செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பித்ரா விநியோகம்; தொடர்ந்து மார்க்க கடமையில் விளையாடும் அண்ணன் ஜமாஅத்!

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

''நீங்கள் எந்த வகைக்கு வழங்குகிறீர்களோ அந்த வகைக்கு மட்டுமே செலவிடப்படும்'' இது ஒவ்வொரு வசூல் வேட்டையின் போதும் அண்ணன் ஜமாஅத் அடிக்கும் ஸ்டான்டாகும். ஆனால் உண்மை நிலவரமோ பெரும்பாலும் நேர்முரனாகத் தான் இருக்கும்.

சுனாமி நிதியில் தனது இயக்கத்தவருக்கு  சீருடை, உணர்வுக்கு ஒரு தொகை, இவ்வாறாக சுனாமித் தொகையில் ஒரு பங்கு பினாமியாக போனதாக பரவலாக குற்றச்சாட்டு அந்த நேரத்தில் எழுந்ததை மறந்திருக்க முடியாது. அதற்கான ஆதாரம்  இங்கே; https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMZPWAfeDkVHeOPA8VCXhbiwCewyDg9ID7D92E9zL_R1OP3RinyYraDvzfHGUkFVZlcf8YmS9UDNKSwsHTUxs5RFsLAZf5lx9N7OIqkRr0-LL2DTGXS6uIVpxOFiJoEBIB9cNQw_o3a9M8/s1600/sunami_unarvu_23-03-2006.JPG

அடுத்து ஃபித்ரா வசூலில்  ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகை மீதமாகி விட்டது. எனவே தலைமையால் நடத்தப்படும்  தாஃவா சென்டருக்கு ஒதுக்கப்பட்டது என்று அறிவிப்பு வரும். ஃபித்ரா தொகையை தாஃவா சென்டருக்கு எப்படி ஒதுக்கலாம் என கடந்த காலங்களில் விமர்சனங்கள் எழுந்தவுடன், கடந்த ஆண்டு உஷாராக வேறு வழியை கையாண்டு மீதமானஃபித்ரா தொகையை ஜகாத் நிதியில் 
சேர்த்தது அண்ணன் ஜமாஅத்.

அப்போது நாம், ஃபித்ரா தொகையை ஜக்காத் நிதியில் சேர்க்கலாம் என்பதற்கு இவர்கள் ஆதாரத்தை  வைக்க வேண்டும். என்று கேட்டிருந்தோம். அதற்கு அண்ணன், ''நாங்க இப்பிடித்தான் செய்வோம்; விரும்புனா எங்கள்ட்ட குடுங்க; இல்லனா எங்கள ஆளை விடுங்க'ன்னு சொன்னதை தவிர வேறு பதில் சொல்ல முடியவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஃபித்ரா கணக்கு வெளியிட்டுள்ள அண்ணன் ஜமாஅத், 82 ,067 ரூபாய்கள் மீதமாகி விட்டதாகவும் அதை ஜகாத் நிதியில் சேர்த்து விட்டதாகவும் அறிவித்துள்ளது. அதாவது சுமார் 1000௦௦௦ பேருடைய பித்ரா தொகையை  உரியவர்களுக்கு விநியோகிக்காமல் அவர்களின் மார்க்க கடமையோடு விளையாடியுள்ளது. சொல்ல முடியாது; இப்போதும் நாணயமதிப்பு பட்ட்யலிட்டு விஷயத்தை திசைதிருப்ப  
அண்ணன் கால்குலேட்டர் சகிதம் வந்தாலும் ஆச்சர்யமில்லை.
 
நன்றி; அப்துல் முஹைமின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக