயின் முரண்பாடில்லையா? மேலும் தொழுகை நடைபெற்று பிறகு பூட்டப்பட்டு இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை மீட்போம் என்று சொல்லும் பீஜே, அல்லாஹ்வை வாங்கிய பள்ளியை பூட்டப்படுவதற்கு காரணமாகி நிற்கிறாரே! இது அல்ஜன்னத்தில் அவர் சொன்ன பதிலுக்கு முரணில்லையா? முதலில் இந்த எஸ்.பி.பட்டினம் பள்ளி மீதான தனது ஜமாஅத்தின் உரிமையை விலக்கிக் கொண்டு அப்பள்ளியை திறந்து அல்லாஹ்வை வழிபடச் செய்து தனது செயலுக்கு பரிகாரம் தேடட்டும்.

சனி, 10 மார்ச், 2012

வெளிநாட்டு நிதி; பீஜே அன்றும்-இன்றும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

வெளிநாட்டு அரசுகளிடம் இருந்தோ, நிறுவனங்களிடம் இருந்தோ நிதி உதவி பெறமாட்டோம் என்று அறிஞர் பீஜே அவர்களின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பைலா வைத்துள்ளதை அனைவரும் அறிவோம். வெளிநாட்டு நிதி பெறுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அறிஞர் பீஜே, வெளிநாட்டு நிதி பெற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்று ஆறு அம்சங்களை பட்டியலிட்டுள்ளார்.
  1. மக்களுக்கும் ஜமாத்திற்கும் தொடர்பு இல்லாமல் போய்விடும்.
  2. மக்களுக்கு கணக்கு காட்ட மறுக்கும் நிலை ஏற்படும்.
  3. கணக்கற்ற பொருளாதாரம் காரணமாக ஆடம்பர ஜமாஅத்தாக மாறிவிடும்.
  4. தாவா பணிகளை விட எப்படி வெளிநாட்டினரை ஏமாற்றி பணம் சேர்க்கலாம் என்பதே குறிக்கோளாகப் போய்விடும்.
  5. அரசாங்கத்தின் தேவையற்ற கெடுபிடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
  6. பண உதவி செய்யும் நிறுவனங்களின் கொள்கைக்கு எதிராக வாய்திறக்கக் கூடாது என்ற புதுப் பாலிசி எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
என்று கூறியுள்ளார். படிக்க;http://onlinepj.com/unarvuweekly/velinattil_uthavi_peruvathu_thavara/

நன்றாக கவனிக்க வேண்டும். இந்த ஆறு அம்சங்களில் ஒன்று கூட குர்'ஆன் ஹதீஸில் சொல்லப்பட்டதல்ல. இவரது கற்பனையில் உதித்தவையே. வெளிநாட்டு அரசிடமிருந்தோ, நிறுவனங்களிடமிருந்தோ பணம் பெறுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது அல்ல எனும் போது, தானாக ஒரு தடைபோட்டுக் கொண்டதோடு, வெளிநாட்டு நிதி உதவி பெற்று பல்வேறு நலப்பணிகளை செய்துவரும் அமைப்புகளையும் அறிஞர்களையும் வெளிநாட்டு சல்லிக்காக மாரடிப்பவர்கள் என்றெல்லாம் சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறார் அறிஞர் பீஜே. வெளிநாட்டு நிதி பெறும் விசயத்தில் பீஜேயின் அன்றைய நிலை என்ன என்பதையும் கொஞ்சம் பார்ப்போமா;

கேள்வி; சவூதியிலிருந்து உங்களுக்குப் பணம் வருகிறது என்று குராபிகள் கூறி வந்தனர்.அவர்களுக்குத்தான் பணம் வருகிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள். நல்ல பணிகளுக்கு சவூதியிலிருந்து பணம் வந்தால் அதைப் பெறுவது தவறா?
-கே.எம்.ஏ.உமர், திசையன்விளை.

பதில்;நல்ல விசயத்திலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள்[5 ;2 ] என்று அல்லாஹ் கூறுகின்றான். உதவலாம் என்பதில் பெறலாம் என்பதும் அடக்கம். சவூதியிலிருந்தோ வேறு எங்கிருந்தோ நல்ல காரியங்களுக்கு பணம் வந்தால் அதைப் பெறுவதில் எந்த தவறும் இல்லை. எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம். அல்ஜன்னத் ஜூன் 95

சவூதி மற்றும் எந்த பகுதியிலிருந்தும் பணம் பெறுவது சரியானதுதான் என்றும், எங்களுக்கு பணம் வரவில்லை என்பதால்தான் வரவில்லை என்கிறோமே தவிர வந்தால் பெற்றுக்கொள்வோம் என்று பீஜே அவர்கள் அன்று சொன்ன பதிலை நீங்கள் படித்தீர்கள். ஆனால் இன்று தான் மேற்கோள் காட்டிய குர்'ஆன் வசனத்திற்கு முரணாக வெளிநாட்டு நிதி பெற்றால் 'பின் விளைவுகள்' ஏற்படும் என்று தனது மனோஇச்சையை சட்டமாக்கிக் கொண்டு,மற்றவர்களையும் விமர்சிக்கிறார். கேட்டால் சொல்வார்; வெளிநாட்டு நிதி பெறுபவர்கள் அந்த நாட்டிற்கு ஏற்ப தாளம் போடுகிறார்கள் என்று. உண்மையில் அவ்வாறு ஏதேனும் தவறிழைத்தால் அந்த தவறை விமர்சிக்கலாம். தானும் சவூதி போன்ற நாடுகளில் பணம் பெற்று மற்றவர்களை விட சிறப்பான நலப்பணிகளை செய்து குறைகளற்ற கணக்கு வழக்குகளை கையாண்டு நன்மதிப்பை பெற பீஜே முயற்சிக்கலாம். வெளிநாட்டு நிதி பெறுபவர்கள் சில முறைகேடுகள் செய்கிறார்கள் எனவே நான் வாங்கமாட்டேன் என்றால், உள்நாட்டு வசூல் செய்பவர்களும் சில முறைகேடுகளை செய்கிறார்கள். அதற்காக உள்நாட்டு வசூலையும் பீஜே நிறுத்தி விடுவாரா? உள்நாட்டு மக்களிடம் வசூலித்து முறையாக கணக்கு வழக்குகளை நேர்மையாக கையாள்கிறேன் என்றும், தமிழகத்திலேயே கணக்கு வழக்குகளில் நேர்மையான ஜமாஅத் என்னுடையது தான் என்று பீஜே சொல்வது உண்மையானால் அதே நேர்மையை வெளிநாட்டு நிதியிலும் ஏன் கடைபிடிக்க முடியாது? சிலர் சில தவறுகளை செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அது போன்று ஆகிவிடுவோம் என்று பீஜே நினைப்பது அவரது தன்னம்பிக்கையின்மையை காட்டுகிறது. அன்றைக்கு அருள்மறை வசனத்தின் அடிப்படையில் பதிலளித்தவர் இன்று 'பாலிசி' பேசுகிறார் என்றால், பாலிசி என்ற ஒன்றை மூன்றாவது ஆதாரமாக பீஜே கொண்டிருக்கிறார் என்று சில சகோதரர்கள் சொல்வது உண்மையோ ஏன் எண்ணத்தோன்றுகிறது. அல்லாஹ் அவரையும் நம்மையும் பாதுகாப்பானாக!

வெள்ளி, 2 மார்ச், 2012

குர்'ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்; பீஜே அன்றும்-இன்றும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மார்க்கத்தை தூய வடிவில் சொல்லக் கிளம்பிய அறிஞர் பீஜே அவர்கள், தனது ஆய்வின் உச்சகட்டமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் சிலவற்றை பட்டியலிட்டு இவைகள் குர்'ஆனுடன் மோதுகின்றன என்றும், வேறு சில காரணங்கள் மற்றும் உவமானங்களை கூறி நிராகரிப்பதை அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்'ஆனோடு ஒரு போதும் மோதாது என்பதும், குர்'ஆனோடு முரண்படுவது போல் தோற்றமளித்தாலும் அந்த ஹதீஸை சரியான வகையில் விளங்க வேண்டுமே தவிர, ஹதீஸை ஒருபோதும் நிராகரிக்கக் கூடாது என்பதுதான் அறிஞர் பீஜேயின் முந்தைய நிலைப்பாடக இருந்தது. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பீஜெயிக்கு அன்று இருந்த உறுதியை அறிய பல ஆதாரங்கள் இருந்தாலும் குறிப்பாக ஒன்றைத் தருகிறோம்.

பிப்ரவரி 95அல்ஜன்னத் மாத இதழில், ''இணைவைக்கும் இமாமைப் பின்பற்றி தொழுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அறிஞர் பீஜே எடுத்து வைத்த ஹதீஸில் 'ஏனெனில் இமாம் உங்களுக்கும் உங்கள் இறைவனுக்கும் மத்தியில் தொடர்பாளர்களாக உள்ளனர்'' என்ற வரியும் உள்ளது. இதையொட்டி, முஹம்மது கஸ்ஸாலி என்ற சகோதரர் ஏப்ரல் 95 அல்ஜன்னத் இதழில் கேள்வி எழுப்புகிறார். அவர் தனது கேள்வியில், 'இமாம் நமக்கும் இறைவனுக்கும் தொடர்பாளராக உள்ளார் என்ற ஹதீஸை வெளியிட்டுள்ளீர்களே! இது புரோகிதத்தை காட்டவில்லையா? என்று கேட்க, அவருக்கு பதிலளித்த பீஜே, ''புரோகிதத்தைக் காட்டுகிறது என்று அந்த ஹதீஸை நிராகரிக்கவேண்டும் என்கிறீர்களா? புரோகிதத்தை காட்டாத வகையில் விளங்கவேண்டும் என்று சொல்கிறீர்களா? என்று கேட்டுவிட்டு அடுத்து பீஜே சொல்வதை கவனியுங்கள். ''ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமனதாக இருக்கும் போது அதை நிராகரிக்க காரணங்களை தேடவேண்டாம்' என நேத்திய்யடியாக சொல்லி, ஹதீஸை குர்'ஆனுக்கு முரண்படாமல் விளங்க வேண்டுமே தவிர நிராகரிக்க கூடாது என்று ஆணித்தரமாக கூறுகிறார் அறிஞர் பீஜே.

பீஜேயின் இன்றைய நிலை என்ன? ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று அவரே ஒருபுறம் ஒப்புக்கொள்கிறார். மறுபுறம் அதை நிராகரிக்க அவரே காரணங்களை தேடுகிறாரா இல்லையா?  இறைவனுக்கும்-மனிதர்களுக்கும் இடைத்தரகர்களாக இமாம்கள் திகழ்கிறார்கள் என்ற பாரதூரமான அர்த்தம் தரும் ஹதீஸை கூட, புறக்கணிக்காமல்  பக்குவமாக விளங்கவேண்டும் என்று அன்று சொன்ன பீஜே, இன்று எடுத்தேன் கவிழ்த்தேன் என ஹதீஸ்களை படுகுழியில் தள்ளுகிறாரா இல்லையா? குர்'ஆனுக்கு முரண்படுகிறது என்று இவராலும் இவரது தரப்பு அறிஞர்களாலும் கடும் ஆய்வுக்கு[!] பின் எழுதப்பட்ட ''ஹதீஸ்கள் குர்'ஆனுக்கு முரண்படுமா? என்ற நூலில் சில ஹதீஸ்களை பட்டியலிட்டு இவைகள் குர்'ஆனோடு மணிக்கு பல்லாயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதுவதால் குர்'ஆன் சேதமடையக் கூடும். எனவே இந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அதை நிராக்ரிகக்வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தாரே! இதிலாவது பீஜெயால் உறுதியாக நிலைத்து நிற்க முடிந்ததா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது.

மேற்கண்ட நூலில், குர்'ஆனுடன் மோதுவதாக மேற்கோள் காட்டப்பட்ட, பீஜெயாலும் அவர் தரப்பு அறிஞர்களாலும் பல மேடைகளில் முழங்கப்பட்ட ஹதீஸ் இன்று சரியான ஹதீஸாக 'ஞானஸ்தானம்' பெற்றுள்ளதை கீழே படியுங்கள்;

மிகச் சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் சொல்கிறோம்.

10. பயணத்தொழுகை

அல்லாஹ் தொழுகையை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும் பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (350)

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது பிரயாணத்தொழுகை எந்த விதமான மாற்றத்திற்கும் உள்ளாகாமல் தொழுகை கடமையாக்கப்பட்ட காலத்திலிருந்து இரண்டு ரக்அத்தாகவே இருந்தது என்றக் கருத்தைத் தருகிறது. ஆனால் திருக்குர்ஆன் பயணத்தொழுகையைப் பற்றி பேசும்போது நான்கு ரக்அத்துகளிலிருந்து இரண்டு ரக்அத்துகளாக பயணத்தொழுகை சுருக்கப்பட்டது என்று கூறுகிறது.

நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக்கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.

அல்குர்ஆன் (4 : 101)

முழுமையான ஒன்றிலிருந்து தான் சுருக்கமுடியும். பயணத்தில் தொழுகையை சுருக்குவதாக இருந்தால் முதலில் நான்கு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்று சட்டம் இருந்திருக்க வேண்டும். இந்த நான்கு ரக்அத்துகளிலிருந்து இரண்டாக பயணத்தில் தொழுகை குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் பயணத்தொழுகையை குறிப்பிடும் போது நான்கிலிருந்து சுருக்கப்பட்டது என்று கூறாமல் தொழுகை கடமையாக்கப்பட்ட காலத்திலிருந்தே பயணத்தொழுகை எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இரண்டுரக்அத்துகளாகவே இருப்பதைப் போன்று கூறியுள்ளார்கள். எனவே இவர்கள் கூறும் கருத்து குர்ஆனிற்கு முரண்பாடாக இருப்பதால் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறினோம்.


இந்த ஹதீஸை சரிகாணுபவர்கள் இதற்கு கூறிய விளக்கத்தையும் நாம் ஆராய்ந்ததன் மூலம் கிடைத்த விளக்கத்தையும் வைத்துப் பார்த்தால் இந்த ஹதீஸை முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. இவர்கள் கூறும் விளக்கத்திற்கு முறையான ஆதாரங்கள் இருப்பதால் இந்த விளக்கத்தை நாம் ஏற்றுத் தான் ஆகவேண்டும்.

சத்தியத்தை தெரிவது தான் நம்முடைய நோக்கமே தவிர நாம் கூறிய கருத்துக்களை எப்படியாவது சரிகாண வேண்டும் என்று நாம் பிடிவாதம் பிடிக்கமாட்டோம். எனவே ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை பின்வரும் முறையில் முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழும் போது கடமையானத் தொழுகை இரண்டு ரக்அத்துகளாக இருந்தது. மதீனாவிற்கு அவர்கள் வந்தவுடன் நான்கு ரக்அத்துகளாக மாற்றப்பட்டது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(மக்காவில்) தொழுகை இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பின் நான்கு ரக்அத்துகளாகக் கடமையாக்கப்பட்டது. மேலும் பிரயாணத் தொழுகை மட்டும் முன்பு கடமையாக்கப்பட்டிருந்தவாறே (இரண்டு ரக்அத்தாகவே இருக்கட்டுமென்று) விட்டுவிடப்பட்டது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (3935)

மதீனாவிற்கு வருவதற்கு முன்பு மக்காவில் இரண்டு ரக்அத்துதான் கடமையாக்கப்பட்டிருந்தது என்றக் கருத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் சொல்லவில்லை. அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்களும் இந்தக் கருத்தை கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை லுஹர் தொழுகையை இரண்டு இரண்டாகத் தான் தொழுதுவந்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஜுஹைஃபா (ரலி)

நூல் : சஹீஹு இப்னி ஹிப்பான் பாகம் : 6 பக்கம் : 143

தொழுகையை இரண்டாக சுருக்கிக் கொள்ளுவதற்கு அனுமதியளிக்கும் வசனம் மதீனாவில் இறங்கியது என்றக் கருத்தை இப்னுல் அசீர் தவ்லாபீ மற்றும் சுஹைலீ போன்ற அறிஞர்கள் பதிவுசெய்துள்ளார்கள் .

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த உடன் தொழுகை நான்காக மாற்றப்பட்டது. இதன் பிறகு பயணத்தில் இரண்டு ரக்அத்தை சுருக்கிக்கொள்ளலாம் என்று வசனம் இறங்கியது. இதனால் ஊரில் நான்கு ரக்அத்துகளாகவும் பிரயாணத்தில் இரண்டு ரக்அத் தொழுகவும் கடமையாக்கப்பட்டது. இறுதியில் முடிவாக்கப்பட்ட இந்த நிலையைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் முரண்பாடு வராது.

தொழுகை நான்கு ரக்அத்துகளாக மாற்றப்ட்டது. பின்பு வசனம் இறங்கியதால் இரண்டாக குறைக்கப்பட்டது என்ற விளக்கம் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் இல்லாததால் அது குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறினோம். ஆனால் இந்த விளக்கம் வேறு ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகிவிட்டதால் முரண்பாடு எதுவும் இல்லாமல் இதை விளங்கிக்கொள்ள முடியும்.

முதலில் இரண்டு ரக்அத் கடமையாக இருந்தது. மதீனாவிற்கு வந்த உடன் நான்காக மாற்றப்பட்டதால் முன்பிருந்த தொழுகையை விட இரண்டு ரக்அத் அதிகமாக்கப்பட்டது. இதன் பிறகு பயணத்தில் குறைத்துக்கொள்ளும் படி வசனம் இறங்கியதால் மதீனாவில் இருக்கும் போது பயணத்தில் இரண்டு ரக்அத் தொழவேண்டும் என்ற பழைய சட்டம் இறுதியாக அப்படியே வைக்கப்பட்டுவிட்டது என்பதே ஆயிஷா (ரலி) அவர்களுடைய கூற்றின் விளக்கம்.

முரண்பாடு நீங்கிவிட்டதால் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளலாம். 

காய்தல் உவத்தல் இன்றி நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே! புகாரியில் இடம்பெற்ற அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் ஒரு ஹதீஸை எடுத்து வைத்து, இந்த ஹதீஸ் அதாரப்பூர்வமனதுதான்; ஆனாலும் குர்'ஆனோடு மோதுகிறது. எனவே இந்த ஹதீஸை நபி[ஸல்] அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள். எனவே இதை நிராகரிக்கக் வேண்டும் என்று சொல்லியதன் மூலம், நபியவர்கள் சொன்ன செய்தியை அவர்கள் சொல்லவில்லை என்றும், அன்னை ஆயிஷா அவர்கள் நபியவர்கள் சொல்லாத ஒன்றை இட்டுக்கட்டி விட்டார்கள் என்றும், நபியவர்கள் சொல்லாத ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் தெரியாமல் நற்சான்று வழங்கி விட்டார்கள் என்றும், நபியவர்கள் சொல்லாத ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று இமாம் புகாரி அவர்கள் அறியாமையினால் பதிவு செய்துவிட்டார் என்றும் நினைக்கும் அளவுக்கு இவர்களின் இந்த 'ஹதீஸ் நிராகரிப்பு' காட்டியதே!

இன்றைக்கு அதே புஹாரியில் இடம்பெறுள்ள அதே அன்னை ஆயிஷா அவர்கள் அறிவிக்கக்கூடிய வேறு ஒரு ஹதீஸை கொண்டுவந்து போட்டு, முன்னர் தாங்கள் நிராகரித்த ஹதீஸை இன்று சரிகான்கிறார்கள் என்றால், புஹாரியைக் கூட இவர்கள் முழுமையாக படிக்காமல் ஹதீஸ்களை நிராகரிக்கும் போடுபோக்குடையவர்கள் என்று விளங்குகிறதா? அதோடு இவர்களின் இன்னொரு கருத்தையும் இங்கே கவனிக்கக் வேண்டும். இவர்களின் இந்த ஹதீஸ் நிராகரிப்பைக் கண்ட யாரோ ஒரு சிலர், பீஜெயிக்கு இந்த ஹதீஸ் குறித்து அளித்த விளக்கம் ஏற்புடையதாக இருந்ததாக கூறுகிறார். அப்படியானால் இவருக்கு விளங்காத ஒன்று வேறு யாருக்கேனும் விளங்கக் கூடும் அல்லவா? அப்படியானால் இவர் செய்யவேண்டியது என்ன? எந்த ஹதீஸ் குர்'ஆனுக்கும்-வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கும் முரண்படுவதாக இவருக்கு தோன்றுகிறதோ, அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என தூக்கி விசாமல், அந்த ஹதீஸின் நிலை குறித்து தனது தரப்பு அறிஞர்கள் மட்டுமல்லாது மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள், உலக ரீதியில் உள்ள சிறந்த அறிஞர்கள் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்று விளக்கம் கானுவதுதானே இவர் செய்ய வேண்டியது. அதை விடுத்து தனது கருத்துக்கு ஒத்த கருத்துடைய சிலரோடு மட்டும் ஆலோசித்து ஹதீஸ்களை நிராகரித்தால் இந்த நிலைதான் ஏற்படும் என்பதோடு, இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என நம்பும் ஒரு சாராருக்கு தவறான வழிகாட்டியமைக்கும் பீஜே பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். 

அடுத்து, மேற்கண்ட ஹதீஸை நிராகரிப்பதில் இவரும், இவர் தரப்பு அறிஞர்களும் காட்டிய வேகத்தை இன்று ஹதீஸை சரி கண்ட பின்னால் மக்களிடம் அதே வேகத்தோடு கொண்டு போய் சேர்க்கவில்லையே? கேட்டால் சொல்லுவார். நான் இணையதளத்தில் திருத்தி விட்டேனே என்று. இவர் இணையதளத்தில் சத்தமின்றி திருத்தியது எத்தனை பேருக்குத் தெரியும்? மார்க்க விசயத்தில் முன்னர் சொன்ன ஒரு கருத்தை மாற்றுவதாக இருந்தால் அதை பகிரங்கமாக அறிவிப்பதுதான் முறை. ஏதேதோ வெட்டியான செய்திகளுக்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து 'பிளாஸ் நியூஸ்' போடும் இவர் உயிரினும் மேலான தூதரின் ஒரு சொல்லை நேற்று மறுத்தேன்; அது தவறு. அது சரியான சொல்தான் என்று இவரது அத்தனை மீடியாக்கள் மட்டுமன்றி, இவரது மார்க்கஸ்களில் அறிவிப்புப் பலகை வைத்து எழுதுவதோடு, இவரது மற்றும் இவர் தரப்பு பேச்சாளர்களின் நிகழ்ச்சியிலும் அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து சத்தமின்றி நூலை உருவுவதுபோன்று 'நூலில்' இருந்து வார்த்தைகளை உருவுவதால் எந்த பலனுமலில்லை என்பதை பீஜே தெரிந்து கொள்ளட்டும்.

சனி, 25 பிப்ரவரி, 2012

சுவனத்தில் ஆதம்[அலை]-ஹவ்வா[அலை] ஆடை அவிழ்ந்ததா? பீஜே அன்றும்-இன்றும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான். அல்-குர்'ஆன் 7 ;22

மேற்கண்ட இந்த வசனத்திற்கு, ''ஆதம்-ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் அந்த மரத்தினை சுவைத்தவுடன் அவர்களின் ஆடை நீங்கி, அவர்களின் வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவர்கள் சுவனத்தின் இலைகளைக் கொண்டு மறைத்துக் கொண்டனர்.''என்ற விளக்கத்தை அறிஞர்கள் முன்வைத்துள்ளார்கள். அறிஞர்களின் இந்த வாதம் தவறு என்று கூறும் அறிஞர் பீஜே அவர்கள், 
''இம்மரத்தைச் சாப்பிடும் முன் ஆண், பெண் என்ற இனக் கவர்ச்சி அவர்களுக்கு இருக்க வில்லை. இம்மரத்தைச் சாப்பிட்டபின் அவர் களுக்குப் பாலுணர்வு ஏற்பட்டது என்று கருதுவது தான் சரியாகும். இதைச் சாப்பிட்டவுடன் சொர்க்கத்தின் இலைகளால் இருவரும் தம்மை மறைத்துக் கொண்டார்கள் என்று அடுத்தடுத்த வசனங் களில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இம் மரம் பாலுணர்வை ஏற்படுத்தும் மரம் என்பது தெரியவரும்.'' என்று தனது திருக்குர்'ஆன் தமிழாக்கம் முதல் பதிப்பில் சொன்னார். பின்னாளில் எழுந்த விமர்சனங்களை கண்டு, இப்போது இறுதியாக ''அம்மரத்தை புசித்ததால் அவர்களின் வெட்கத் தலங்களின் தனித்தன்மை அவர்களுக்கு தெரியவந்தது.'' என்று கூறுகிறார்.

இந்த வசனத்தை பொருத்தவரை இது பீஜே அவர்களின் மூன்றாவது பரிமாணமாகும்.


பரிமாணம்;1 இந்த மரத்தை நெருங்காதீர்கள் என்று திருக்குர்ஆன் 2:35, 7:19,20,22, 20:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது குறித்து பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஆனால் திருகுர்ஆனிலும், நபிமொழிகளிலும் இது எந்த மரம் எனக் கூறப்படவில்லை. மரம் எதுவென் பதில் முக்கியத்துவம் ஏதுமில்லை. எல்லா வசதிகளையும் செய்து கொடுத்த பின்பும் ஒரே ஒரு மரத்தை நெருங்காமல் ஆதம்(அலை) தம்மைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதும், அவர் வெளியேற்றப்பட்டதற்கு அது காரணமாக அமைந்தது என்பதுதான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். திருகுர்ஆனிலும், நபிமொழியிலும் கூறப்படாததைக் கூறுவோர் இறைவன் பெயரில் இட்டுக் கட்டிய குற்றத்தைச் சுமப்பவர்களாவர்.

பரிமாணம்;2 இம்மரத்தைச் சாப்பிடும் முன் ஆண், பெண் என்ற இனக் கவர்ச்சி அவர்களுக்கு இருக்கவில்லை. இம்மரத்தைச் சாப்பிட்டபின் அவர்களுக்குப் பாலுணர்வு ஏற்பட்டது என்று கருதுவது சரியாகும்.

பரிமாணம்;3  ''அம்மரத்தை புசித்ததால் அவர்களின் வெட்கத் தலங்களின் தனித்தன்மை அவர்களுக்கு தெரியவந்தது.''

முதல் பரிமாணத்தில் அது எந்த மரமாக இருந்தால் நமக்கென்ன என்கிறார். இரண்டாவது பரிமாணத்தில் அது பாலுணர்வை தூண்டிய மரம் என்கிறார். மூன்றாவது பரிமாணத்தில் அது அவர்களின் வெட்கத்தலங்களின் தனித்தன்மையை உணர்த்திய மரம் என்கிறார். இப்போதைய தனது பரிமாணங்களுக்கு பீஜே ஒரு வசனத்தை மேற்கோள் காட்டுகிறார். அது இதுதான்; 

"நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.(20:118)

பார்த்தீர்களா! இந்த வசனத்தில் அல்லாஹ் சுவனத்தில் நிர்வாணமாக இருக்கமாட்டீர் என்று சொல்கிறான். பிறகு எப்படி ஆதம்-ஹவ்வா நிர்வானமகியிருப்பார்கள் என்று கூறுகிறார். அறிஞர் பீஜேயின் வேலையே முன்னால் உள்ள வசனங்களையும், பின்னால் உள்ள வசனங்களையும் விட்டுவிட்டு தனக்கு தேவையானதை மட்டும் வெட்டி ஒட்டுவதுதான். மேற்கண்ட வசனத்திற்கான விளக்கம் பெற எங்கும் போக வேண்டியதில்லை. பீஜே விட்டுவிட்ட  இதையொட்டிய வசனங்களை சேர்த்து பார்த்தாலே விளங்கிக் கொள்ள முடியும். 

அப்பொழுது "ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.  (20:117
"நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.  (20:118)
"இன்னும் இதில் நீர் தாகிக்கவும், வெயிளில் (கஷ்டப்)படவும் மாட்டீர் (என்று கூறினோம்).  (20:119)
ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி "ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?" என்று கேட்டான்.  (20:120)
பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர் உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.  (20:121)
பின்னர் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான்.  (20:122)

பீஜே சொல்வது போல் வெறுமனே இறைவன் நிர்வாணமாக இருக்க மாட்டீர் என்று மட்டும் சொல்லவில்லை. ஆதம் தம்பதிகளே! இந்த சுவனத்தில் நீங்கள் பசியுடனோ, தாகத்துடனோ, வெளியில் கஷ்டப்பட்டுக் கொண்டோ இருக்கவேண்டியதில்லை என்றும் சொல்லும் இறைவன் நிர்வாணமாகவும் இருக்கமாட்டீர்கள் என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்? ஆதம் தம்பதிகளுக்கு சுவனத்தில் செய்து கொடுத்துள்ள வசதி வாய்ப்புகளை கூறுகின்றான். அந்த வசதி வாய்ப்புகளை அனுபவித்த நிலையில், ஆதம் ஹவ்வா தம்பதிகள் மாறு செய்ததால் அங்கே நிர்வாணமாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதில் அறிஞர் பீஜே குழம்புவதும்-குழப்புவதும் ஏன்? பீஜேயின் கூற்றுப்படி ஆதம் அலை, ஹவ்வா அலை ஆகியோருக்கு சுவனத்தில் நிர்வாணமே இருக்ககூடாது என்றால் அவர்கள் தாம்பத்தியத்திலும் கூட நிர்வாணம் இருக்கக் கூடாதா என்ற கேள்வி எழுமே! அதற்கு என்ன பதில் சொல்வார்? அவ்விருவருக்கும் தாம்பத்தியம் தடை செய்யப்பட்டது என்று கூறுவரா?

இதுபோக, ஆதம்-ஹவ்வா ஆடை அவிழ்ந்தது என்ற அறிஞர்களின் கருத்து தவறு என்று இன்று சொல்கிறாரே! அதே பீஜே அவர்கள், அல்ஜன்னத் டிசம்பர் 94 இதழில், 'நிர்வாணமாக குளிக்கலாமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது,

''ஆதம் ஹவ்வா இருவரும் தடையை மீறி விலக்கப்பட்டதை உண்டவுடன் அவர்களின் மறைவிடங்கள் வெளிப்பட்டன. நிர்வாணிகளாயினர்.உடனே சொர்க்கத்தின் இலைகளால் தங்களை மறைத்துக் கொள்ளலானார்கள் என்ற விபரம் 7 ;22 20;121 ஆகிய வசனங்களில் கூறப்படுகின்றது. மனிதர்கள் குறிப்பாக நபிமார்கள் தம் மறைவிடங்களை மறைத்துக் கொள்ளும் இயல்பினராகவே உள்ளனர் என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம். கணவன் மனைவி ஆகிய இருவர் மட்டுமே இருந்த நிலையில், வேறு எவரும் இல்லாத நிலையில் இறைவன் முன்னிலையில் வெட்கப்பட்டுக்கொண்டே ஆதமும் ஹவ்வாவும் தங்களை மறைந்துக் கொண்டனர்.'' என்று பதிலளித்துள்ளார்.

அதாவது இந்த பதிலில் ஏற்கனவே உறுப்பும் இருந்து, உணர்ச்சியும் இருந்து, உறுப்பின் தனித்தன்மைகளையும் உணர்ந்துள்ள மனிதன் ஒருவர் தான் கேட்கின்றார். நான் ஆடையின்றி குளிக்கலாமா என்று? உடனே அறிஞர் பீஜே, ஆதம்-ஹவ்வா அலை தம்பதியைப் பார்த்தீர்களா? அவர்கள் யாருமே இல்லாமல் தனித்திருந்த போதும், நிர்வாணமானவுடன் தங்களை மறைத்துக் கொண்டார்கள். இதுதான் மனித இயல்பு என்று கூறுகிறார். ஆனால் இன்றைக்கோ அல்ஜன்னத்தில் கூறியதற்கு மாற்றமாக, மனமுரண்டாக அடுத்தடுத்த மூன்று பரிமாணங்களைக் கண்டிருக்கிறார். இன்னும் எத்தனையோ?

சனி, 19 நவம்பர், 2011

அழைப்பு பணி: அத்துமீறும் அழைப்பாளர்கள்

மனிதன் இவ்வுலகில் தோற்றுவிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து மிருகங்களுக்கும், கால் நடைகளுக்கும் ஒப்பான கலாச்சாரத்தை அரங்கேற்றுகின்ற போது, அகிலங்களின் இரட்சகானகிய அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகின்ற போது அவனை உண்மை மனிதனாக, இறை திருப்தியையும், அருளையும் பெற்றவனாக மாற்றுவதற்காக அல்லாஹ் தனது மனித தூதர்களை வானவத் தூதர்கள் மூலம் தெரிவு செய்து அழைப்புப் பணி செய்வதற்காக அவர்களை அனுப்பி வைக்கின்றான்.
தஃவா (அழைப்பு)ப்பணி மகத்தான பணியாகும். மரணத்தின் பின்னர் ஸதகா ஜாரியாவை – நிலையான தர்மத்தைப்- பெற்றுத்தரும் இப்பணியை அல்லாஹ்வால் தெரிவு செய்யப்பட்ட நபிமார்கள், இறைத்தூதர்கள், அவர்களின் வழியை அறிந்த நன்மக்கள் செய்தார்கள்.

அல்லாஹ்தான் வானவர்களிலும், மனிதர்களிலும் இருந்து தூதர்கைளத் தெரிவு செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவனும், பார்ப்பவனும் (அல்ஹஜ். வச: 75) என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
இந்த மகத்தான பணி செய்யும் தாயிக்கள் தஃவாக் களத்தை கொலைக் களமாக, விமர்சனக் களமாக, பிற சகோதர முஸ்லிமின் மானத்தை போக்கும் களமாக, பித்அத் களமாக, இரு கருத்திற்கும் சாதானகமான மஸாயில்களைக் கூறி பிளவுக்களமாக மாற்றி அமைக்கின்றனர் என்பதை சம கால நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றது.

காடையர்கள் மயமாகிப் போன தஃவாக் களம்
நபிமார்கள் தமது சமூகத்திற்குப் பிரச்சாரம் செய்கின்ற போது அவர்கள் சார்ந்த சமூகத்தவர்களால் நோவிக்கப்பட்டார்கள். நையப்புடைக்கப்பட்டார்கள். அதுமாத்திர மின்ற அவர்கள் கொலையும் செய்யப்பட்டனர். இது பற்றி இஸ்லாமிய அழைப்பாளர்கள் நன்கு அறிவார்கள்.
இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுக்கும் பல அமைப்புக்கள் நவீன காலத்தில் களத்தில் இறங்கி இருக்கின்றன. இவற்றில் உள்ள சில அழைப்பாளர்கள் தம்மை முன்மாதிரி அமைப்பாக, பேணுதல் உள்ள அமைப்பாக, தக்வாவின் சின்னமாக சித்தரித்துக் கொண்டாலும் காடையர்களாக மாறி மற்றொரு சகோதர அமைப்பினைத் தாக்குவோராக, அவர்களின் சொத்துக்களைச் சேதப்படுத்துவோராக, இருக்கின்றனர். இதன் காரணமாக பலர் போலிஸ் நிலையங்களுக்கும், நீதி மன்றங்களுக்கும் சென்றுவருவேராக இருக்கின்றனர். இது தான் நபிமார்கள் செய்த தியாகமோ தெரியவில்லை.

தக்லீத் (தனிமனித துதி) மயமாகிப் போன தஃவாக்களம்
மத்ஹபுவாதிகளை மதம்மாறியோர் போன்று விமர்சித்தவர்கள் தமக்கென ஒரு கூட்டத்தை தக்கவைத்துக் கொள்வதில் அக்கறையுடன் செயல்படுவதைப் பார்க்கின்றோம். எல்லா மத்ஹபும் வழிகேடு, எனது மத்ஹப் மாத்திரம் சரி, நானே அறிஞன், நானே பொது முஃப்தி, எனது கூற்றே நூறுவீதம் சரியானது என்ற நிலையில் செயற்படும் ஒருவரின் பின்னால் ஆராய்ச்சி இல்லாத, கண்ணை மூடிக்கொண்டு செல்கின்ற குருட்டு பக்தர் கள் கூட்டம் ஒன்று குர்ஆன், சுன்னாவின் பெயரில் தக்லீத்வாதிகளாக மாறி, சிந்திக்கும் திறனற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்;.

தக்லீத்வாதிகளை விமர்சிக்கும் பல தவ்ஹீத் முகல்லித்கள் சீடி தாயிக்களாக, பிறரின் நாவில் பேசுபவர்களாக, கேள்விப்பட்டதை எல்லாம் நம்பும், பிரச்சாரம் செய்யும் தாயிக்களாக இருக்கின்றனர்.
சில வருடங்களுக்கு முன் தவ்ஹீத் தாயி ஒருவர் அல்குர்ஆன் குறிப்பிடும் ‘லஹ்முல் கின்ஸீர்” ‘பன்றியின் மாமிசம்” என்ற பொருளை வைத்துக் கொண்டு புதிய விளக்கம் சொன்னார். பன்றியின் மாமிசம் என்றுதான் குர்ஆன் குறிப்பிடுகின்றது. அதன் பாகங்கள் பற்றிக் கூறவில்லை, அல்லாஹ் ஏன் அப்படிச் சொன்னான் தெரியுமா? விஞ்ஞானிகள் மனிதனுக்கு பன்றியின் இதயம் மாத்திரம் பொருந்திப் போவதாக கண்டு பிடுத்துள்ளனர்.

பன்றியின் இதயத்தை வருங்காலத்தில் மனிதனுக்குப் பொருத்திக் கொள்ளலாம் என்பதை உணர்த்தவே பன்றியின் மாமிசம் என்று கூறப்பட்டுள்ளது என்றார். அத்துடன், இப்படி ஒரு செய்தியை பிற்காலத்தில் உலகுக்குச் சொல்லத்தான் என்றார். அதனுடன் நிறுத்திக் கொண்டாரா என்றால் இல்லை பன்றியின் ஏனைய பாகங்களைப் பேணுதல் அடிப்படையில் நாம் விட்டுவிட வேண்டும் என்றும் தொடர்ந்தார். இவரின் ஆச்சரியமிக்க ஆய்வுதான், அவரது மத்ஹப்வாதிகளுக்கு பூரிப்பை உண்டு பண்ணியது.
இதையும் சரி என்று நம்பி பிரச்சாரம் செய்த, அவரது கருத்துக்கு வக்காலத்து வாங்கிய அவரின் பக்தர்கள் இன்றும் உயிருடன் இருக்கின்றனர்.
ஆனால் அவர் இலங்கை காலியில் ஒரு பயான் நிகழ்ச்சியில் அதை மழுப்பிப் பேசி, வாபஸ் ஆகாமல் வெளியேறினார். அதற்கு முன்னர் இதை நாம் தவறு என்று சொன்னபோனது இந்த மாபெரும் அறிஞனா தவறாகச் சொல்லுவார் என்றனர் அவரின் வாய்வழி நடப்போர்.
இதைத்தான் ஒரு தக்லீதில் இருந்து மற்றொரு தக்லீதுக்கு மாறுவது என்பார்கள். இந்த தக்லீத்வாதிகள் இவர் ஒரு பத்வாவைச் சொல்லும் வரை பார்த்திருந்து அவர் சொன்ன பின்னால் முஜ்தஹித்களாக மாறி சமுதாயத்தில் சக்கைப்போடு போடுவார்கள்.

அவசியமற்றதை அவசியமாக்கும் தாயிக்கள்
தாயிக்கள் எனப்படுவோர் சமூகத்திற்குத் தேவையான அதி முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை இனம் கண்டு முன் வைக்க வேண்டும். இதையே இறைத் தூதர்கள் செய்தார்கள். அதுவும் முஸ்லிம்கள் மத்தியில் தஃவாச் செய்யப்படுகின்ற காரணத்தால் ஒரு சமூகத்தில் உள்ள மக்களின் நிலை பற்றியும், அங்கு நடை பெறும் பாவங்கள் பற்றியும், அவற்றின் தராதரம் பற்றியும் அறிந்திருப்பது அவசியமாகும்.

அதே போன்று மத்ஹபு நூலில் இவ்வாறு உள்ளது. சர்வதேசப் பிறைதான் சரி, லோகல் தவறு, ஸகாத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை, தங்க வளையல்கள் அணிவது ஹராம், குத்பா மிம்பர் படிகள் இரண்டுதான் இருக்க வேண்டும், காஃப் அத்தியாயம் ஓதாமல் ஜும்ஆச் செல்லுபடி அற்றது, இரண்டாவது ஜமாஅத் ஒரு பித்அத், ஜனாஸாத் தொழுகையில் இருகைகளையும் உயர்த்துவது பச்சை பித்அத், பெண்கள் முகத்தை மூடுவது ஹராம், இப்படி பல விசயங்களை பொதுமக்கள் மன்றத்தில் பேசி பொது மக்களை சீரழிக்கும் தாயிக்களையும் பார்ப்பீர்கள்.

அல்லாஹ்வை சரியாக வணங்காத மக்கள் நூஹ் நபி (அலை) அவர்களின் காலம் முதல் நபி (ஸல்) அவர்கள் காலம் வரை வாழ்ந்த மக்களில் இருந்தார்கள். அது பற்றி அழுத்தம் பிரயோகித்த நபிமார்கள், அந்த சமுதாயத்தில் பரவலாகக் காணப்பட்ட கொடிய பாவங்களில் இருந்து மக்களை தடுப்பவர்களாகவும் இருந்தார்கள்.
இதற்கு ஷுஐப் நபியின் வரலாற்றையோ, லூத் நபியின் வரலாற்றையோ பார்க்க முடியும். அளவு நிறுவையில் செய்யப்பட்ட அநீதியை ஷுஐப் (அலை) அவர்கள் கண்டித்தார்கள், ஓரினச் சேர்க்கையில் மூழ்கி இருந்த தனது சமுதாயத்தவரை நபி லூத்(அலை) அவர்கள் கண்டித்ததைப் பார்க்கின்றோம். அதே போன்று அனைத்து நபிமார்களின் வரலாறுகளையும் பாருங்கள்.

முஆதே! நீ வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (அதிகமாக வாழும்) எமன் தேசம் செல்கின்றாய். அவர்களை முதல் முதலாக லாயிலாஹ இல்லல்லாஹ், நான் அல்லாஹ் தூதர் என்ற கோட்பாட்டின் பக்கம் அழைக்க வேண்டும் என்று நபி(ஸல்) முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களுக்கு கூறியதைப் பார்த்தாலும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததையே பிரச்சாரத்தின் அடிப்படையாகக் கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.

பண்புகள் பாழடிக்கப்படும் பணிக்களம்
இஸ்லாமிய அழைப்புப் பணி அல்லாஹ்வின் நேசர்களான நபிமார்கள் அவனது வழிகாட்டலின் பேரில் செய்த உன்னதமான பணியாகும். இப்பணி அழகிய பண்புகளைக் கொண்டதாக இருக்கின்ற போது தான் தராதரமும், மேன்மையும் அடைகின்றது. இல்லை எனில் களத்தில் இருந்து மக்கள் வெருண்டோடுவதையும், தாயிக்கள் மக்களால் விமர்சிக்கப்படுவதையும் முடிவில் காண முடியும்.

ஹிர்கல் மன்னர் அபூ சுப்யான் அவர்களிடம் அந்த முஹம்மத் எதை ஏவுகின்றார் எனக் கேட்ட போது உங்கள் மூதாயதையர் கூறுவதை விட்டு விடும்படியும், நல்ல பண்பாடுகளைக் கொண்டும், உறவினர்களுடன் இணைந்து வாழும்படியும் கட்டளை இடுகின்றார் என அபூ சுப்யான் (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னர் கூறினார் (புகாரி).
அகீதா (அடிப்படை நம்பிக்கை), அக்லாக் (பண்பாடுகள்) ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் மக்களை அழைத்தார்கள் என்பதை ஏட்டுச் சுரக்காயாக அறிந்து வைத்துள்ள பல தாயிக்களையே தஃவாக்களத்தில் பார்க்கின்றோம்.

அல்லாஹ்வின் தூதரின் அமைப்பில் அடையாளம் காணப்பட்ட முனாபிக்கள், அடையாளம் காணப்படாத முனாபிக்கள் என இரு சாராரும் இருந்துள்ளனர். பெயருக்கு தோழர்கள் என இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அப்துல்லாஹ் பின் உபை என்ற முனாபிக்களின் தலைவன் மரணித்த போது அவனது இறுதிக் கடமையில் நபி (ஸல்) அவர்கள் கலந்திருக்கின்றார்கள். தொழுகை நடத்த முயற்சியும் செய்தார்கள். அல்லாஹ் முனாபிக்களுக்கு தொழுகை நடத்துவதோ, பிரார்த்திப்பதோ கூடாது என்று கட்டளையிட்டதும் அதிலிருந்து விலகிக் கொண்டார்கள். (புகாரி).

இஸ்லாமிய அமைப்புக்களைச் சேர்ந்த அறிஞர்கள் பலர் கலந்து கொள்ளும் கருத்தரங்குகளில் தவ்ஹீத் மௌலவி கலந்து கொள்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஆனால் தென்னிந்திய இஸ்லாத்தில் அது ஹராமாக்கப்பட்டிருக்கின்றது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற புதிய அமைப்பில் உள்ளவர்கள் தாங்கள் ஏற்கனெவே இருந்த அமைப்பைப்பற்றி பொதுக்குழு கூட்டத்தில் இவ்வாறு கூறினர். இவர்கள் பிரபலமான தாயி, இடம் இருந்து பிரிந்தே புதிய அமைப்பை தோற்றுவித்தனர் என்பதை அனைவரும் அறிவர்.

வணக்கங்களில் குறை செய்யும் தஃவாக் களம்.
தஃவாக்களத்தின் சோதனை மிகுந்தது என்று இதை வர்ணிக்க முடியும். நபி(ஸல்) அவர்கள் இரவு வணக்கம் செய்யுமாறு ஆரம்பத்தில் கட்டளையிடப்பட்டிருந்தார்கள். ஒரு வருடம் அதை அவர்களும், அவர்களின் தோழர்களும் கடைப்பிடித்தார்கள் (நூல் : முஸ்லிம்).
தாயிக்கள் எனப்படுவோர் தமது பண்பாடுகளை அல் குர்ஆனில் இருந்தும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் இருந்தும் படிக்கின்ற போதுதான் இரவு வணக்கத்தில் இன்பம் காண்பார்கள். ஒரு பெரியார் ஒரு இரவில் பல முறை குர்ஆனை ஓதினார் என்பதையும், பல ரகஅத்துக்களைத் தொழுதார் என்பதையும், தஸ்பீஹ் தொழுகையையும் இன்னும் ஆதரமற்ற செயற்பாடுகளையும் இவ்வாறு செய்யலாமா என நியாயமாக விமர்சிக்கும் தாயிக்கள் நான் எத்தனை வசனங்களை, அத்தியாயங்களை ஓதி இருக்கின்றேன். நபிலான வணக்கங்களான ழுஹா, இரவு வணக்கமாகக் கொள்ளப்படும் தஹஜ்ஜுத், மற்றும் வித்ர், தொழுகின்றேனா என தம்மைப் பற்றி ஒரு போதும் கேள்வி எழுப்பி இருப்பார்களோ தெரியவில்லை.

குறைகளைத் தேடும் தாயிக்கள்
ஒரு மனிதனின் மானம், மரியாதை, அந்தஸ்து யாவற்றையும் புனிதமானது என இஸ்லாம் கூறி இருக்கின்றது. கலிமாவை இறை திருப்தியை நாடிக்கூறிய அனைவரின் மானம் மரியாதை என்பது இதன் விளக்கமே தவிர தவ்ஹீத் அடிப்படையைக் கொண்ட தாயிக்களின் மானம், மரியாதை என்பது பொருள் அல்ல.
சகோதர முஸ்லிமின் மானத்தை காற்றில் பறக்கவிடுவதையும், சீடிக்களாக, நோட்டீஸ்களாக வெளியிடுவதையும் தஃவாப் பாதையில் ஒரு மைல் கல்லாக நினைத்து செயற்படும் தாயிக்கள். இருக்கின்றார்கள். எல்லை மீறிச் (சிந்திப்பவர்கள், செயற்படுபவர்கள்) அழிவார்கள் (முஸ்லிம்) என நபி (ஸல்) அவர்கள் கூறியதை உண்மைப்படுத்தும் குர்ஆன் சுன்னாவைப் போதிப்பதாகக் கூறுவோரின் களம் மாற்றம் பெற்றுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.
வளவளப்பவர்கள் (பெரும் பேச்சு பேசுவார்கள்) அழிவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது இவர்களைத்தான் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

சத்தியத்தை அசத்தியமாக்கும் தாயிக்கள்
சத்தியத்தை உரைப்பது ஆலிம்களின் கடமை. சத்தியம் வாழ வேண்டும் என்ற எண்ணம் ஒரு ஆலிமின் இரத்தத்தில் ஊறிப்போன பண்பாக இருக்க வேண்டும். அறிவை மறைப்பவனுக்கு மறுமையில் அல்லாஹ் நரக நெருப்பினால் கடிவாளம் இடுவான் (இப்னு மாஜா). என நபி (ஸல்) அவர்கள் கூறி இருப்பதை ஆலிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாட்டில் ஷாஃபி மத்ஹபை பாதுகப்பது கடமை என்பது போலவும், சத்தியம் எக்கேடு கெட்டாலும் சரி என்ற நிலையிலும் வாழும் பல ஆலிம்களை சமூகத்தில் காண முடிகின்றது. மற்றொரு புறத்தில் தென்னிந்தியாவின் பிரதமப் பேச்சாளர் ஒருவரின் கருத்தில் குறை கண்டு ஆதராத்தின் அடிப்படையில் சுட்டிக்காட்டினால் சீ, சீ இதை நாம் நமக்குள்தான் பேசிக் கொள்ள வேண்டும், மற்றவர்கள் என்ன சொல்வார்கள், இவர்களுக்குள்ளும் பிளவா என்று அவரின் பிரியர்கள் கூறுவதையும் காண்கின்றோம்.
அந்த தாயீ, ஒரு ஜமாத்தைப் பல கூறுகளாக்கி பத்து பேரை வைத்துக் கொண்டு நமது கிளை என்று பத்திரிகையில் பூதாகரமாக விளம்பரம் போடுவதைப் பொறுத்துக் கொள்வார்கள். இதுதான் தக்லீதின் உச்சகட்டம் என்பதை இனியாவது இவர்கள் உணரட்டும்.

பித்அத்தை நியாயப்படுத்தும் தாயிக்கள்
அனைத்து பித்அத்களும் (புதிய வழிமுறைகளும்) வழிகேடு என்றும், யார் நமது மார்க்கத்தில் இல்லாததைச் செய்கின்றாரோ அவரது செயல் நிராகரிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம், திர்மிதி)
ஸஹீஹான ஹதீஸ்தான் எனது மத்ஹப் என இமாம்கள் அடித்துக் கூறி இருந்தும் ஊரில் செய்கின்றார்கள், உலகத்தில் செய்கிறார்கள், நல்லது தானே என்றெல்லாம் காலத்தை கடத்தும் ஆலிம்கள் கூட்டம் மக்களுக்கு பித்அத்தையே அரங்கேற்றும் நிலையைப் பார்க்கின்றோம். கத்தம், பாத்திஹா, மௌலித், தாயத்து. தகடு என்று மக்களை ஏமாற்றி சீரழிப்பதைப் காண்கின்றோம்.

உலக விவகாரத்தை மார்க்கமாக்கும் தாயிக்கள்
முஸ்லிம்கள் மார்க்கமாக இல்லாமல் ஒரு பழக்கமாகக் கொள்ளும், மார்க்கம் தடை செய்யாத நடைமுறைகள் பலதை நாம் அறிவோம். ஜும்ஆவுக்காக ஜுப்பா அணிவது, தொப்பி போடுவது போன்ற அம்சங்களைக் குறிப்பிட முடியும்.
இது விஷயத்தில் தாயிக்கள் பித்னாக்களமாக மாற்றி அமைப்பதைப் பார்க்கின்றோம். காபிர் ளுக்கு இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்து கடிதங்கள் எழுதுகின்ற நேரம் முத்திரை பதிக்கப்படாத கடிதங்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை எனக் கருத்துக் கூறப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் அதை அங்கீகரித்தார்கள். (நூல்: புகாரி)
இந்த சாதாராண விஷயத்தைக் கூட தஃவாக்களத்தில் பிரயோகிக்கத் தெரியாத தாயிக்களால் தஃவாக்களம் துவம்சம் செய்யப்படுமா? அல்லது முன்னேற்றம் அடையுமா என்று சிந்தித்துப் பாருங்கள்.

இயக்கத்தை இஸ்லாமாக்கும் தாயிக்கள்
தனிமனிதன் புகழ்பாடி அழியும் ஒரு கூட்டம், தான் இருக்கும் இயக்கமும் அதன் சித்தாந்தமுமே சரி என வாதிடும் மற்றொரு கூட்டம், எனது அமீர் சொல்வதை அப்படியே பின்பற்றுவேன், எனது மர்கஸில் சொல்லப்பட்டதை அப்படியே நம்புவேன் என்று வாதிடும் மற்றொரு கூட்டம், சேகு நாயகம், வாப்பா நாயகம் ஆகியோரின் கூற்றே வேதவாக்கு என்று நம்பும் பிறிதொரு கூட்டம். எகிப்தின் ஆலிம்களை அச்சாணிகள் போல் நம்புகின்ற மற்றொரு கூட்டம், இவ்வாறு தஃவாக்களத்தை துவம்சம் செய்யும் பல கூட்டங்களை களத்தில் இனம் காண முடிகின்றது.
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொன்னதை நம்பினேன், அதன்படி நடப்பேன் என்ற கூட்டத்தில் இணையாத அனைத்துக் கூட்டமும் வழிகேட்டின், பித்அத்தின் மறுவடிவங்களாகவே இருக்கும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
நன்றி- எம்.ஜெ.எம். ரிஸ்வான் மதனி